<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7180711</id><updated>2012-01-01T22:21:18.472+01:00</updated><title type='text'>எழிலுலா</title><subtitle type='html'>ஐரோப்பியப் பயணக் கட்டுரைகள்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>37</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-113148378859166337</id><published>2005-11-08T22:01:00.000+01:00</published><updated>2006-10-09T08:32:05.930+02:00</updated><title type='text'>ஹாலந்து அனுபவம்</title><content type='html'>இந்தப் பதிவில் ஹாலந்து நாட்டில் சுற்றிப்பார்த்த அனுபவங்களைப் பற்றி நான் கூறப்போவதில்லை. ஆம்ஸ்டர்டாம் நகரில் அமைந்துள்ள ஒரு முப்பரிமாணத் திரையரங்கில் நடைபெறும் ஹாலந்து அனுபவம் (Holland Experience) என்ற முப்பரிமாணக் காட்சி (3D) பற்றியே இப்பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்ஸ்டர்டாம் நகரில் கண்களுக்கு விருந்தளிக்கும் பல்வேறு இடங்கள் இருப்பினும் இந்த முப்பரிமாணக்காட்சி என்னை மிகவும் கவர்ந்தது. முப்பதே நிமிடங்கள் நடைபெறும் இந்தக் காட்சிக்கு அனுமதி பெற்று திரையரங்கில் சென்று அமர்ந்தீர்களேயானால் ஒரு வித்தியாசமான அனுபவம் உறுதி. ஆம்ஸ்டர்டாம் நகரின் மையத்தில் அமைந்துள்ள திறந்தவெளிச் சந்தைக்கு அருகில் அமைந்துள்ளது இந்தத் திரை அரங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/HOLLAND_EXPERIENCE.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரங்கினுள் நுழைந்தவுடன், வழக்கம் போல் முப்பரிமாணக்காட்சி காண உதவும் கண்ணாடியினை வழங்கினர். அரங்கின் இருக்கைகள் விமானத்தின் இருக்கைகள் போல் வடிவமைக்கப்பட்டிருந்தன.வசதியாக இருக்கையிலமர்ந்து கண்ணாடியை அணிந்து கொண்டவுடன் சிறிது நேரத்தில் இருள் கவிழ்ந்து திரை ஒளிர்ந்தது. விமானம் ஒன்றைத் திரையில் காட்டினார்கள். விமானத்தின் உறுமல் சத்தம் நாம் உணரும் வண்ணம் அரங்கத்தின் அதிர்வுகள் எழுப்பப்பட்டன. விமானத்தில் அமர்ந்தது போல் உணர்ந்தோம்.விமானி எழுப்பும் அறிவிப்பு அடுத்ததாய்க் கேட்டது. "பயணிகளே, இன்னும் சிறிது நேரத்தில் நாம் ஆம்ஸ்டர்டாம் நகரினை அடைய இருக்கிறோம். உங்களது ஹாலந்துப் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்" என ஒலிபெருக்கிக் குரல் சொல்லியது. விமானம் தரையைத் தொட்டதும் எழுப்பும் அதிர்வை அரங்கினுள் உணர்ந்தோம். விமானம் ஓடுபாதையில் ஓடி, வேகம் குறைந்து நின்றதும், அரங்கமும் நிறுத்த நிலைக்கு வந்தது. அது ஒரு நகரும் திரையரங்கு. இடப்புறமோ, வலப்புறமோ , முன்னோ , பின்னோ திருப்பும் வண்ணம் அமைந்த நகர் அரங்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/hollandexperience-2.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹாலந்து நாட்டின் எல்லாப் பகுதிகளையும் ஏறக்குறைய முப்பது நிமிடங்களில் சுற்றிக்காட்டினார்கள் என்றே சொல்லலாம். ஆம்ஸ்டர்டாம் நகரின் கால்வாய்களில் படகு சவாரி செய்வது போல் திரையில் காட்சிகள் தெரிய படகில் செல்வது போல் உணர்ந்தோம். கால்வாய்களைக் கடக்க அமைக்கப்பட்டிருந்த எண்ணற்ற வளைவுப் பாலங்களைப் படகு கடந்து செல்கிறது. படகு திரும்பி வளைந்து செல்கையில் அரங்கமும் சற்று வளைந்து கொடுத்து படகில் திரும்பிய உணர்வினை அளித்தது. ஹாலந்து நாட்டின் அரச பரம்பரையின் அரசி நம்மை நோக்கிக் கையசைக்கிறார். வண்ண உடை அணிந்த சின்னஞ்சிறு குழந்தைகள் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றன. கால்பந்து மைதானத்தில் சிறார்கள் விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள். சிறுவன் உதைத்த பந்து திரையை விட்டு வெளியில் வந்து நம் மீது மோதுகிறது. ரோட்டர்டாம் நகரின் துறைமுகங்களில் கப்பல் போக்குவரவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கே பறக்கும் பறவை விர்ரென்று அரங்கத்தில் புகுந்து ஒலியெழுப்பிச் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்ஸ்டர்டாம் நகரின் சுற்றுலாச் சின்னங்கள் திரையில் தெரிகின்றன. புகழ் பெற்ற ரிக்ஸ் அருங்காட்சியகம், ஹாலந்து நாட்டின் எங்கு சென்றாலும் நீக்கமற நிரைந்திருக்கும் காற்றாலைகள் (Wind mills), புகழ் பெற்ற பீங்கான் காலணிகள் என்று வரிசையாகக் காட்சிகள் விரிந்தன. உலகப் புகழ் பெற்ற டூலிப் தோட்டம் அமைந்துள்ள கியீக்னாஃப்-க்குள்(Keukenhof) அடுத்து நுழைந்தோம். வண்ண வண்ண டூலிப் மலர்கள் திரையில் தெரிகையில் அரங்கினுள்ளும் மலர்களின் சுகந்த வாசம் வீசியது. மலர்களின் நடுவே நடந்த உணர்வு. பயணம் மதுரடாமிற்குத் தொடர்ந்தது. ஹாலந்து நாட்டின் நினைவுச் சின்னங்கள் எல்லாவற்றினையும் ஒரே இடத்தில் சிற்றளவாக்கம் செய்து (Miniature) வைத்திருக்கிறார்கள். மதுராடாம் (Maduradam) என்று அந்த இடத்துக்குப் பெயர். உலகப் பிரச்சினைகளை விசாரிக்கும் நீதிமன்றம் அமைந்துள்ள தி ஹேக் (The Hague) நகரில் தான் இந்த மதுராடாம் அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரெனறு கிராமப்புறம் நோக்கி ஒரு வண்டியில் ஏறிப் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். பசுமையான புல்வெளிகளும் தோட்டங்களும் கண்ணில் விரிகின்றன. அருவி ஒன்றில் நீர் வழிந்து கொண்டிருக்க , தட தடவென்று ஒரு பெண் நடுவில் ஓடுகிறாள். அருவி வழிவதையும் , பெண் ஓடுவதையும் நிஜமாகவே அமைத்திருந்தார்கள். திரையில் தெரிந்த பிம்பமல்ல அது.&lt;br /&gt;&lt;br /&gt;முப்பது நிமிடங்கள் நொடியில் பறந்து விட்டன. முப்பது நிமிடத்திற்குள் ஹாலந்து நாடு முழுமைக்கும் ஒரு குற்றுலா சென்று வந்த உணர்வு. ஹாலந்து முழுவதும் சுற்றிப்பார்க்கு முன் இந்தக் காட்சியைப் பார்த்து விட்டுப் பின்னர் பயணம் செய்ய வேண்டிய இடங்களை முடிவு செய்யலாம். அல்லது சுற்றிப்பார்க்க நேரமில்லாதவர்கள் இந்தக் காட்சியை மட்டுமாவது கண்டு செல்லலாம். "ஹாலந்து அனுபவம்" தவிர, பிற முப்பரிமாணத் திரைப்படங்களும் விவரணப்படங்களும் இந்த அரங்கில் வழக்கமாக நடைபெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள் உதவி: http://www.holland-experience.nl/&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-113148378859166337?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/113148378859166337/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=113148378859166337' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/113148378859166337'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/113148378859166337'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2005/11/blog-post.html' title='ஹாலந்து அனுபவம்'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-112853509900467292</id><published>2005-10-05T19:58:00.000+02:00</published><updated>2005-10-05T19:58:19.013+02:00</updated><title type='text'>ஓஸ்லோ-விஜிலன்ட் பூங்கா-2</title><content type='html'>விஜிலன்ட் பூங்கா சுமார் எண்பத்தியிரண்டு ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள்ளேயே எல்லாச் சிற்பங்களும் அமைந்திருக்கின்றன.மொத்தமாக 162 சிற்பங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பூங்காவினை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம். நுழைந்தவுடன் எதிர்ப்படும் பெரிய நுழைவாயில், அதனைக் கடந்து ஐம்பது மீட்டர் நடந்து சென்றால் வரும் பாலம், நீரூற்று, ஒரே கல்லினால் ஆன உயரமான தூண் மற்றும் வாழ்க்கைச் சக்கரம் எனப்படும் வட்டச் சிலை.&lt;br /&gt;&lt;br /&gt;கிரானைட்டினாலான உயர்ந்த நுழைவாயிலைக் கடந்தவுடன் வலப்புறம் குஸ்தாவின் சிலை அமைக்கப்பட்டிருப்பதை ஏற்கனவே கண்டோம். அதனைக் கடந்து செல்லுங்கள். கோடை நேரத்தில் நீங்கள் சென்றால் இருபுறமும் பச்சைப்பசேலெனப் புல்வெளி வழி அமைத்துக் கொடுக்கும். குளிர்காலத்தில் சென்றீர்களேயானால் வெள்ளைப் பனி உங்களுக்குக் கம்பளம் விரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/bridge.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாலத்தின் இருபுறமும் அமையும் தடுப்புச் சுவர்களில் ஏராளமான வெண்கலச் சிலைகள். மொத்தம் ஐம்பத்தெட்டுச் சிலைகள். இவற்றுள் பெரும்பாலானவை சிறுவர்களின் சிலைகள். கிரானைட்டில் அமைந்த இச்சிலைகள் சிலவற்றில் வெண்கலத்தாலான வளையமும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/bridge2.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவர்கள் சிலை தவிர ஆண், பெண் உறவு நிலை, தந்தையும் குழந்தையும் விளையாடும் மகிழ்வு நிலை, குழந்தையைத் தூக்கிக் கொண்டு மகிழும் தாயின் பூரிப்பு நிலை எனப்பல்வேறு நிலைகளில் சிலைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/bridge3.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; ஒரு காலை மட்டும் லேசாக உயர்த்திக் கோபமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனின் சிலை முக்கியமானது. சினங்கொண்ட சிறுவன் (Sinnataggen) எனப்பெயர் பெற்ற இச்சிலை வித்தியாசமாய் அமைந்து பலரையும் கவர்ந்து பூங்காச் சிலைகளுள் முக்கிய இடம் வகிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/angryboy.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வட்ட வடிவ வளையத்தினுள் அமைக்கப்பட்டிருக்கும் ஆண்-பெண் சிற்பங்கள் இறவா நிலையைக் குறிக்கும் (Wheel of Eternity) சிறப்புச் சிற்பங்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/wheel-of-eternity.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாலத்தைக் கடந்து சென்றவுடன் எதிர்ப்படுவது ஒரு நீரூற்று. ஆறு பெரிய மனிதச் சிற்பங்கள் ஒரு பெரிய தட்டை ஏந்திப்பிடித்துள்ளனர். அந்தத் தட்டிலிருந்து நீர் வழிவது போல் அமைக்கப்பட்டிருக்கின்றது இந்த நீரூற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/fountain-1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூங்காவில் முதன் முதலில் அமைக்கப்பட்ட சிற்பங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள். ஓஸ்லோ நகரின் பாராளுமன்றத்துமுன் இந்நீரூற்றினை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாம். பின்னர் அத்திட்டத்தினை மாற்றி பூங்காவில் இந்த நீரூற்று வடிவமைக்கப்பட்டது. நீரூற்றைச் சுற்றிலும் மரமும் மனிதர்களும் சேர்ந்த சிற்பங்கள் அமைந்துள்ளன. இரண்டு மீட்டர் உயரத்திற்கு வளர்ந்த இருபது சிற்பங்கள் மனித வாழ்வின் தொடக்கம் முதல் முடக்கம் வரை நிகழும் நிகழ்வுகளைச் சித்தரிக்கும் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கை மரம் (Tree of Life) என்றழைக்கப்படுகின்றன இந்தச் சிற்பங்கள். இயற்கையோடு இணைந்த மனித வாழ்வை இச்சிறபங்கள் வெளிப்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீரூற்றைக் கடந்து பூங்காவின் உயரமான பகுதியில் ஏறினால் தெரிவது ஒரே கல்லினால் அமைக்கப்பட்ட தூண் (Monolith). மிகப்பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்ட இந்தத் தூண் சுமார் பதினைந்து மீட்டர் உயரம் உடையது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/monolith-3.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்ததூணில் 121 உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டும் அணைத்துக்கொண்டும் நெருக்கமாய் அமைந்த சிற்பங்கள். மனித வாழ்வின் மறு பிறப்பு, வாழ்வின் போது படும் துயரங்கள், போராட்டம், தளைகளிலிருந்து விட்டு விடுதலை ஆகி இறைவனடி சேர எடுத்துக் கொள்ளும் முயற்சி போன்றவற்றைச் சித்தரிப்பதாய் விஜிலன்ட் இந்தத் தூணை வடிவமைத்தாராம். 1925-ல் வடிவமைக்கப்பட்ட இந்தத் தூணை நிர்மாணிக்கப் பல வருடங்கள் ஆனது. விஜிலன்ட் இறப்பதற்கு முன் 1943-ல் இந்தத் தூண் முழுமை பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தூணைச் சுற்றிலும் பெரிது பெரிதாய் அமைந்த கிரானைட் சிற்பங்கள். இவையும் மனித வாழ்க்கையச் சித்தரிப்பவையே. பெரிய தூணின் அருகே செல்ல அமைந்த படிகளை சுற்றிலும் இந்தச் சிற்பங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஒன்றுக்கு மேற்பட்ட சிற்பங்கள் அமைந்துள்ளன. மொத்தமாய் 36 குழுக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/monolith-1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாயின் முதுகில் ஏறிச் சவாரி செய்யும் குழந்தைகள், தந்தையின் அரவணைப்பிலிருக்கும் குழந்தைகள், ஆணும் பெண்ணும் தழுவிக்கொண்டிருக்கும் காதல் நிலை, குழந்தைகள் மட்டும் கூடிக் குதூகலிக்கும் சிற்பங்கள், வயதான நிலையில் ஆணும் பெண்ணும் அடையும் துயர நிலை என்று வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளைப் படம் பிடிக்கும் வண்ணம் அமைந்திருக்கின்றன இச்சிற்பங்கள். மலைக்க வைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/monolith-2.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தூணைக் கடந்து படிகளில் இறங்கித் தொடர்ந்து சென்றால் இறுதியாய் வரவேற்பது "வாழ்க்கைச் சக்கரம்" (Wheel of Life) என்றழைக்கப்படும் வளைய வடிவச் சிற்பம். விஜிலன்ட் பூங்காவின் இறுதிச் சிற்பமாய் , தன்னந்தனியே அமைந்திருக்கிறது இச்சிற்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/wheel-of-life.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை , மூன்று சிற்பங்களும் வளைந்துகொண்டு ஒன்றையொன்று பிடித்துக் கொண்டு , சிற்பங்களால் செய்த ஒரு மாலை போல் அமைந்திருக்கின்றது. இப்பூங்காவின் அமைப்பினை ஒரே வார்த்தையில் விளக்கும் வண்ணம் (ஜனனம் முதல் மரணம் வரை) இச்சிற்பத்தை விஜிலன்ட் அமைத்தாராம். வெண்கலத்தாலானது இச்சிற்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓஸ்லோ செல்பவர்கள் இப்பூங்காவினைத் தவற விடுவதில்லை. கலை நேர்த்தியுடன் அமைக்கப்பட்ட இச்சிற்பங்களைக் காண வாய்ப்புக் கிடைத்தால் நழுவ விடாதீர்கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-112853509900467292?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/112853509900467292/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=112853509900467292' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/112853509900467292'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/112853509900467292'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2005/10/2.html' title='ஓஸ்லோ-விஜிலன்ட் பூங்கா-2'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-111930312870484455</id><published>2005-06-20T23:32:00.000+02:00</published><updated>2005-06-20T23:33:17.600+02:00</updated><title type='text'>ஓஸ்லோ-விஜிலன்ட் பூங்கா-1</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/vigiland-2.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓஸ்லோ(Oslo) - நார்வே நாட்டின் தலைநகரம். ஓஸ்லோ நகரில் காண வேண்டிய இடங்கள் நிறைய இல்லை என்றாலும், அங்கிருக்கும் விஜிலன்ட் சிற்பப் பூங்கா (Vigeland Sculpture Park) கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலாச் சின்னம். நகரின் மையத்திலிருக்கும் மத்திய இரயில் நிலையத்திற்கு எதிரே ட்ராம் வண்டிகள் வந்து செல்லும். அவற்றுள் விஜிலன்ட் பூங்கா செல்லும் ட்ராம் வண்டியினுள் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள். பதினைந்து நிமிடப் பயணத்தில் ட்ராம் வண்டி இறுதி நிறுத்தமான விஜிலன்ட் பூங்காவில் உங்களை இறங்கச் சொல்லும். ட்ராம் வண்டியிலிருந்து இறங்கி எதிரே தெரியும் பிரம்மாண்டமான பூங்காவினுக்குள் நுழைந்து கொண்டால் போதும். வேறு உலகிற்கு நீங்கள் செல்வது போல் உணர்வீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூங்காவின் நுழைவாயிலில் இருந்து நேராகப் பார்த்தால் ஐம்பது மீட்டர் தொலைவில் ஏகப்பட்ட சிற்பங்கள் தெரியலாம். நுழைந்தவுடன் வலப்புறம் திரும்பிப் பாருங்கள். மலர்களுக்கு நடுவே குஸ்தவ் விஜிலன்ட் (Gustav Vigeland) சிலையாய் நின்று கொண்டிருப்பார். தன் வாழ்நாள் முழுவதையும் சிற்பக்கலைக்கு அற்பணித்த நார்வே நாட்டுச் சிற்பி அவர். அங்கிருக்கும் சிற்பங்களையெல்லாம் பார்ப்பதற்கு முன் , அவருடைய வாழ்க்கைக் குறிப்பைச் சுருக்கமாய்ப் பார்த்து விடலாம், வாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/vigiland-1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1869-ல் நார்வே நாட்டுத் தென்பகுதித் துறைமுகமான மாண்டல் (Mandal) எனும் நகரில் மர வேலைகள் செய்யும் தச்சருக்கு மகவாகப் பிறந்தவர் குஸ்தவ் விஜிலன்ட். இளமையிலேயே ஓவியங்கள் வரையும் திறனும் சிற்பங்கள் செதுக்கும் திறனும் தனது மகனிடம் மிளிர்வதைக் கண்ட குஸ்தவின் தந்தை, இக்கலையை முறையாகப் பயிற்றுவிக்க எண்ணி, குஸ்தவுடன் ஓஸ்லோ சென்று அவருக்கு கலைக் கல்வி வழங்க ஏற்பாடு செய்தார். அப்போது குஸ்தவுக்குப் பதினைந்து வயது. ஆனால் இந்த ஏற்பாடு வெகுகாலத்துக்கு நீடிக்கவில்லை. ஓஸ்லோ சென்ற இருவருடங்களுக்குள் குஸ்தவின் தந்தை மரணமடைந்துவிடவே , குஸ்தவ் ஓஸ்லொ நகரை விடுத்து மீண்டும் மாண்டல் திரும்ப வேண்டியதாயிற்று. சிற்பம் வடிக்கும் வேலைதேடி மீண்டும் ஓஸ்லோவிற்கே சென்ற குஸ்தவிற்கு ஏமாற்றமே காத்திருந்தது. அங்கே உணவிற்கே திண்டாட வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டார். சிற்பங்கள் செய்ய பல்வேறு விதமான வரைவு மாதிரிகளை அவர் உருவாக்கிக் கொண்டிருப்பினும் அவருக்கு உதவி செய்ய எவருமில்லை. இறுதியாய் பிரையினுல்ப் பெர்க்ஸ்லெய்ன் (Brynjulf Bergslien) எனும் சிற்பி அவருக்கு உதவ முன்வந்தார். குஸ்தவின் திறமையைக் கண்ட அவர் குஸ்தவிற்கு பயிற்சி அளிக்கவும் ஒப்புக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் சிற்பக்கலையைச் செயல்முறையாகக் கற்றுக்கொண்ட குஸ்தவ் மாலை நேரக் கலை வகுப்புகளுக்குச் சென்று கற்கவும் தவறவில்லை. பின்னர் மாதியாஸ் ஸ்கீப்ரொக் (Mathias Skeibroks) எனும் சிற்பியிடமும் சில காலம் சிற்பங்கள் செதுக்கும் உதவியாளராகப் பணிபுரிந்தார். 1889 ஆம் ஆண்டின் இறுதியில் அவரது சிற்பங்கள் அடங்கிய முதல் கண்காட்சி ஓஸ்லோவில் நடைபெற்றதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/Vigeland.jpg" /&gt;&lt;br /&gt;இளவயது குஸ்தவ்&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனுக்குச் சென்ற குஸ்தவ் அங்கும் கலை பற்றி கற்கவும், சிற்பங்கள் உருவாக்கவும் செய்திருக்கிறார். அதன் பின் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்குச் சென்று அங்கும் பல சிற்பக்கலை விற்பன்னர்களின் படைப்புகளைப் பார்த்தும், அவர்களுடன் பணிபுரிந்துமிருக்கிறார். புகழ்பெற்ற பிரெஞ்சுச் சிற்பியான ஆகஸ்ட் ரோடின் (August Rodin) என்பவரின் படைப்புகளைக் கண்டு, அவருடன் பழகும் வாய்ப்பும் குஸ்தவிற்கு ஏற்பட்டிருக்கிறது. குஸ்தவின் சிற்பங்கள் பலவற்றினுக்கு ரோடினின் சிற்பங்கள் ஒரு உந்து சக்தியாக, முன் மாதிரியாக இருந்திருக்கின்றன, ரோடினின் "நரகத்தின் கதவுகள்" எனும் சிற்பப்படைப்பு குஸ்தவை மிகவும் கவர்ந்திருக்கிறது. ரோடினின் காமச்சுவை ததும்பும் சிற்பங்களின் வடிவமைப்பில் மயங்கிய குஸ்தவ் பின்னாளில் அது போலவே தானும் பல்வேறு சிற்பங்கள் செய்திருக்கிறாராம். பின்னர் இத்தாலி நாட்டின் பல நகரங்களுக்கும் சென்று அந்நாட்டின் சிற்பக்கலை பற்றியெல்லாம் பார்த்தறிந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஓஸ்லோ திரும்பிய குஸ்தவ் சில சிற்பக் கண்காட்சிகள் நடத்தியிருக்கிறார். அவை கலாரசிகர்களிடையே வரவேற்புப் பெற்றாலும் , பொருளீட்டும் வண்ணம் அமையவில்லை. எனவே தேவேலாயங்களுக்குச் சிற்பங்கள் வடியமைக்கும் வேலையிலமர்ந்தார். அவரது சிற்பத்திறன் பற்றிய புகழ் கொஞ்சம் கொஞ்சமாக நார்வே நாட்டில் பரவ ஆரம்பித்தது. 1900 முதல் 1910 வரையிலான காலகட்டத்தில் புகழ்பெற்ற நார்வே நாட்டுத்தலைவர்கள், அரச குடும்பத்தினர் ஆகியோரது உருவச்சிலை வடிக்கும் பணியில் ஈடுபட்டார் குஸ்தவ். நார்வே நாட்டின் தலை சிறந்த சிற்பி என்ற பெருமையை அப்போதே பெற்றவரானார். பின்னர் ஓஸ்லோ நகர சபையினர் ( 1924-ல்) , ஓஸ்லோவின் பெரிய பூங்காவான ப்ரோக்னெர் பூங்காவில் (Frogner Park) அவருக்கு இடமொதுக்கி அங்கு சிற்பக்கூடம் ஒன்றையும் உருவாக்கித் தந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது முதல் தன் வாழ்நாளின் இறுதி வரை (1943) அப்பூங்காவிலேயே சிற்பங்கள் செய்வதில் ஈடுபட்டிருக்கிறார், அவர் அப்போது வடிவமைத்த சிலைகள் தான் இன்று அப்பூங்காவினை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. அவரது மரணத்துக்குப்பின் ப்ரோக்னெர் பூங்கா குஸ்தவின் பெயர் கொண்டு விஜிலென்ட் பூங்கா (Vigeland park) என்றே அழைக்கப் பட்டு பொது மக்கள் பார்வைக்கென திறந்துவிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, குஸ்தவின் சிலையிலிருந்து புறப்பட்டு சற்று முன்னோக்கிச் செல்வோம். மொத்தம் இருநூற்றுப் பன்னிரெண்டு சிலைகள். கிரானைட் ,வெண்கலம் மற்றும் சில இரும்பாலானவை. அவரது பிரெஞ்சுப் பயணத்தில் கிடைத்த அனுபவங்களே சிலைகளாயிருக்கின்றன. வாழ்க்கை எனும் அலையினுள் அகப்பட்டு அல்லாடும் மனித இனத்தின் அனைத்து உணர்ச்சிகளையும் சிலையாய் வடித்துள்ளார். குழந்தையாய்த் தொடங்கும் பருவம் முதல் கிழடாய் முடங்கும் பருவம் வரை மகிழ்ச்சி, துன்பம், பாசம், காதல். காமம், என எல்லாச் சுவைகளையும் வெளிப்படுத்தும் வண்ணம் சிற்பங்கள் அமைந்துள்ளன. "இஸம்" என்று பார்க்கையில் காதல், உணர்வுபூர்வம் மற்றும் இருத்தலியல் (Romanticism ,Emotionalism and Realism) ஆகியவற்றின் அடிப்படையில் இச்சிற்பங்கள் அமைந்திருப்பதாக விவரம் அறிந்தவர்கள் வகைப்படுத்தியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, அடுத்த பதிவில் அந்தச் சிற்பங்களைப்பற்றி விரிவாகப் பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-111930312870484455?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/111930312870484455/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=111930312870484455' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/111930312870484455'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/111930312870484455'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2005/06/1.html' title='ஓஸ்லோ-விஜிலன்ட் பூங்கா-1'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-111411839765952644</id><published>2005-04-21T23:14:00.000+02:00</published><updated>2005-04-21T23:19:57.663+02:00</updated><title type='text'>குட்டி ஐரோப்பா</title><content type='html'>பெல்ஜியத் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸ் நகரின் முக்கியச் சுற்றுலாத் தலம் குட்டி ஐரோப்பா (Mini Europe).&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பியச் சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் வந்து செல்ல வேண்டிய இடம் இது. அல்லது ஐரோப்பா முழுவதும் சுற்றிப் பார்க்க நேரம் இல்லாதவர்கள் இந்த இடத்திற்கு மட்டுமாவது வந்து சென்றால் ஐரோப்பிய நகர்களுக்குச் சென்ற திருப்தி நிச்சயம். ஐரோப்பிய நாடுகளின் முக்கியமான் கட்டிடங்களையும் பழமையான சின்னங்களையும் இங்கு காணலாம். அனைத்து சின்னங்களும் அதே வடிவத்தில் அல்ல, சிற்றளவாக்கப் பட்ட (Miniature) வடிவத்தில் காணலாம். பெரும்பாலான சின்னக்கள் 1:25 என்ற விகிதத்தில் சிற்றளவாக்கப் பட்டவை. ஒன்றிரண்டு சின்னங்கள் மேலும் குறைந்த விகிதத்தில், உதாரணமாய் இத்தாலி நாட்டில் எரிமலைத் தொடரான வெசுவியஸ் 1:1000 என்ற விகிதத்தில் சிற்றளவாக்கப் பட்டிருக்கிறது. முன்னூறுக்கும் மேற்பட்ட மாதிரிகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரஸ்ஸல்ஸ் நகரின் பாதாள இரயிலில் (மெட்ரொ) பிரயாணித்து நகரின் சற்றே வெளிப்பகுதியில் அமைந்த இந்தக் குட்டி ஐரோப்பாவிற்கு நானும் எனது நண்பனும் வந்தடைந்தோம். இதற்கருகே மிகப்பெரிய உருவில் அடாமியம் (Atomium) அமைந்திருந்தது. நேரப்பற்றாக்குறையினால் இந்த அணுவகத்தினுள் செல்ல இயலவில்லை. அணுவின் அமைப்பு போல் வடிவமைத்திருந்தார்கள். 1958-ல் ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த ஒரு பொருட்காட்சியின் போது உருவாக்கப்பட்டதென்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/atomium.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய வரிசையில் நின்று குட்டி ஐரோப்பாவிற்கு நுழைய அனுமதிச்சீட்டு பெற்று உள்ளே நுழைந்தோம். வாண்டுகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;லண்டனின் அரச பரம்பரையினர் வசிக்கும் பக்கிங்கம் அரண்மனையைக் காவல் புரியும் சீருடை வீரர்கள் போல் ஒரு சிலை . தலைப்பகுதியில் வெற்றிடம். அங்கே நீங்கள் உங்கள் தலையை நுழைத்து, காவலாளி போல் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/bakingham.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்துப் பார்லிமென்ட் கட்டிடம், அதனைத்தொடர்ந்து அதனருகே உலகப்புகழ் பெற்ற பிக் பென் "மணி"க் கோட்டை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/bigben.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலக அதிசயங்களுள் ஒன்றான பாரிஸ் நகரத்து ஈபிள் கோபுரம். நேரில் பார்த்தால் 300 மீட்டர் உயரம். இங்கே உயரங்குறைக்கப் பட்டு 12 மீட்டர் மாதிரியாகத் தோன்றினாலும் பிற சின்னங்களின் நடுவே , இந்தச் சிற்றளவாக்க மாதிரியே மிகப்பெரியதாகத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;பாரிஸின் மற்றொரு வரலாற்றுச் சின்னமான வெற்றி வளைவு-ம் (Arch De Triumph)காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/arch-de-triumph.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்மன் தலைநகர் பெர்லினின் பிரான்டன்பர்க் கோட்டை மற்றும் பெர்லின் சுவர் ஆகியவையும் காணலாம். எல்லாச் சின்னங்களையும் அப்படியே மாதிரியாய்க் காட்டினால் சுவாரஸ்யம் குறைந்து போய் விடும் என்று கருதிய அமைப்பாளர்கள் விறுவிறுப்பைக்கூட்ட சில பாவனையாக்க மாதிரிகளையும் (Simulated) அமைத்திருக்கிறார்கள். ஐரோப்பாவின் வேகமான இரயில் "தாலிஸ்" . சிறு தண்டவாளம் அமைக்கப்பட்டு அதன் மீது தாலிஸ் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆம்ஸ்டர்டாம் நகர வீதிகளின் நடுவே ஓடும் வாய்க்கால்களில் செல்லும் படகுகளைப்போல மாதிரிகளையும் காணலாம். இத்தாலி நாட்டு எரிமலை வெசுவியஸ் திடீரென்று வெடித்து வெளியேறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஊர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போல் அமைந்த ( சற்று வேறுபட்ட ) ஸ்பெயின் நாட்டுக் காளை அடக்குப் போட்டி நடைபெறும் காளை வளைவு (Bull Ring ) ஒன்றின் மாதிரி அமைக்கப்பட்டு அந்த அரங்கத்தினுள் ஆயிரக்கணக்கான மக்கள் போட்டியினை இரசிப்பதுபோல் அமைந்துள்ளது. அடிக்கடி இரசிகர்கள் எழுப்பும் ஒலியான "ஒலே"(Olé) பின்னணியில் ஒலிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/spainbullfight.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பைசா (Pisa) நகரத்துச் சாய்ந்த கோபுரமும் , வெனிஸ் நகர வீதிகளில் மிதக்கும் படகுகளும் இங்குண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/piza.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரஸ்ஸல்ஸ் நகரின் அரண்மனைகளின் மாதிரியும் அவ்வரண்மனைகள் அமைந்துள்ள இடமான பேரிடத்தின் (Grand place) மாதிரியும் உண்டு. இந் நகரின் விமான நிலையத்தையும் இங்கே காண முடிகிறது. கோபன் ஹேகன் நகரின் பங்குச் சந்தைக் கட்டிடம் விமான நிலையத்திற்கு எதிரே அமைந்திருக்கிறது. ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தயாரிப்பான ஏரியன் ராக்கெட் புறப்படத்தயாராக செலுத்துதளத்தில் நிற்கிறது. கிரேக்க நாட்டுத் தலைநகர் ஏதென்ஸ் நகரின் வரலாற்றுப் புகழ் பெற்ற அக்ரொபோலிஸ் குன்றில் அமைந்துள்ள பழஞ்சின்னங்களையும் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முப்பரிமாணத் திரைப்படங்களைத் திரையிடும் ஐ-மேக்ஸ் திரையரங்கும் இங்கு உள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-111411839765952644?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/111411839765952644/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=111411839765952644' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/111411839765952644'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/111411839765952644'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2005/04/blog-post.html' title='குட்டி ஐரோப்பா'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-111342556290785988</id><published>2005-04-13T22:52:00.000+02:00</published><updated>2005-04-13T22:54:26.430+02:00</updated><title type='text'>பின்லாந்து - 5</title><content type='html'>அக்ஸெலி மியூஸியத்திலிருந்து ஒரு வாடகைக்கார் மூலம் பயணித்து ஒரு பெரிய பூங்காவினை அடைந்தோம். இந்தப்பூங்காவினில் ஒரு நினைவகம் அமைந்துள்ளது. கலேவலாப் பாடல்களுக்கு இசையமைத்த ஜீன் ஸிபிலியஸ்-க்கு (Jean Sibelius)இங்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/sibeleus-3.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சற்று வித்தியாசமான நினைவகம்.இசையமைப்பாளருக்கு ,இசைக்கருவியின் வடிவில் ஒரு நினைவுச் சின்னம். ஆர்கன் பைப் (Organ pipe)போன்ற அமைந்த பெரிய பெரிய குழாய்கள். மொத்தம் அறுநூறு குழாய்கள், துருப்பிடிக்காத இரும்பினால் ஆனவை.ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு சுமார் பத்து மீட்டர் உயரத்திற்கு பிரம்மாண்டமாய் அமைந்திருக்கின்றது. இத்தனைக்கும் சிபிலியஸ் ஆர்கன் பைப் கொண்டு எந்தவொரு இசைத்தொகுப்பையும் வெளியிட்டதில்லை என்கிறார்கள். இந்த இரும்புக்குழாய்கள் ஒரு பாறை மீது அமைக்கப்பட்டிருக்க அருகே சிபிலியஸின் தலைச் சிலை, அதுவும் துருப்பிடிக்கா இரும்பினால் அமைக்கப் பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/sibeleus-2.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொண்ணூற்று ஒரு ஆண்டுகள் வாழ்ந்து, பின்லாந்தின் தலைசிறந்த இசையமைப்பாளராய் அறியப்படும் ஜீன் சிபிலியஸ் 1957-ல் மரணம் அடைந்தார். ஏழு ஸிம்பொனி இசைத்தொகுப்புகளை வெளியிட்டவர். கலேவலாப் பாடல்களுக்கும் இசை அமைத்துத் தொகுப்புகள் வெளியிட்டார். இவரது மறைவுக்குப் பின் இவருக்கு நினைவுச் சின்னம் அமைக்க விரும்பிய சிபிலியஸ் சொஸைட்டி அங்கத்தினர்கள் , சிறந்த சின்னம் வடிவமைக்கும் பொருட்டு ஒரு போட்டியினை அறிவித்தனர். பலத்த போட்டிக்கிடையே எய்லா ஹில்துனென் (Eila Hiltunen) எனும் பெண்மணி வடிவமைத்த , இந்தக் குழாய் வடிவச் சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்குப் பரவலாய் எதிர்ப்பும் இருந்ததாம். அவரது உருவச் சிலை இதில் இடம் பெற வேண்டுமென பலரும் வற்புறுத்தவே, இந்த வித்தியாச வடிவமைப்புடன் அவரது உருவச் சிலையும் சேர்க்கப்பட்டது. சுமார் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாய் இதனை மிகக் கவனமுடன் வடிவமைத்து 1961-ல் இச்சின்னம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளாய் இன்னும் புத்தம் புதிதாய் அந்த நினைவுச் சின்னம் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பூங்காவிலிருந்து வெளியேறி அவ்வழியே சென்ற ட்ராம் வண்டியிலேறி மீண்டும் நகரின் முக்கியப்பகுதியான சந்தைக்கு வந்தோம். ஞாயிற்றுக் கிழமையாதலால் சந்தை பரபரப்பாய் இல்லை. அருகிலிருந்த இன்னொரு தேவாலயம் கண்ணைக் கவரவே அங்கு சென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/uspesk-1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உஸ்பென்ஸ்கி தேவாலயம் (Uspenski)என்றிதற்குப் பெயர். ரஷ்யர்கள் பின்லாந்தை ஆட்சி செய்தபோது கட்டப்பட்டதாம்.கட்டப்பட்ட ஆண்டு 1868. மற்ற ஐரோப்பிய தேவாலயங்களின் கட்டுமான முறையிலிருந்து ரஷ்யர்களின் கட்டுமான முறை வேறுபட்டு அமைந்திருக்குமாம். இந்தத் தேவாலயம் ரஷ்யமுறைப்படி அமைந்த தேவாலயங்களில் பெரிய ஒரு ஆலயம்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவாலயத்தின் கலசம் வெங்காய வடிவிலமைந்தது. மொத்தம் பதிமூன்று கலசங்கள் இதுபோன்று வெங்காய வடிவிலானவை. இயேசு மற்றும் அவரது பன்னிரெண்டு சீடர்களை உணர்த்தும் வகையில் அமைத்திருப்பதாய்ச் சொன்னார்கள். தேவாலயத்திற்குள் வண்ணமயமான பல ஓவியங்கள். இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகளில் சிலவற்றைச் சித்தரிக்கும் ஓவியங்கள் , புத்தம் புதிது போல் பளபளப்பாயிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இது உட்புறம் வழியாகத் தேவாலயத்தின் உச்சியைக் காட்டும் படம்.&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/uspesk-2.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் ஹெல்ஸின்கியின் முக்கிய வீதிக்கருகிலேயே அமைந்திருக்கும் அட்டெனியம் (Atteneum) எனும் கலைக் கூடத்திற்குச் சென்றோம். பின்லாந்தின் மிகப்பெரிய, சிற்ப மற்றும் ஓவியக் கண்காட்சியகம் இது. பின்லாந்தின் புகழ்பெற்ற ஓவியர்கள், சிற்பிகளின் ஆக்கங்களுடன் உலகப்புகழ் பெற்ற பல ஓவியர்களின் படைப்புக்களும் இங்கு பார்வைக்குக் கிடைக்கின்றன. அக்ஸெலி மியூசியத்திலிருந்த உதவியாளர் சொன்னது போல் அக்ஸெலி காலன் கலேலாவின் புகழ் பெற்ற கலேவலா ஓவியங்கள் இங்கு காணக்கிடைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்க்காணும் ஓவியம், கலேவலாவின் கதைநாயகன் வைனாமொயினனுக்கும் ஐனோ எனும் பெண்ணிற்கும் நடைபெற்ற உரையாடலைச் சித்தரிப்பது. தன்னை மணந்துகொள்ளும் படி கேட்ட வைனாமொயினனை மறுத்து, அவனை மணப்பதைவிட மரணம் மேல் என்று கருதி நீரில் மூழ்கி விடுகிறாள்.&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/vainamoinen.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீழேயுள்ள இவ்வோவியம் மரண வாசலில் இருக்கும் லெம்மின்கைனன் என்பவனின் தாயார் அவனை உயிர்ப்பிக்கும் முயற்சியில் இருப்பதைச் சித்தரிக்கிறது.&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/lemminkinen.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது போருக்குப் புறப்படும் குல்லர்வோ&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/kullervo-1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் இதுபோலப் பல ஓவியங்கள், சிற்பங்கள் என அழகாக விரிந்தது அட்டெனியம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் பயணத்தின் இறுதியாக ,இன்னும் ஒரு தேவாலயத்திற்குச் செல்லப் புறப்பட்டோம். இது மிகவும் வித்தியாசமான ஒரு தேவாலயம். டெம்பலியௌகியோ தேவலாயம் (Temppeliaukio) என்றிதற்குப் பெயர். குகைக்குள் அமைக்கப்பட்ட ஒரு ஆலயம் போன்ற ஒரு தோற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/tempel-ch.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கற்களால் செய்த தேவாலயம் என்றும் இதற்குப்பெயர். சுவர் முழுவதும் கற்கலால் ஆனது. தாமிரத்தாலான இதன் கூரை அரைக்கோள வடிவமுடையது. தேவாலயத்திற்குள் நுழைந்தால் அதன் வித்தியாசமான கற்சுவர்களும் தாமிரக்கூரையும் வியப்பளித்தன. இசைக்கருவியான ஆர்கன் (Organ) மிகப்பிரம்மாண்டமான தோற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/temple-2.jpg" /&gt;&lt;br /&gt;படம்: தேவாலயத்தின் தாமிரக்கூரை&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய இறை-இசை நிகழ்ச்சிகள் இங்கே நிகழ்வதுண்டாம். நாஙள் அங்கே சென்ற வேளையிலும் ஒரு சீருடை இசைக்குழு பக்திப்பாடல்களை இசைத்துக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்துடன் எங்கள் பின்லாந்துப் பயணத்தை முடித்துக் கொண்டு விமான நிலையம் திரும்பினோம். ஒன்றரை மணி நேரப் பயணம் முடித்து கோபன்ஹேகன் இறங்குகையில் குளிர்ந்த காற்று எங்களை வரவேற்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-111342556290785988?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/111342556290785988/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=111342556290785988' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/111342556290785988'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/111342556290785988'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2005/04/5.html' title='பின்லாந்து - 5'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-111144971163040163</id><published>2005-03-22T00:57:00.000+01:00</published><updated>2005-03-22T01:01:51.643+01:00</updated><title type='text'>பின்லாந்து - 4</title><content type='html'>பின்லாந்து நாட்டின் தேசிய காவியம் "கலேவலா" பற்றி உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும் . பின்னிஷ் மொழியிலிருந்து தமிழுக்கு ஆர். சிவலிங்கம் என்கிற உதணன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட நூலையும் பலர் படித்திருக்கலாம். மதுரைத்திட்டத்தின் தொகுப்பில் இப்புத்தகம் இடம் பெற்றுள்ளது. எனினும், கலேவலா பற்றி ஒரு சிறிய அறிமுகம் தருகிறேன்: நீண்ட நெடுங்காலமாய் ஸ்வீடனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக பின்லாந்து இருந்து வந்தது. ஆட்சி மொழி ஸ்வீடிஷ்தான். மக்கள் விரும்பினால் பின்னிஷ் மொழியைப் படித்துக் கொள்ளலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பின்லாந்து இரஷ்யா வசம் ஆனது. பின்னர் ஏற்பட்ட சுய விழிப்புணர்ச்சியினால் தங்களது மொழியின் வேர்களையும் பழைய வரலாறுகளையும் மீட்டு , தமது நாட்டின் தனித்தன்மையை மீண்டும் நிலைநாட்ட விரும்பினர். அதன் முயற்சியால் பின்லாந்தின் பழைய கதைகள், வரலாறுகள், நாடோடிப் பாடல்கள் பல தொகுக்கப் பட்டன. பின்லாந்தின் தூர கிழக்குப் பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்கள் வெகு காலமாய் அந்த நாடோடிப் பாடல்களைப் பாடி வருவது அறிந்து அவற்றைத் தொகுத்துக் காவியமாக்க விருப்பம் கொண்டனர். அவ்வாறு தொகுத்தவர்களுள் எலியாஸ் லொன்ராத் (Elias Lönnrot) என்பவர் மிக முக்கியமானவர். அடிப்படையில் அவர் ஒரு மருத்துவர் எனினும் தாய்மொழியில் கொண்ட காதலால், மொழிப்பேராசியராகப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். பின்லாந்தின் வெகு பழமையான நாடோடிப்பாடல்களை எல்லாம் தொகுக்க எண்ணி பல இடங்களுக்கும் பயணம் செய்தார். அங்கு வாழ்ந்த கிராம மக்கள் பாடிய பாடல்களையெல்லாம் தொகுத்தார். இப்பாடல்களின் தொகுப்பு 1835-ல் வெளியானது. பின்லாந்துப் பள்ளிக்களில் பாடமானது இத்தொகுப்பு. பின்னர் மேலும் பல பாடல்களைத் தேடிச் சேகரித்த எலியஸ் விரிவான மற்றொரு தொகுப்பை வெளியிட்டார். பின்லாந்து நாட்டின் தேசிய காவியமாக இப்பாடல் தொகுப்பு அறிவிக்கப் பட்டு , கலேவலா நாள் (Kalevala Day) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 28-ஆம் நாள் கொண்டாடப் பட்டு வருகிறது. "லார்ட் ஆப் த ரிங்ஸ்" எழுதிய ஜே. ஆர். ஆர். டால்க்கீன் - அவருக்கு மிகவும் பிடித்த தொகுப்பு கலேவலா. அவரது ஸில்மாரில்லியான் - எனும் புத்தகத்தில் கூட கலேவலாவின் கருத்துக்கள் சிலவற்றைக் காணலாம். இப்பாடல்களுக்கு இசை வடிவம் கொடுத்தவர் சிபிலியஸ்(Sibelius) எனும் இசைமேதை. கலேவலா காவியத்தின் பல பாடல்களுக்கு ஓவிய வடிவம் கொடுத்தவர் அக்ஸெலி காலன் கலேலா (Akseli Gallen-Kallela) எனும் புகழ் பெற்ற ஓவியர்.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க, எங்களது பின்லாந்துப் பயணத்தின் அடுத்த நாள்- அக்ஸெலி காலன் கலேலா வசித்த, தற்போது ஒரு அருங்காட்சியகமாகப் பாதுகாக்கப்படும் வீட்டிற்குச் சென்று வரப் புறப்பட்டோம். ஹெல்ஸின்கியின் மேற்கு எல்லையில் அமைந்திருக்கும் சிறிய நகரான எஸ்பூ (Espoo) விற்கும் ஹெல்ஸின்கிக்கும் நடுவே தர்வஸ்பா (Tarvaspaa) எனும் இடத்தில் அக்ஸெலி வசித்த வீடு அமைந்திருக்கிறது. ட்ராம் வண்டியொன்றில் ஏறிப் பயணித்தோம். ட்ராம் வண்டியின் கடைசி நிறுத்தத்தில் இறங்கினால் அருங்காட்சியகம் செல்லும் வழியை அம்புக்குறியினால் தெரிவித்து இன்னும் 2.6 கிலோமீட்டர் தொலைவு என அறிவித்திருந்தார்கள். நடக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் அடர்ந்த காடு எதிர்ப்பட்டது. காட்டிற்கருகே , அதனை ஒட்டிய வண்ணம் சலசலத்துக் கொண்டிருந்தது கடல். லாயலஹ்தி விரிகுடா என்றதற்குப்பெயர். சில இடங்களில் கடற்கரை மணல் வெளியும் தென்பட்டது. நாங்கள் சென்ற பாதை மேடு பள்ளமாய் அமைந்திருந்தது. காலை நேரத்தில் சைக்கிளிலும், நடந்தும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்ற இடம். வழி நெடுக நடையோட்டம் செய்து கொண்டிருந்தவர்கள் எங்களைக் கடந்து சென்றனர். ஓரிடத்தில் கடல் மிகக் குறுகலாய் இருக்க அதன் மீது ஒரு மரப்பாலம் . நாங்கள் வந்த பாதை சரியானது தானா என எதிர்ப்பட்ட ஒருவரிடம் விசாரிக்க , அவர் பாலத்தைக் கடந்து மறுபுறம் செல்லும்படி கூறினார். பாலத்தைக் கடந்தவுடன் சற்று விசாலமான சாலைகள். வளைந்து நெளிந்து உயர்ந்து சென்றது. சாலைகளின் இருமருங்கும் பசுமரங்கள் (Spur) ஓங்கி உயர்ந்து நிழல் சேர்த்தன. ஜூலை மாத காலை வெய்யில் சுள்ளென்று சுட்டது. தொடர்ந்த சாலையில் விலகிச் சென்ற ஒரு சரிவான பாதை. இயற்கையோடு இயைந்து வாழ நினைத்தே ஓவியர் அக்ஸெலி இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்திருக்க வேண்டும். இறுதியாய் ஒரு சிறிய வீடு - சிறிய கோட்டை போன்ற அல்லது சிம்னி போன்ற உச்சியைக் கொண்ட வீடு எங்கள் முன் தென்பட்டு , இது தான் நீங்கள் தேடி வந்த காட்சியகம் என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/akseli-2.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு தூரம் கடந்து நாங்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு வந்தது அருங்காட்சியக் ஊழியர்களுக்கு வியப்பை அளித்திருக்கக் கூடும், ஆச்சரியத்துடன் வரவேற்றார்கள். நுழைவுக்கட்டணம் செலுத்தி வீட்டினுள் நுழைந்தோம். அக்ஸெலியின் வீடு மற்றும் ஓவிய அறையாக-, இரு பயன்பாடுகட்கும் இவ்விடம் பயன்பட்டிருக்கிறது. அருங்காட்சியகத்தைச் சுற்றுப்பார்க்கும் முன் அக்ஸெலி காலன் கலெலாவின் வாழ்க்கையச் சிறிது விரைவாகப் புரட்டிப்பார்க்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/self_portrait.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1865 -ல் பிறந்த இவர் இளவயதில் ஓவியம் மற்றும் பின்னிஷ் நுண்கலைகள் பற்றிய படிப்பைத் தேர்ந்தெடுத்துக் கற்றிருக்கிறார். பின்னர் பாரிஸ் சென்று அங்கும் ஓவியம் படித்திருக்கிறார். 1890-ல் திருமணம். பின்னர் பெர்லினில் நடந்த ஓவியக் கண்காட்சியில் இவரது படைப்புக்கள் பிரசித்தி பெற்றனவாம். 1900 முதல் கலேவலாவின் கதைக்காட்சிகளை ஓவியங்களாய்த் தீட்ட ஆரம்பித்திருக்கிறார். ஹங்கேரி, பிரான்ஸ், ஜெர்மனி, கென்யா போன்ற நாடுகளுக்குப் பயணித்து ஓவியக் கண்காட்சிகள் நடத்தியிருக்கிறார். புதிய பல ஓவிய நுட்பங்களையும் கற்றிருக்கிறார். 1911-ல் இந்த வீடு கட்டப்பட்டது. பின்னர் 1920 -ல் வெளிவந்த கலேவலா- புத்தகத்தை இவரது ஓவியங்கள் அலங்கரித்தன. அமெரிக்காவிற்கு இருமுறை பயணம் செய்து வந்திருக்கிறார். அமெரிக்கக் கலை, கலச்சாரம் பற்றிக் கற்றுத் திரும்பியிருக்கிறார், கலேவலா தவிர பிற ஓவியங்களும் சிற்பங்களும் அமைத்திருக்கிறார். 1931-ல் கோபன் ஹேகன் சென்று திரும்புகையில் உடல்நிலை சீர்கெட்டு ஸ்டாக்ஹோமில் மரணமடைந்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/akseli-1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அருங்காட்சியகத்துள் நுழைந்ததும் முதல் அறை அவர் ஓவிய அறை. சுற்றிலும் பல்வேறு ஓவியங்கள். அவரது உருவத்தை அவரே வரைந்த ஒரு படமும் உண்டு. அவரது மனைவியைய் மற்றும் தாயின் உருவங்களையும் வரைந்திருக்கிறார். வரையப் பயன்படுத்திய அச்சு ஒன்று, லண்டனில் இருந்து தருவித்தது - இன்னும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இது தவிர, அக்ஸெலி ஓவியம் வரையப் பயன்படுத்திய பொருட்கள் பலவும் காணக் கிடைக்கின்றன. ஓவியம் வரையும் சாய்பலகையும் இருந்தது. அந்த அறையைக் கடந்து அடுத்த அறையினுள் கலேவலாக் கதை ஓவியங்கள் ஒன்றிரண்டு தென்பட்டன. கலேவலாக் கதையின் நாயகனான வைனாமொயினன் படகிலேறி வடக்கு நோக்கிச் சென்றதைச் சித்தரிக்கும் ஒரு ஓவியம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/kalevala-1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் சுழல் படிகள் ஏறி மாடி அறைக்குச் சென்றால் படிகளை ஒட்டிய ஒரு அறை- குளியல் அறை. அமெரிக்கா சென்று திரும்பியதும் அங்கிருந்த குளியல் அறைகளைப் போல மாற்றி அமைத்துக் கட்டியதாம் இது. உச்சியில் அவரது படிப்பறை. அந்த அறையில் ஜன்னல் வழியே வெளியே பார்த்தால் அவ்விடத்தின் இயற்கை அத்தனையும் கண்ணுக்குள் விரிகிறது. அறையினுள் அக்ஸெலி படித்த புத்தகங்கள் சிலவும் அவர் விளையாடப் பயன்படுத்திய பழைய டென்னிஸ் மட்டைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்னொரு குட்டி அறை. அதிலும் பல ஓவியங்கள். பின்னிஷ் மொழியில் கலேவலாப் பாடல் வரிகள் எழுதப் பட்டிருக்க அவ்வரிகள் ஓவியமாக்கப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/akseli-3.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அக்ஸெலி பற்றிய புத்தகங்களும் ஓவியக் குறிப்புகள் பற்றிய புத்தகங்களும் நிறைய இருந்தன. ஆனால் அனைத்தும் பின்னிஷ் மொழியில் இருந்தன. அங்கிருந்த உதவியாளரிடம், கலேவலா ஓவியங்கள் இங்கு குறைவாக இருப்பதைக் குறிப்பிட்டோம். ஹெல்ஸின்கி நகரின் மத்தியில் இருக்கும் அட்டெனியம் எனும் கண்காட்சியகத்தில் நிறைய இருப்பதாய்க் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-111144971163040163?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/111144971163040163/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=111144971163040163' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/111144971163040163'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/111144971163040163'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2005/03/4.html' title='பின்லாந்து - 4'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-111083924575300732</id><published>2005-03-14T23:30:00.000+01:00</published><updated>2006-04-05T08:14:12.643+02:00</updated><title type='text'>பின்லாந்து - 3</title><content type='html'>தீவுக்கூட்டங்களைச் சுற்றி முடித்துவிட்டு மீண்டும் ஹெல்ஸின்கி செல்லும் படகுக்காய்க் காத்துக்கொண்டிருக்கையில் ஒரு வயதான பாட்டி எங்களுடன் பேச்சுக் கொடுத்தார். "இந்தியாவிலிருந்து எங்கள் நாட்டைப் பார்ப்பதற்கா இத்தனை தூரம் வந்தீர்கள்" என்று ஆச்சரியம் பொங்கக் கேட்டார். நாங்கள் ஸ்வீடனில் வசிப்பதாய் மறுமொழி சொன்னோம். ஸ்வீடனில் என்ன செய்கிறீர்கள் , எங்கு பணிபுரிகிறீர்கள் என்றெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தார். ஸோனி எரிக்ஸனில் பணி புரிவதாய்க் கூறியவுடன் " அப்படியானால் நீங்கள் எங்களது போட்டியாளர்கள்" (செல்பேசி தயாரிப்பில் முதலிடம் வகிக்கும் நோக்கியா பின்லாந்து நாட்டில் பிறந்த நிறுவனம்) என்று விளையாட்டாய்க் கூறிச் சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹெல்ஸின்கி நகர் அடைந்து பேருந்து நிலையம் தேடி நடந்து சென்றோம். மார்க்கெட் சதுக்கத்திலிருந்து நேராகச் செல்லும் முக்கிய வீதியில் வழியெங்கும் பச்சை மரங்களும் சிலைகளும் கடந்து செல்ல நடந்து கொண்டிருந்தோம். ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டு பின்லாந்திய இசை நிகழ்ச்சி ஒன்றை வழியில் கண்டோம். தொடர்ந்து செல்கையில் ஒரு பெண் நாய், பூனை முதலியவை கொண்டு சிறு சிறு வித்தைகள் காட்டி, கூடிய கூட்டத்தினை மகிழ்வித்துக்க் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/cat-dog.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து நிலையம் அடைந்து பொர்வூ (Porvoo) எனும் சிற்றூர் செல்லும் பேருந்தில் அமர்ந்தோம். சுமார் ஒரு மணி நேரப் பயணம். கடல் வழியாகவும் பொர்வூ செல்லலாம் . ஆனால் பயண நேரம் அதிகமாகும். பொர்வூ -வில் நிறைய மர வீடுகள் உண்டு. இவற்றைப் பார்த்து வரவே இந்தப் பேருந்துப் பயணம். வழி எங்கும் கோடைக்கால பசுமை இனிமை சேர்த்தது. ஆனால் பொர்வூ-வை நெருங்குகையில் மேகங்கள் கூடி மழை பொழிந்துவிடப் போவதாய் மிரட்டின.&lt;br /&gt;&lt;br /&gt;மேடு பள்ளமான நிலப்பகுதியில் அமைந்த ஊர் இது. சரிவுகளில் வரிசையாய் வீடுகள்; பெரும்பான்மையான வீடுகள் மர வீடுகளே. ஊரின் தென்பகுதியில் ஓடும் ஒரு ஆறு. ஊரின் பெயரே ஆற்றின் பெயர். பொர்வூ ஆறு என்றே அழைக்கிறார்கள். ஆற்றினைக் கடக்க அமைந்த வளைவுப் பாலங்கள் அழகாயிருந்தன. ஆற்றின் வழியெங்கும் இளைப்பாறிக் கொண்டிருந்தன பலவகைப்பட்ட இயந்திரப் படகுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/porvoo-2.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொலைவில் மரங்களர்ந்த ஒரு வனப் பகுதி. ஆற்றின் கரையோரத்திலும் நிறைய மரவீடுகள் , வரிசையாய், சின்னச் சின்னதாய் அமைந்திருக்கின்றன. ஆற்றங்கரையில் நடந்து கொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்தது. அருகிருந்த மரத்தினடியில் ஒதுங்கிச் சிறிது நனைந்து மழையை ரசித்தோம். சற்று நேரத்தில் மழை தூறலாக மாறவே தொடர்ந்து நடந்து சென்றோம். குறுகலான வளைவான உயர்ந்து இறங்கும் சாலைகள்; சாலைகளின் இருபுறமும் முற்றிலும் மரத்திலேயே அமைந்த வீடுகள் என வித்தியாசமான ஊர்தான். மேடான இடத்தில் அமைந்த ஒரு தேவாலயம் எதிர்ப்பட்டது. ஒரு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/PORVOO.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்த தாழ்வான வீதிகளில் இறங்கி, மீண்டும் பேருந்து நிலையம் அடைந்து ஹெல்ஸின்கி திரும்பினோம். பொர்வூவில் பெய்த மழை இங்கில்லை. வானமும் தெளிவாக இருந்தது. வெய்யிலும் சுள்ளென்று சுட்டது. ஹெல்ஸின்கிக்கு அருகிலுள்ள தீவுக்கூட்டங்களைப் படகிலிருந்து பார்த்துக்கொண்டே செல்லும் ஒரு படகுச் சுற்றுலா தயாராய் இருக்கவே படகிலேறி அமர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/boat-trip.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் குறிக்கப்பட்டுள்ள பாதையில் பயணம் அமைந்திருந்தது. படகில் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் ஆங்கிலம், ஸ்வீடிஷ், பின்னிஷ் மற்றும் ஜெர்மனிய மொழிகளில் கடந்து சென்ற இடங்களைப் பற்றிய வர்ணனை வழங்கின. " இடது புறம் நீங்கள் காண்பது, வலது புறத்தில் நீங்கள் காண்பது" என்று சொல்லச் சொல்ல படகில் பயணம் செய்த அனைவரும் வலப்புறமும் இடப்புறமும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் எதிர்ப்பட்டது நாங்கள் ஏற்கனவே பார்த்த சௌமன்லின்னா தீவுக் கூட்டங்கள். அதனைக் கடந்து சென்றால் இன்னொரு தீவு, அதன் பெயர் சான்டாஹமினா(Santahamina). ராணுவ அருங்காட்சியகமும் விலங்குகள் சரணாலயமும் இங்கிருப்பதாய்க் கூறினார்கள். சிறு சிறு தீவுகள் தொடர்ந்து எதிர்ப்பட கடல் சில இடங்களில் குறுகி , தீவுக்கு வழி விடுகிறது. இரண்டு தீவுப்பகுதிகளை இணைக்க ஓரிடத்தில் நகரும் இரும்புப்பாலம் ஒன்றிருக்கிறது. படகுகள் செல்கையில் இப்பாலம் நகர்ந்து வழி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/trip-gate.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படகுகள் கடந்தவுடன் மீண்டும் மூடிக்கொண்டு தீவுகளை இணைக்கிறது. வலப்புறம் காணப்பட்ட அடுத்த பெரிய தீவு லாயசலோ (Laajasalo) . உயர்ந்த பல கட்டிடங்களும் , மரங்களும் தென்பட்டன. கடற்கரை மணல்வெளி சூரியக் குளியலுக்கு ஏற்றது.&lt;br /&gt;வளைந்து நெளிந்த , குறுகலான பாதைகளில் படகு பயணித்துத் திரும்பியது. திரும்பும் வழியில் பெரிய பெரிய கப்பல்கள் நின்று கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/ice-breakers.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பனி உடைக்கும் கப்பல்களாம் இவை. குளிர்காலத்தில் வெப்பநிலை உறைநிலைக்குக் கீழ் பல பாகை செல்ஸியஸ் குறைந்து விடுவதால் கடல்நீர் இறுகி உறைந்து விடுகிறது. உறைந்த பனிக் கட்டிகளை உடைத்துக் கப்பல் பயணம் மேற்கொள்ளும் பணியினை இக்கப்பல்கள் நிகழ்த்துகின்றன. பல மீட்டர் ஆழம் சென்று பனியினை உடைத்து வழி செய்யும் ஆற்றல் மிக்கவையாம் இந்தக் கப்பல்கள்.&lt;br /&gt;சற்று நேரத்தில் படகு , பயணம் தொடங்கிய மார்க்கெட் சதுக்கத்தை அடைந்து நின்றது. இரவு பத்து மணியான பின்னும் சிறிது சூரிய வெளிச்சம் மிச்சமிருந்தது. முக்கிய வீதியிலிருந்த "நமஸ்கார்" எனும் இந்திய உணவகத்தில் இரவு உணவு உண்டு விடுதி திரும்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பதிவிலும் பின்லாந்து தொடர்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-111083924575300732?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/111083924575300732/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=111083924575300732' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/111083924575300732'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/111083924575300732'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2005/03/3.html' title='பின்லாந்து - 3'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-111040935285073106</id><published>2005-03-10T00:02:00.000+01:00</published><updated>2005-03-10T00:02:32.853+01:00</updated><title type='text'>பின்லாந்து - 2</title><content type='html'>சௌமன்லின்னா தீவுக்கூட்டத்திற்குச் செல்ல படகுப்போக்குவரவு உண்டு. படகு ஒன்றில் ஏறிக்கொண்டு பயணம் செய்தோம். நாடு விட்டு நாடு செல்லும் பெரிய பெரிய ஏழடுக்குக் கப்பல்களைக் கடந்து சென்றோம். ஐந்து தீவுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருப்பது போல் தோற்றம் கொண்டது இது. பின்லாந்தின் நுழைவாயில் போல் அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/suomenlinna1_btn.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்லாந்து நீண்ட காலமாய் ஸ்வீடனின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தாலும் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரஷ்யாவின் எழுச்சி ஸ்வீடனுக்கு ஒரு பயமுறுத்தலாய் அமைந்தது. அப்போதைய ஸ்வீடன் மன்னர் பின்லாந்தின் மீது ரஷ்யா படையெடுத்து வந்தால் அதனைத் தடுத்துப் பதிலடி கொடுக்கும் வண்ணம் கடற்கோட்டைகள் கட்டத் திட்டமிட்டார். பின்லாந்திற்கு நுழைவாயில் போல் அமைந்த இத்தீவுக்கூட்டத்தில் கோட்டை அமைக்க முடிவானது. ஸ்வீடனின் இத்திட்டத்துக்கு பிரான்ஸ் நிதி உதவி அளித்ததாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/fort-1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கி.பி 1748 ல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த அரண்கள் சுமார் நாற்பது ஆண்டு காலமாய்க் கட்டப்பட்டன. எதிர்பார்த்தது போலவே ரஷ்யக் கப்பற்படைகள் 1808 ல் இந்த அரண்களை நோக்கி அணிவகுத்தன. அதிக எதிர்ப்பு இல்லாமலேயே ரஷ்யப்படைகளுக்கு சௌமன்லின்னா கோட்டை அடிபணிந்தது. பின்லாந்தில் ஸ்வீடனின் ஆதிக்கமும் முடிவுக்கு வந்தது. பின்னர் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் ஒரு நூற்றாண்டு காலம் இருந்த இக்கோட்டையும் பின்லாந்தும் 1917-ல் ரஷ்யாவிடமிருந்து விடுதலை பெற்றதாம். பிரிட்டிஷ் படைகளால் 1855-ஆம் ஆண்டில் இந்தக் கோட்டைகள் ஒரு முறை தாக்குதலுக்கு உள்ளாயின. சுதந்திரம் பெற்ற இரு வருடங்களுக்கு பின்லாந்தில் உள்நாட்டுக் குழப்பங்களும் கலகங்களும் நடைபெற்றனவாம். அப்போது சிறைப்படுத்தப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் இந்தக் கோட்டையின் சிறைச் சாலைகளுக்குள் அடைக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/fort-3.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படகிலிருந்து இறங்கியவுடன் தகவல் மையத்திற்குச் சென்றோம். தகவல் மையத்தை ஒட்டி ஒரு ஒலி-ஒளிக் காட்சியகமும் அருங்காட்சியகமும் அமைந்திருந்தன. நாங்கள் அங்கே சென்ற நேரத்தில் ஒரு ஒளி-ஒலிக் காட்சி இருந்ததால் அந்தத் திரை அரங்கினுள் அனுமதிச் சீட்டு பெற்றுச் சென்றோம். ஒவ்வொரு இருக்கையிலும் ஒரு ஒலிப்பான் (Head phone) . நமக்குத் தெரிந்த மொழியைத் தெரிவு செய்துகொள்ள விசைகளும் இருந்தன. ஆங்கிலத்தைத் தெரிவு செய்து இருக்கையில் அமர்ந்தோம். எதிரே தெரிந்த திரையில் சில அசையாப் படங்களாகவும் சில அசையும் படங்களாகவும் ஓட அதற்கேற்றாற்போல் வருணனை காதினில் விழுந்தது. கோட்டை கட்ட ஆரம்பித்த வரலாறு முதல் தொடங்கியது. காட்சிகளை விளக்கும் ஓவியங்களும் திரையில் காண்பிக்கப்பட்டன. ரஷ்யப்படைகள் கோட்டையைச் சூழ்ந்து பீரங்கிகளால் தாக்குதல் நடத்தினர் என்ற வருணனையின் போது பீரங்கிகள் எழுப்பும் சத்தத்தை அரங்கினுள் அமைக்கப்பட்டிருந்த பெரிய ஒலி பெருக்கிகள் எழுப்பி,வெடி வெடித்த உணர்வினை உண்டாக்கின. மரத்தினால் அமைக்கப்பட்ட அத்திரை அரங்கு அதிர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்த திரைப்படத்தில் பின்லாந்தின் அன்றைய வரலாற்று நிகழ்வுகளும் கோட்டையில் ரஷ்ய நாட்டினர் அமைத்த தேவலாயம் , உள்நாட்டுக் கலவரத்தின் விளைவுகள் அனைத்தும் சுருக்கமாய் விவரிக்கப்பட்டது. திரையரங்கத்தின் மேல்தளத்திலமைந்த காட்சியகத்தில் சிறைச்சாலைகளில் கைதிகள் பட்ட அவஸ்தைகள், பட்டினி,நோய்கள், சாவுகள் போன்றவற்றைச் சித்தரிக்கும் புகைப்படங்களும் குறிப்புகளும் காணப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/fort-4.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் தீவுகளைச் சுற்றி வரப்புறப்பட்டோம். மேடு பள்ளமான பாதைகள் , அகண்ட உயரமான கோட்டைச் சுவர்கள் வரவேற்றன. கோட்டைச் சுவர்களுள் செல்லும் இருண்ட சுரங்கப்பாதைகள் , மெல்லிய விளக்கொளியில் வெகுதூரம் பயணம் செய்தன. இருண்ட பாதைகளுக்குள் பின்லாந்தின் குளிர்கால நடுங்கு குளிர் இன்னும் மிச்சமிருந்தது. சிறிய , உயர்ந்த குன்றுகளில் ஏற சுற்றிலும் விரிகிறது கடல். கோடைக்காலத்தைக் கொண்டாடும் வகையில் பச்சைப்பசேல் எனப் புல்வெளிகளும் வெண்ணிறத்தில் மலர்ந்த பூக்களும் சிரிக்கின்றன. ஓரிடத்தில் கப்பல்கள் வந்து நிற்க ஆழப்படுத்தப்பட்ட செயற்கைத் துறைமுகப்பகுதியும், கப்பல் கட்டும் இடமும் இருந்தன. பழைய கப்பல் ஒன்றும் தென்பட்டது.போர்களுக்குப் பயன்படுத்திய பீரங்கிகள் ஆங்காங்கே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கடலை ஒட்டிய சிறிய கடற்கரையில் சிலர் உற்சாகமாய் சூரியக்குளியல் எடுத்துக் கொண்டிருந்தனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து பரந்த கடலில் நகரும் குடிசைகளாய்க் கப்பல்கள் துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தன. முகத்தில் வண்ணம் பூசி ,வண்ண உடையணிந்த ஒரு குழு நாடகமொன்றை நடத்திப் பாட்டுகள் பாடி ஆடிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/fort-2.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக்கோட்டை கட்டி இருநூற்றைப்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சிறப்புக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. யுனஸ்கோ, இக்கோட்டைகளைப் பாரம்பரிய உலக கலாச்சாரச் சின்னமாகவும் அறிவித்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-111040935285073106?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/111040935285073106/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=111040935285073106' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/111040935285073106'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/111040935285073106'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2005/03/2.html' title='பின்லாந்து - 2'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-110790452285438918</id><published>2005-02-10T01:06:00.000+01:00</published><updated>2005-03-10T00:04:44.120+01:00</updated><title type='text'>பின்லாந்து - 1</title><content type='html'>ஸ்கான்டினேவிய நாடுகளுள் பின்லாந்து சற்று வித்தியாசமானது. நார்வே, டென்மார்க் மற்றும் ஸ்வீடனில் பேசப்படும் மொழிகளான நார்வீஜியன், டானிஷ் மற்றும் ஸ்வீடிஷ் , ஒன்றோடொன்று தொடர்புடைய மொழிகள். பின்லாந்து நாட்டின் மொழியான பின்னிஷ் சற்றே வேறுபட்டது. உச்சரிப்பிலும் வேறுபாடுகளுண்டு. பின்லாந்து தவிர மற்ற நாடுகள் இன்னும் ஈரோ -விற்கு மாறவில்லை. இன்னும் தனித்தனி நாணயங்களே உபயோகத்தில் இருக்கின்றன ( நார்வே - நார்வீஜியன் க்ரோனார் [Kronor] , டென்மார்க் - டானிஷ் க்ரோனார் , ஸ்வீடன் - ஸ்வீடிஷ் க்ரோனார்) . ஸ்கான்டினேவிய நாடுகளுள் ஐஸ்லாந்தையும் சேர்த்துக்கொள்ளலாம். பின்லாந்தின் விமான சேவையை பின் ஏர் (Finn Air) கவனித்துக்கொள்ள மற்ற நாடுகளில் ஸ்கான்டினேவியன் ஏர்லைன்ஸ் செயல்படுகிறது. பின்லாந்து ஸ்கான்டினேவிய நாடுகளுள் ஒன்றல்ல என்று நம்புபவர்களும் ஐரோப்பாவில் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/finland.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடக் கோடையில் (2004) பின்லாந்தின் தலைநகரான ஹெல்ஸின்கி (Helsinki) செல்லத் தீர்மானித்து, ஒரு வார இறுதியில் பயணித்தோம். குளிர்காலங்களில் பின்லாந்தின் வெப்ப நிலை உறை நிலைக்குக் கீழ் இருபது , இருபத்தைந்து பாகை வரை வரலாம். கோடையில் அதிகபட்சமாக இருபது பாகை வரை செல்வதுண்டு. எனவே வெயில் காலத்தின் ஒரு வாரயிறுதியில் எங்கள் பயணம் அமைந்திருந்தது. கோபன் ஹேகனிலிருந்து ஸ்கான்டினேவியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ஒன்றரை மணி நேரம் பயணித்து ஹெல்ஸின்கி சென்றடைந்தோம். பின்லாந்தின் நேரக் கணக்கீடு மற்ற மத்திய ஐரோப்பிய நாடுகளின் நேரக் கணக்கீட்டிலிருந்து மாறுபட்டது. மத்திய ஐரோப்பிய நேரத்தை விட பின்லாந்தில் ஒரு மணி நேரம் அதிகம். எனவே பயணம் இரண்டரை மணி நேரம் போலத் தோன்றலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு மணி பதினொன்று என்றாலும் வெயில் மிச்சமிருந்தது. சூரியன் அஸ்தமனம் செய்யத்தயாராக இருக்கையில் விமான நிலையம் விட்டு ஹெல்ஸின்கி நகரம் செல்லும் பேருந்தினுள் ஏறினோம். நகரின் மத்திய இரயில் நிலையம் அடைந்து நாங்கள் முன்பதிவு செய்த விடுதி வழி செல்லும் சுரங்க இரயிலைத் தேடினோம்.&lt;br /&gt;கறுப்பு உடையணிந்த நிறைய இளைஞர்கள் கையில் பீர் பாட்டிலுடன் எதிர்ப்பட்டனர். தொண்டை கிழியக் கத்திக் கொண்டும் ஓடிக்கொண்டும் ஏராளமான இளைஞர்கள். பெண்களும் உண்டு. அவர்களது வித்தியாசமான உடை ( மேலாடையும் கீழாடையும் கறுப்பு ) , நீளமாய்த் தொங்கிய முடி ,ஆர்ப்பட்டம் போன்றவை வேறெங்கும் நான் கண்டதில்லை. ஒருவேளை வார இறுதிக் கூத்திற்காக இருக்கலாம் என்று எண்ணினேன். ஆனால் நாங்கள் பின்லாந்தில் தங்கியிருந்த மற்ற இரு நாட்களில் கூட கறுப்பு உடை இளைஞர் கூட்டத்தை மாலை வேளைகளில் அதிகம் காண முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரயிலில் பயணம் செய்து குறிப்பிட்ட இடத்தை அடைந்து விடுதியைத் தேடினோம். அந்த இடம் முழுதும் கறுப்புடை இளைஞர்களின் ஆர்ப்பாட்டம் அதிகமாயிருந்தது. விடுதியைத் தேடி நடந்து கொண்டிருக்கையில் ஒரு இளம்பெண் உதவிக்கு வந்தாள். நாங்கள் தேடும் இடம் அவளுக்குத் தெரியுமென்றும், ஏற்கனவே அவள் அங்கு தங்கியிருக்கிறாள் என்றும் கூறினாள். இந்த இரவு நேரத்தில் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு இப்படி நடந்து வருவது ஆபத்தானது என்றும் சொன்னாள். என்ன ஆபத்து என்று என் மனைவி கேட்டதற்கு , " ஒன்றுமில்லை, இந்த இளைஞர்கள் குடித்துக் கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். எதற்கும் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது" என்றாள். அந்த விடுதியை அடைந்த பிறகு தான் அது தவறான இடம் என்று தெரிந்தது, அவ்விடுதி வரவேற்பாளனிடம் வழி கேட்டு மீண்டும் வந்த வழியே திரும்பித் தேடலானோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீதிகளின் பெயர்ப்பலகை இரண்டு மொழிகளில் (ஸ்வீடிஷ் மற்றும் பின்னிஷ் மொழிகளில்)குறிப்பிடப் பட்டிருந்தது. நீண்ட காலமாக பின்லாந்து நாட்டை ஸ்வீடிஷ் மன்னர்கள் பிடித்து வைத்துக் கொண்டு ஆண்ட காரணத்தினால் ஏற்பட்ட வழக்கமிது. பேருந்துகளிலும், இரயில்களிலும் கூட இந்த இருமொழிக்கொள்கை அறிவிப்பு வழக்கமிருக்கிறது. நாங்கள் வைத்திருந்த நகர வரைபடத்தில் பின்னிஷ் மொழியில் மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கவே சற்றுக் குழம்பிய படியே தேடிக்கொண்டிருந்தோம். வழியில் கண்ட ஒரு குடித்த இளைஞன் எதுவும் உதவி வேண்டுமா எனக் கேட்டான். நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தவனிடம் எப்படி வழி கேட்பது? இருப்பினும் வரைபடத்தைக் காட்டி வழி கேட்டோம். அவனும் அதைப்பார்த்து விட்டு ஒரு திசையில் கை நீட்டி அத்திசையில் தொடர்ந்த சாலைவழி செல்லச் சொன்னான். அதிர்ஷ்டவசமாக அந்தச் சாலை வளைவிலேயே விடுதி தென்பட்டது. அதற்குள் இன்னொரு நடுத்தர வயதுக்காரர் "நீங்கள் இந்த விடுதியைத்தான் தேடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்" என்று கூறி கைகாட்டிவிட்டுச் சென்றார். பரவாயில்லை , இந்த ஊரில் உதவும் மனப்பான்மை சற்று அதிகமாகவே இருக்கிறது என்று எண்ணியபடியே விடுதியை அடைந்து ஓய்வெடுத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலையில் எழுந்து தயாராகி காலை உணவிற்காக விடுதியின் உணவகத்திற்குச் சென்றபோது, அதே கறுப்பு உடையில் இளைஞர்கள் பலர் உறக்கம் கலையாத கண்களுடன் தென்பட்டனர். இரவு முழுதும் ஆட்டம் , பாட்டம் கொண்டாட்டம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் நாங்கள் சென்றது ஹெல்ஸின்கி நகரின் சின்னம் போல் விளங்கும் ஒரு தேவாலயம். நகரின் முக்கியப்பகுதியான ஸெனட் சதுக்கத்தில் இது அமைந்துள்ளது. இந்த ஸெனட் சதுக்கத்தில் தான் அரசு கட்டிடங்கள் , பல்கலைக் கழகம், நூலகம் போன்றவை அமைக்கப்பட்டிருக்கின்றன, இத்தனை கட்டிடங்களுக்கும் மகுடம் வைப்பது போல் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த தேவாலயம். கிறித்துவ மதத்தின் ஒரு பிரிவான ப்ரொட்டெஸ்டென்ட் இனத்தின் மற்றொரு உட்பிரிவு லூதரின். அதாவது மார்டின் லூதர் கருத்துக்களை ஒட்டி அமைந்த ப்ரொட்டெஸ்டென்ட் இனம்; அதன் கோட்பாடுகளை பின்பற்றிக் கட்டப்பட்ட தேவாலயங்களுள் இது மிகவும் பிரசித்தி பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/cathedral.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன், பின்லாந்து ரஷ்யர்களின் வசமிருந்த போது இது கட்டப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரபலமாய் விளங்கிய நியோகிளாசிகல் (Neo Classical) முறைப்படி ( பழங்காலக் கிரீக்க மற்றும் ரோமானிய முறையைப் பின்பற்றியது என்கிறார்கள்) இக்கட்டடம் கட்டப்பட்டதாம். இதனைக் கட்டியவர் கார்ல் லுட்விக் எங்கெல்(Karl Ludwig Engel) எனும் ஜெர்மானியர். தரையிலிருந்து சற்று உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தின் முகப்பில் நிறைய படிகள். கவிழ்த்து வைத்த கொப்பரை போலப் பச்சை வண்ணக் கலசம்; தாமிரத்தாலானது. அதனைச் சுற்றியும் நான்கு சிறிய கூம்புக் கலசங்கள். தேவாலயத்தின் முகப்பில் அமைந்த தூண்கள் கம்பீரமாய் நிற்கின்றன. தூய வெள்ளையிலும், பச்சைக் கலசங்கள் கொண்ட உச்சியுமாய்ப் பளீரென்று வசீகரிக்கின்றது. பின்லாந்து நாட்டில், சுற்றுலாப்பயணிகளால் அதிக அளவு புகைப்படங்கள் எடுக்கப்பட்ட சின்னம் இது என்ற பெயரும் பெறுகிறது. தேவாலயத்தின் முன் பரந்த வெற்று வெளி. அந்த வெளியின் நடுவே ட்ஸார் அலெக்ஸாண்டரின் சிலை அமைக்கப் பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சின்னத்தைக் கடந்து முன்னேறிச் செல்கையில் கடல் தென்பட்டது. மணல் பதியும் கடற்கரை கொண்ட இடமல்ல, கப்பல்களும் சிறிய, பெரிய ரகப் படகுகளும் வந்து நிற்கும் துறைமுகப் பகுதி. இவ்விடத்தை ஒட்டிய பகுதியில் காய்கறி, பழங்கள் மற்றும் மீன்கள் விற்கும் சந்தை சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹெல்ஸின்கியைச் சுற்றிலும் சிறிதும் பெரிதுமாய் ஏராளமான தீவுக் கூட்டங்கள்(Archipelago) உண்டு. அம்மாதிரித் தீவுக்கூட்டங்களில் முக்கியமானது சுவோமென்லின்னா(Suomenlinna) எனப்பெயர் பெற்றதாகும். ஸ்வீடிஷ்-ல் இதை ஸ்வேபொர்க்( Sveaborg) என்று அழைக்கிறார்கள். ஐந்து தீவுகள் ஒட்டி அமைந்திருக்கின்றன. பழமை வாய்ந்த கடல் கோட்டை ஒன்றும் இங்கு உள்ளது.&lt;br /&gt;அடுத்த பதிவில் மேலும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-110790452285438918?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/110790452285438918/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=110790452285438918' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/110790452285438918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/110790452285438918'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2005/02/1.html' title='பின்லாந்து - 1'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-110738222840806760</id><published>2005-02-06T13:59:00.000+01:00</published><updated>2005-02-06T14:06:58.623+01:00</updated><title type='text'>பாலம் - 2</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/bridge-2.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோபன் ஹேகன் செல்லும் விமானங்களில் நீங்கள் பயணம் செய்தால், தரையிறங்கும் போது விமானச் சன்னல் வழியாக வெளியே பாருங்கள். அன்றைய வானிலை தெளிவாயிருந்தால் நீல நிறக் கடலும், கடலின் ஊடே ஓடும் ஒரு பாலமும் அழகாய்க் கண்ணில் விரியும். கடல் நடுவே திடீரென்று பாலம் மறைந்து போவதையும் பார்ப்பீர்கள். நடுக்கடலில் உயரமான நான்கு தூண்கள் பாலத்திற்கு மேல் வளர்ந்து கொண்டிருப்பதும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/pylons.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகிலேயே இரண்டாவது நீளமான தொங்கு பாலம் ( Suspension Bridge) இதுதான். சுமார் 1.6 கீலோமீட்டர் நிளத்தில் அமைந்தது இந்த கம்பி தாங்குப் பாலம் (Cable-stayed). உயர் இழுவிசை(Hyper tension) கொண்ட இக்கம்பிகளைத் தாங்கும் தூண்கள் (Pylons) இரு நூறு மீட்டர் உயரத்திற்கும் மேல் கம்பீரமாய் நிற்கின்றன. ஸ்வீடனின் மிக உயர்ந்த கட்டிட அமைப்பு இந்தத் தூண்கள் எனலாம். இந்தத் தொங்கு பாலத்தின் இரு புறமும் இணைபவை அணுகு பாலங்கள் (Approach bridges) . ஸ்வீடனின் மேற்குப்பகுதியிலிருந்து தொங்கு பாலத்தில் இணைவது ஒன்று; பாலத்தைத் தாங்க 120 மீட்டர் இடைவெளியில் அமைந்த தூண்கள் நான்கு கிலோமீட்டர் நீளத்திற்குத் தொடர்ந்து தொங்கு பாலத்தில் முடிகிறது. தொங்குபாலத்தின் முடிவில் தொடரும் மற்றொரு அணுகு பாலம் மூன்று கிலோமீட்டர்கள் நீளமுடையது. நூற்று நாற்பது மீட்டர் இடைவெளியிலமைந்த தூண்கள் இப்பகுதியைத் தாங்குகின்றன. கடல் மட்டத்திற்குக் கீழ் பதினைந்து மீட்டர் ஆழத்திற்குச் செல்வன இத்தூண்கள். கடலுக்குள் செயற்கையாய் அமைக்கப்பட்டிருக்கும் தீவுப்பகுதியில் இந்த அணுகு பாலம் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/rail.jpg" /&gt;&lt;br /&gt;படம்: பாலத்தின் கீழ் தளம் , இரயில் பாதை&lt;br /&gt;&lt;br /&gt;கடலின் மேலே ஓடிக்கொண்டிருந்த பாலம் கடலுக்குள் ஓடி முகம் புதைத்துக்கொள்ளுவது போன்ற ஒரு தோற்றம். பாலம் சுரங்கப்பாதையாய்த் தொடர்வதற்கு ஏதுவாய் இந்தச் செயற்கைத் தீவுப்பகுதி அமைக்கப்பட்டிருக்கிறது. மேலடுக்கில் சாலையும், கீழடுக்கில் இருப்புப்பாதையுமாய் அமைந்த பாலத்தின் உருவம் இத்தீவுப்பகுதியில் மாற்றம் கொள்கிறது. சாலையும் இரயில் பாதையும் இணையாகச் சிறிது தூரம் செல்கின்றன. இத்தீவின் நீளம் சுமார் நான்கு கிலோமீட்டர்கள். கடலுக்குள் நிலப்பகுதியை உருவாக்க ஏகப்பட்ட மணலும் கல்லும் தேவைப்பட்டன.ஏழு மில்லியன் கன மீட்டர் மணலும் ஒன்றரை மில்லியன் கன மீட்டர் கற்களும், பாலம் அமைக்கையில் தோண்டப்பட்ட கடலடி மண்ணும் இப்பகுதியில் கொட்டப்பட்டு நிலமானது.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிலிருந்து ஆரம்பிக்கும் சுரங்கப்பாதை கோபன்கேஹன் நகரின் கிழக்குக்கரையில் முடிகிறது. இந்தச் சுரங்கம் நான்கு குழாய்களைக்கொண்டது. இரண்டு சாலைக்குழாய்கள் , இரண்டு இரயில் பாதைக்குழாய்கள். அனைத்தும் ஒருவழிப்பாதைகள். நான்கு கிலோமீட்டர் நீளச் சுரங்கத்தில் அவரச வழிகள் 88 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டிருக்கின்றன, இந்த நான்கு குழாய்கள் தவிர அவசர காலத்தில் பயன்படுத்தும் ஒரு பாதையும் சுரங்கத்தை ஒட்டியே அமைக்கப்பட்டிருக்கிறது. சுரங்கத்தின் உட்சுவர்கள் எளிதில் தீப்பிடிக்காத பொருட்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;தொடரும் இரயில் பாதை கோபன் ஹேகனின் விமான நிலையம் வழியே சென்று நகரின் மையத்தை அடைகிறது. விமான நிலையத்தின் அடித் தளத்திலேயே இரயில் நிறுத்தம் அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/tunnel.jpg" /&gt;&lt;br /&gt;மேலே படம்: வாகனங்கள் செல்லும் சுரங்கப்பாதை&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்பாலம் கட்டி முடிக்க இரண்டு பில்லியன் ஈரோ செலவானது.கி. பி 2000 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதி போக்குவரவுக்குத் திறக்கப்பட்டது.டென்மார்க்கும் ஸ்வீடனும் பனியுலகுக் காலத்தில் (Ice Age) உறைபனியின் மூலம் இணைக்கப்பட்டிருந்தனவாம். இரு நாடுகளும் சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்குப் பின் இந்தப் பாலம் மூலம் மீண்டும் தரைவழியால் இணைக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/malmo-sea008.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சில தகவல்கள், குறிப்புகளாய்.&lt;br /&gt;&lt;br /&gt;1. ஒருமுறை இப்பாலத்தைக் கடப்பதற்கு முப்பது ஈரோ நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பாலத்தை அடிக்கடி கடக்கும் டாக்ஸிகளுள் உணர்வி (Sensor) ஒன்று பொருத்தப் பட்டிருக்கும் . சுங்கம் வசூலிக்கும் இடத்துக்கருகே வந்ததும் இந்த உணர்வியை டாக்ஸி ஓட்டுனர்கள் இயக்குகிறார்கள். டாக்ஸியின் தகவல்கள் உடனடியாய்ப் பறிமாறப்பட்டு கடன் அட்டைகள் மூலம் கட்டணம் வசூலாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2.பாலப்போக்குவரவு துவங்குவதற்கு முதல் மாதம் 21 கிலோமீட்டர் தூர மராத்தான் ஓட்டம் பாலம் வழியாய் நடைபெற்றது. எண்பதாயிரம் பேர் இதில் பங்கேற்றனர். வருடந்தோரும் கோடையில் இந்த ஓட்டம் நடைபெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;3. பாலம் திறக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் பத்து லட்சம் வாகனங்கள் இதனைக்கடந்து சென்றன. மூன்று ஆண்டுகளில் ஒரு கோடி வாகனங்கள் பாலம் மீது பயணம் செய்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;4. மோசமான வானிலை, சூறைக்காற்றுக்கள் வீசும் சமயங்களிம் தற்காலிகமாய்ப் பாலப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சில வேளைகளில் சுரங்கப் பாலத்தில் தீப் பிடித்ததாய் வதந்தி நிலவியும் போக்குவரவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;5. சர்வதேச பாலங்கள் மற்றும் கட்டுமானப் பொறியியல் அமைப்பு (IABSE) , 2003 -ஆம் ஆண்டின் சிறந்த பாலமாக ஒர்ஸுன்ட் பாலத்தைத் தேர்ந்தெடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-110738222840806760?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/110738222840806760/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=110738222840806760' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/110738222840806760'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/110738222840806760'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2005/02/2.html' title='பாலம் - 2'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-110665216037436027</id><published>2005-01-25T13:20:00.000+01:00</published><updated>2005-01-25T12:54:01.996+01:00</updated><title type='text'>பாலம் - 1</title><content type='html'>நான் வசிக்கும் &lt;strong&gt;மால்மோ&lt;/strong&gt; ஸ்வீடனின் தென்பகுதியிலுள்ள நகரம் . இது ஸ்வீடனின் மூன்றாவது பெரிய நகரம். ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோம், மால்மோவிலிருந்து சுமார் அறுநூறு கிலோமீட்டர் தொலைவில் அமைகிறது. மால்மோ மூன்றாவது பெரிய நகரம் என்றாலும் மிகப் பெரிய நகர் அல்ல. ஒரு குட்டி விமான நிலையமே உள்ளது. இங்கிருந்து டென்மார்க் மிகவும் அருகாமையில் அமைந்திருக்கிறது. டென்மார்க்கின் தலைநகர் &lt;strong&gt;கோபன்ஹேகன்&lt;/strong&gt; மால்மோவிற்கு மேற்கே அமைந்த ஒரு பெரு நகரம். மால்மோ வையும் கோபன்ஹேகனையும் பிரிப்பது பால்டிக் கடல். கடல் பிரிக்கும் இந்தப்பகுதிக்கு ஒர்ஸுண்ட் (Oresund) என்று பெயர். ஐந்தாண்டுகளுக்கு முன் வரை கோபன்ஹேகனுக்குப் பயணம் செய்யச் சாலை வழி எதுவும் இல்லை. கடல் வழிதான். கோபன்ஹேகனில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்வதற்கோ , மற்ற சரக்குப் போக்குவரத்து மேற்கொள்ளுவதற்கோ கப்பற்போக்குவரத்தையே முற்றிலும் நம்பியிருந்த நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/oresund.gif" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இக்கடலின் குறுக்காக ஒரு பாலம் அமைத்தால் போக்குவரத்துக்கு மிகவும் வசதியாக இருக்குமே என்று இரு நாட்டு அரசுகளும் நீண்ட காலமாகவே யோசித்து வந்தன. இறுதியாக அத்திட்டத்துக்கு செயல் வடிவம் கொடுக்கப்பட்டது. கி. பி 1990-ல் இறுதித் திட்டம் வகுக்கப்பட்டு மால்மோவிற்கும் கோபன்ஹேகனுக்கும் இடையே கடலின் மீது பாலம் அமைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டன. திட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றால் மிகப்பெரும் நன்மைகள் இரு நாடுகளுக்கும் கிட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சுற்றுலா, கலை, பண்பாடு , வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி ஆகிய துறைகளுள் இரு நாடுகளும் மேலும் நெருங்கி வெருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாய் இரு அரசுகளும் அறிவித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கடலில் சுமார் பன்னிரெண்டு கிலோமீட்டர் நீளத்துக்குப் பாலம் அமைப்பது எளிய காரியமன்று. இது சாலை மற்றும் இரயில் செல்லும் இருப்புப்பாதை என ஈரடுக்குப் பாலமாக, அமைக்க முடிவானது. மேல்தளத்தில் சாலையும் கீழ்தளத்தில் இரயில் பாதையும் அமைப்பதற்கென வேலைகள் விறுவிறுப்பாய் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் கடல்பாலம் கட்டும் கட்டுமானப் பணிகளிலுள்ள சவால்களைச் சமாளிப்பதைவிட இப்பாலம் கட்டுவதற்கு எழுந்த எதிர்ப்புகளைச் சமாளிப்பது இரு அரசுகளுக்கும் பெரிய சவலாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடலின் நடுவே இப்பாலம் கட்டப்பட்டால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என்று பல்வேறு அமைப்புகள் அச்சம் தெரிவித்தன. இப்பகுதியில் உள்ள அரிய பல பறவையினங்களுக்கு பாதிப்பு நேரும் என்றனர். பால்டிக் கடலின் அடியில் உள்ள இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதோடு கடல் நீரின் ஓட்டம் இதனால் தடைப்படும் என்றும், பாலம் கட்டப்படுவதால் ஏற்படப்போகும் மாசு மற்றும் வேதிப்பொருட்களினால் மீனினங்கள் மாண்டுவிடும் என்றும் கிளர்ச்சிகள் எழுந்தன. கடல் நீரின் உவர்ப்புத்தன்மையில் (Salinity) மாறுதல் ஏற்பட்டுச் சூழியல் சமனிலையின்மை நிலவும் என்றும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பசுமையமைதி அமைப்பும் (Green Peace) எதிர்ப்புத் தெரிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரு நாட்டு அரசுகளும் இப்பிரச்சினைகளை விவாதிக்க சிறப்பு விசாரணைகளை நடத்தின. சூழல் மாசுபடாவண்ணம் பாலத்தைக் கட்டிக்கொள்ளும் வகையில் பாலம் கட்டும் திட்டத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. பெரும்பான்மையான அமைப்புகளிடம் ஒப்புதல் பெறப் பட்டது. ஆனால் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஒலோஃப் யோஹன்ஸன் (Olof Johansson) என்பவர் தனது பதவியைத் துறந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்த எதிர்ப்புகளுக்கிடையில் கட்டுமானப்பணிகள் தொடங்கின. முதலில் வகுத்திருந்த திட்டத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. கடல் மீது எட்டு கிலோமீட்டருக்கு ஒரு பாலம், பின்னர் கடலுக்குள் நான்கு கிலோமீட்டர் நீளத்தில் ஒரு சுரங்கப்பாலம் மற்றும் கடற்பாலத்திலிருந்து சுரங்கப்பாலம் இணையுமிடத்தில் ஒரு செயற்கைத்தீவு ஆகியவை அமைக்க முடிவானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/imgDVay5f.gif" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பதிவிலும் "பாலம்" தொடர்கிறது.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-110665216037436027?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/110665216037436027/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=110665216037436027' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/110665216037436027'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/110665216037436027'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2005/01/1.html' title='பாலம் - 1'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-109822413208884029</id><published>2004-10-22T01:01:00.000+02:00</published><updated>2005-01-25T12:30:58.733+01:00</updated><title type='text'>ப்ரஸ்ஸல்ஸ் - சிறுவனின் சிறுநீர் </title><content type='html'>பெல்ஜியத்தின் தலைநகரம் ப்ரஸ்ஸல்ஸ் (Brussles). ஐரோப்பியக் கூட்டமைப்பின்(European Union) தலைநகரமும் இதுதான். இந்த நகரத்தில் உள்ள சின்னஞ்சிறு சிலையே "மான்னிகென் பிஸ்"( Manneken Piss) , ஆனால் சுற்றுலாப்பயணிகள் அனைவரையும் வசீகரிக்கும் சிலை. ஒரு சிறுவன் சிறுநீர் கழிப்பது போல் அமைந்த சிறிய வெண்கலச் சிலை. அச்சிறுவன் மேடையிலிருந்து கீழிருக்கும் கற்தொட்டியில் சிறுநீர் கழித்துக் கொண்டே இருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/manpiss.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரஸ்ஸல்ஸ் நகரின் புகழ்பெற்ற அரண்மனைகள் சூழ்ந்துள்ள பகுதி The Grand Place . நடுவில் ஒரு பெரிய திறந்த வெளி , அதைச் சுற்றிலும் மூன்று புறமும் உயர்ந்த மாளிகைகள். அதனைக் கடந்து சுமார் நூறு மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மான்னிகென் பிஸ். "Manneken Piss " என்றால் சிறுவனின் சிறுநீர் என்று பொருள்.இந்தச் சிலை எதற்காக இங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதைப்பற்றிப் பல கதைகள் கூறப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பதினான்காம் நூற்றாண்டு முதல் இச்சிலை இதே இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது என்று செய்திகள் தெரிவித்தாலும் பதினாறாம் நூற்றாண்டு முதலே இச்சிலை பற்றிய குறிப்புகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;செல்வந்தர் ஒருவர் தனது மகனைக் காணாமல் தேடி அலைந்தாராம். அந்த ஐந்து வயதுச்சிறுவன் தொலைந்த ஐந்து நாட்கள் கழித்து ஓரிடத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கையில் கண்டுபிடித்தாராம். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் அந்த இடத்தில் சிலை அமைத்தார் என்பது ஒரு கதை.&lt;br /&gt;எதிர்பாராத விதமாய் எப்படியோ அந்தக் குறிப்பிட்ட இடத்தில் தீப்பற்றிக் கொள்ள அவ்வழி சென்ற ஒரு சிறுவன் சிறுநீர் கழித்து அத்தீயை அணைத்தானாம். தீயை எரிய விட்டிருந்தால் தீ பரவி நகர் முழுதும் சாம்பல் ஆகியிருக்குமாம். தீ விபத்திலிருந்து நகரைக் காப்பாற்றிய அச்சிறுவன் நினைவாய் அச்சிலை அமைக்கப்பட்டது என்பது மற்றொரு கதை. பெரும்பாலானவர்கள் நம்பும் கதையும் இதுதான்.&lt;br /&gt;தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஏழைச் சிறுவன் ஒருவன் , உணவு கேட்க எண்ணி ஒரு மந்திரவாதிக்கிழவனின் வீட்டுக்கதவைத் தட்டினான். கோபங்கொண்டு வெளியே வந்த கிழவன் , எல்லா நேரமும் சிறுநீர் கழித்துக்கொண்டே இருக்க அச்சிறுவனைச் சபித்தானாம். அதன் காரணமாய் அமைந்த நிகழ்வென்பது இன்னுமொரு கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/Manneken20piss.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதினாறாம் நூற்றாண்டில் ஜெரோமி துகொஸ்னொய் (Jérôme Duquesnoy) எனும் சிற்பி வடித்த இச்சிலை வெகு நாட்களுக்குப் பாதுகாப்பாய் இருந்தது. கி.பி 1695-ல் பிரெஞ்சுக் காரர்கள் தாக்கிய போது இச்சிலையை பொதுமக்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்தனராம். பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலேயர்களால் எடுத்துச் செல்லப்பட்டுப் பின் மீட்கப்பட்டது. அதன் பின்னர் மறுபடியும் பிரஞ்சுக்காரர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். சிலையும் உடைந்து போய் விடவே நிஜ சிலையைப் போல் மாதிரி சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டு இன்று வரை அது பாதுகாப்பாய்ப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;சுருட்டை முடியுடன் அரையடி உயரத்தில் இந்த ஐந்து வயதுச் சிறுவன் எந்நேரமும் ஒரு சிறு புன்னகையுடன் சிறுநீர் இருந்து கொண்டே இருக்கிறான். ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அவனைக் கண்டு மகிழ்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சிறுவனின் உடைகள் சுமார் அறுநூறு தேறும். விதவிதமான உடைகள் தினசரி அணிந்து மக்களுக்குக் காட்சி தருகிறான். பண்டிகைக் காலங்களில் அதற்கேற்றாற்போல் உடையணிந்து கொள்கிறான். கிறிஸ்துமஸ் தாத்தா போல் , போர் வீரன் போல், எல்விஸ் போல், மொஸார்ட் போல் வெவ்வேறு வகையான உடையலங்காரங்கள். சில நாட்களில் பிறந்த மேனிதான். இவ்வனைத்து உடைகளையும் பார்க்க சிறப்பு மியூஸியமும் உண்டு. கி.பி 1747-ல் பிரெஞ்சு மன்னர் பதினைந்தாம் லூயி பரிசளித்த உடைதான் மிகப் பழமையானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு தகவல்: இச்சிறுவனின் பிரபலம் கண்டு பொறுக்காத ஒரு ஆசாமி Jeanneke Pis என்ற பெயரில் ஒரு சிறுமியின் சிலையை 1980-ல் அமைத்தாராம். ஆனால் அது இந்த அளவுக்குப் பிரபலம் அடையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-109822413208884029?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/109822413208884029/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=109822413208884029' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109822413208884029'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109822413208884029'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/10/blog-post.html' title='ப்ரஸ்ஸல்ஸ் - சிறுவனின் சிறுநீர் '/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-109718802635507919</id><published>2004-10-18T23:07:00.000+02:00</published><updated>2005-01-25T13:17:18.216+01:00</updated><title type='text'>லக்ஸம்பர்க் - 3</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/Vianden.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பியான்டன்(Vianden) செல்லும் சாலையும் வளைவுகள் நிரம்பியதாய் இருந்தது. அன்று மதியம் வரை இருந்த மந்த வானிலை மாறி வெய்யில் சுள்ளென்று அடிக்க ஆரம்பித்ததில் குளிர் விட்டு விலகியோடியது. எட்டில்ப்ருக்கிலிருந்து சுமார் ஒரு மணி நேரப்பயணத்தில் பியான்டன் அடைந்தோம். எங்கிருந்து பார்த்தாலும் மலைக்குன்றின் உச்சியில் இருந்த கம்பீரமான மலைக்கோட்டை மனதை மயக்கியது. அவர் (Our) நதிக்கரையிலமைந்த ( நதியின் பெயரே Our தான்) அழகிய கிராமம். நதியினை ஒட்டி வளர்ந்த சிறிய குன்று. உயரம் குறைவெனினும் நீளமான குன்று. குன்றின் மேலும் கீழும் வீடுகள். குன்றின் உச்சியை அடைய அமைந்த வளைந்த சரிந்த பாதைகள் . ஓரிடத்தில் மிதவைப்பயணம் இருந்தது. குன்றின் உச்சியை அடைய ஐந்து நிமிடங்கள் ந்டுத்துக்கொள்ளும் கேபிள் மிதவை. மேலே எழும்புகையில் பியான்டன் நகரின் இயற்கை தெளிவாய் விரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/Vianden-cable.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உச்சியை அடைந்ததும் கோட்டை சற்றே அருகில் தென்பட்டது. கேபிள் பயணம் நிறைவுறும் உச்சியிலிருந்து கோட்டைக்கு நடந்து செல்ல ஒரு ஒற்றையடிப்பாதை. பாதையின் இருபுறங்களிலும் ஓங்கி வளர்ந்த மரங்கள், உடைந்த கிளைகள், சிதறிய சருகுகள். அது சமதளமாய் அமைந்த பாதையல்ல, சரிவாய் அமைந்த பாதை . கோட்டை, மலையுச்சியிலிருந்து சற்று உயரம் குறைந்த இடத்தில் அமைந்திருப்பதால் சற்றே கீழிறங்கிச் சென்ற அப்பாதையில் இருபது நிமிட நடைக்குப்பின் கோட்டை வாசலை அடைந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/Vianden8.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பலமுறை புதுப்பிக்கப் பட்ட கோட்டை இது. பதினொன்றாம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பிக்கப் பட்டதாம். பதினான்காம் நூற்றாண்டில் வேலைகள் நிறைவடைந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் சிதைவடைந்த இக்கோட்டை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது, இன்றும். ரோமானிய முறைப்படி கட்டப்பட்ட இப்பெரிய கோட்டையில் இருபத்தி இரண்டு அறைகள்,கோட்டையின் மொத்த நீளம் 90 மீட்டர். எண்கோண வடிவில் அமைந்த ஒரு அறை வித்தியாசமானது. தொழுகை நடத்துமிடமும் (Chapel)அதையொட்டி அமைந்த பிரசங்க அறையும் (Oratory) இந்த எண்கோண அறையில் உண்டு.சுற்றிலும் ஆறு வாசல்கள் .உயரமான ஆர வளைவுத் தூண்கள் கம்பீரமாய் நின்றன. அதைத் தொடர்ந்த பெரிய அறை போர்வீரர்களின் அறையாம் (Knight's Room). நிறைய ஓவியங்களும், சிலைகளும் இருந்தன. அந்நாளில் போர்வீரர்கள் அணிந்த கவச உடைகள் வைக்கப்பட்டிருந்தன. நுண்ணிய இரும்பு வளையங்களான கவச உடை பதினாலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாம். இது தவிர மற்ற போராயுதங்களும் காணக் கிடைத்தன.வழக்கமாக எல்லா அரண்மனைகளிலும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் இங்கும் இருந்தன. மன்னர்கள் பயன்படுத்திய கட்டில்கள், மேசை, நாற்காலிகள் , வாட்கள் முதலியன அவற்றுள் சில. அந்தக்காலத்து சமயலறையும் பழமை கெடாமல் அப்படியே இருக்கிறது. சமையல் செய்யும் ஏவலாளிகள் போல் மெழுகு பொம்மைகள் வைத்து அடுப்பில் சமைப்பது, கறி வெட்டுவது போன்ற நிகழ்ச்சிகளை கண்முன் நிறுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரண்மனையின் வெளியிலிருந்து எந்தப்பக்கம் திரும்பினாலும் பசுமை கொஞ்சும் மலைப்பகுதி, மலையில் சரிவாய் அமைந்த வீடுகள், சரிவாய் ஓடும் சாலைகள், மலையின் கீழ் தவழ்ந்து செல்லும் ஆறு என மனம் மயக்கும் காட்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/Vianden2.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரும்ப மனமின்றித் திரும்பினோம். கீழிறங்கிச் செல்ல மற்றொரு சாலையைத் தேர்ந்து சாலைவழி நடந்தோம். சரிவாய் அமைந்த பாதைகளில் மலைவழி பைக் ஓட்டும் பொழுதுபோக்கு (Mountain Biking) சுறுசுறுப்பாய் நடந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் நாங்கள் சென்றது பௌபோர்ட் (Beaufort) எனப்படும் சிற்றூர். இந்தப்பகுதி முல்லர்தால் (Mullerthal) எனும் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியின் நிலவமைப்பு சுவிட்சர்லாந்து நாட்டின் அமைப்பை ஒத்திருப்பதால் குட்டி சுவிஸ் (Little Switzerland) எனும் பட்டப் பெயருமுண்டு. லக்ஸம்பர்க் நகரிலிருந்து மீண்டும் ஒரு பேருந்துப்பயணம். வழக்கம் போல் மேடு பள்ளமான பசுமைப் பகுதி. வழியெங்கும் நிறைய கோல்ப் மைதானங்கள். சில இடங்கள் மரங்கள் அடர்ந்த மலைப்பகுதி. சலசலத்து ஓடும் சிற்றோடைகள் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/beaufort.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரிவாய் அமைந்த மலைப்பகுதியேலேயே இங்கும் வீடுகள். விதவிதமான பாறைகளின் அமைப்பு. மீண்டும் ஒரு பழமையான கோட்டை. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டபட்ட இக்கோட்டை மட்டும் தற்போது எஞ்சியிருகிறது. முற்றிலும் கற்கலால் ஆன கோட்டை இது. பாதாள சித்திரவதை அறைகள் பயமுறுத்தின. சிறு சிறு அறைகள், மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி வேறெதுவும் இல்லை. கற்சுவரில் ஓடிய சுவர்ப்பல்லியைப் பார்த்து அதிசயித்துக் குதூகலித்த ஒரு சுற்றுலாச் சிறுவனும் அவனது தந்தையும் கண்டு நாங்கள் சிரித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டையின் மீது ஏறி உச்சியில் நின்று சுற்றிப்பார்க்கையில் தெரிந்த அடர்ந்த காடு எங்களை அழைத்தது. ஆனால் திரும்பிச் செல்லும் விமானப் பயணம் நினைவுக்கு வர காட்டிற்கு விடை கொடுத்து கண்ணுக்கினிய காட்சிகளை எடுத்துக் கொண்டு விமான நிலையம் அடைந்து மியூனிக் செல்லும் குட்டி விமானத்திலேறி ஊர் திரும்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-109718802635507919?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/109718802635507919/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=109718802635507919' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109718802635507919'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109718802635507919'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/10/3.html' title='லக்ஸம்பர்க் - 3'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-109665676385325951</id><published>2004-10-02T01:27:00.000+02:00</published><updated>2005-01-27T12:18:24.600+01:00</updated><title type='text'>லக்ஸம்பர்க் - 2</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/bockcasemates02.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லக்ஸம்பர்க்-கின் தொட்டில் எனப்படும் இப்பள்ளத்தாக்குப் பகுதியில் இரண்டு பெரிய பாதுகாப்பு அரண்கள் கட்டப்பட்டன. போக் எனப்படும் அரண் (Bock casemates) ஒன்று, பெட்ருஸ்ஸெ பள்ளத்தாக்கில் அமைந்த மற்றொன்று. போக் அரண், பள்ளத்தாக்கின் குறுக்காகக் கட்டப்பட்ட, கற்பதுங்கறைகள் நிறைந்த ஒரு அமைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/view-casemates.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரைபடத்தில் காண்பது அதன் பக்கவாட்டு அமைப்பும் , அதன் குறுக்கு வெட்டு அமைப்பும் . முற்றிலும் கல்லால் ஆன இந்த அரணுள் ஏராளமான அறைகள். கற்கள் வளைவு வளைவாய் அமைய வெளிப்புறம் திறந்த துளைகள். ஒவ்வொரு துளைக்கருகிலும் ஒரு பீரங்கி மேடையும் அதன் மேல் ஒரு பீரங்கியும் வைக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/bockcasemates.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் ஐம்பது பீரங்கிகள் வைக்க மேடைகள் அமைக்கப்பட்டிருந்தனவாம். அதனைக்கடந்து கற்படிகளில் கீழிறங்கிச் செல்லவே வெளிச்சம் வரும் ஒரு இடம் தெரிந்தது. பால்கனி போல் அமைந்த அவ்விடம் சென்று வெளியே நோக்கினால் பள்ளத்தாக்கின் மொத்த அமைப்பும் அழகாகக் கண்களுக்குள் விரிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கைதிகளை அடைத்து வைக்கும் சிறையறைகளும் உண்டு உள்ளே நுழைந்தவுடன் இருக்கும் ஒரு பெரிய அறையில் தொல்பொருட்கள் , புகைப்படங்கள் மற்றும் அவற்றின் குறிப்புகள் பார்வைக்குக் கிடைக்கின்றன. இரண்டாம் உலகப்போரின் போது எவ்வாறு இந்தப்பள்ளத்தாக்கு ஏராளமான மக்களுக்கு பதுங்குமிடமாகப் பயன்பட்டது என அறியத்தரும் குறிப்புகள் உள்ளன. போர் விமானங்கள் வீசும் குண்டு வீச்சிலிருந்து சுமார் முப்பத்தைந்தாயிரம் மக்கள் இந்த அரண்களில் மறைந்து தப்பித்தனராம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏராளமான போர் வீரர்களுக்கும் குதிரை முதலான விலங்குகளுக்கும் பாதுகாப்பான மறைவிடம் இதுதான். ஆயுதம் செய்யும் தொழிற்சாலைகளும் சமையலறைகளும் இருந்தனவாம்.&lt;br /&gt;பதினெட்டாம் நூற்றாண்டில் மன்னரின் படைத்தளபதியாயிருந்தவரின் அறைகள், படுக்கையறை, படிப்பறை இந்த அரணுள் உள்ளது. அவர் தமது எண்பத்தியிரண்டாம் வயதில்கூட இங்குதான் இருந்தாராம்.&lt;br /&gt;1994ஆம் வருடம் யுனெஸ்கோ (UNESCO) - வின் உலக கலாச்சாரச் சின்னமாகவும் அறிவிக்கப்பட்டது இப்பாதுகாப்பு அரண்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் எஷ் சுர் ஸ்யூர் ( Esch Sur Sure) எனும் இடத்திற்குக் கிளம்பினோம்.லக்ஸம்பர்க் சுற்றுலாத்தகவல் மையத்தில் விசாரித்ததில் இவ்விடத்தில் பெரிய அழகான ஏரி ஒன்று உள்ளதென்று அறிந்தோம். லக்ஸம்பர்க் நகரிலிருந்து எட்டெல்ப்ருக் (Ettelbruck)) எனும் குறுநகர் வரை இரயிலில் சென்று அங்கிருந்து இவ்வேரிக்குப் பேருந்தில் பயணிக்க வேண்டுமென்று சொன்னார்கள். எட்டெல்ப்ருக் சென்றபிறகே , அன்றைய தினம் பேருந்துகள் ஏரிக்குச் செல்லாத விடுமுறை நாள் எனத் தெரிந்தது. ஒரு வாடகை டாக்ஸியில் ( ஆங்கிலம் தெரியாத பெண் ஓட்டுனர்) பயணித்தோம். வழியெங்கும் இயற்கை கொஞ்சும் பசும்புல் வெளிகள், ஏறி இறங்கும் நிலப்பகுதி, வளைந்து நெளிந்த பாதை என்று சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/esch-1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் முக்கால் மணி நேரப்பயணத்தில் ஏரியை அடைந்தோம். அங்கு இன்னொரு ஏமாற்றமும் இருந்தது. ஏரியில் படகு சவாரிக்கும் அன்றைய தினம் விடுமுறை ( ஈஸ்டர் தினம்). இருப்பினும் ஏரியை ஒட்டிய மலைப்பாதைகள், ஏரியின் குறுக்கே ஓடிய பாலங்கள், அதை ஒட்டிய மலைப்பகுதியில் இருந்த மரங்களடர்ந்த காடு , புல் வெளிகள் என்று இயற்கை அழகிற்குக் குறைவில்லை. இந்த ஏரி லக்ஸம்பர்க் நகருக்கு நீர் வழங்கும் ஏரியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/esch_sure_lake.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மரங்களடர்ந்த வனப்பகுதியில் நடந்து சுற்றுகையில் எனது செல்பேசியைத் தவறவிட்டது தெரியவந்தது.ஒரு வேளை நாங்கள் வந்த டாக்சியில் தான் தவறியிருக்கும் என யூகித்து மீண்டும் அதே டாக்சி நிறுவனத்திற்கு ( எனது மனைவியின் செல்பேசி கொண்டு) அழைத்து விசாரித்ததில் செல்பேசி அங்குதான் இருந்தது. திரும்பிச் செல்ல மீண்டும் டாக்சியை வாடகைக்கு அழைத்து செல்பேசியையும் திரும்பப் பெற்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டெல்ப்ருக்கிலிருந்து பியாண்டன் (Vianden) எனும் சிறு நகருக்கு அடுத்த பயணம். V- ஐ இங்கு "FO" என்றுதான் உச்சரிக்கிறார்கள்( ஜெர்மனியிலும்தான்). பேருந்து வசதி இருந்தது. பியாண்டன் ஜெர்மனியின் எல்லைக்கருகில் அமைந்த ஒரு அழகிய சிற்றூர். மலை மேல் அமைந்த ஒரு மலைக்கோட்டை இதன் முக்கிய சுற்றுலாத்தலம். அது பற்றி அடுத்த பதிவில்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-109665676385325951?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/109665676385325951/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=109665676385325951' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109665676385325951'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109665676385325951'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/10/2.html' title='லக்ஸம்பர்க் - 2'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-109580104328645530</id><published>2004-09-23T01:07:00.000+02:00</published><updated>2006-05-06T19:44:49.946+02:00</updated><title type='text'>லக்ஸம்பர்க் - 1</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/luxembourg.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லக்ஸம்பர்க்- மத்திய ஐரோப்பாவிலுள்ள ஒரு குட்டி நாடு. மொத்த மக்கள் தொகையே நாலரை இலட்சம்தான். இரண்டாயிரத்து ஐநூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இந்நாட்டின் மூன்றின் ஒரு பகுதி வனப்பகுதியாகும். சிறிய நாடென்றாலும் இயற்கை அழகு கொழிக்கும் நாடு இது. ஜெர்மனி, பிரான்ஸ் , பெல்ஜியம் ஆகிய நாடுகள் லக்ஸம்பர்க்-கைச் சூழ்ந்துள்ளன. இதனால் பண்டைய நாட்களில் இந்த நாடுகளுள் ஏதேனும் ஒரு நாட்டுக்குட்பட்ட பகுதியாகவே இருந்து வந்திருக்கிறது.&lt;br /&gt;சென்ற வருடம் (கி .பி 2003) ஈஸ்டர் விடுமுறை நாட்களில் லக்ஸம்பர்க் நாடு செல்லத் திட்டமிட்டோம் நானும் எனது மனைவியும். பயணம் திட்டமிடப்பட்ட போது எங்கள் திருமணத்திற்கு நான்கு மாதங்கள் இருந்தன. எனவே " திருமணத்திற்கு முன்னே தேனிலவா?" என்று அனைவரின் கேலிக்கும் ஆளானோம். ஜெர்மனிக்கு அருகில் இருந்தாலும் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் இல்லாதது என்றே பரவலாக அறியப்பட்டிருந்த நாடு லக்ஸம்பர்க். எனது ஜெர்மன் நண்பர் ஒருவர் இதுவரை அங்கே சென்றதில்லை என்று கூறி எங்கள் பயணம் குறித்து ஆச்சரியம் தெரிவித்தார். மியூனிக் நகரிலிருந்து அந்நாட்டின் விமானம் லக்ஸ் ஏர் (Lux Air) மூலம் பயணம் செய்தோம். சிறிய விமானம். விமானத்தினுள் இருந்த பயணக் கையேட்டினை புரட்டுகையில் சென்ற வருடம் விபத்துக்குள்ளான லக்ஸ் ஏர் விமானத்தைப் பற்றிய செய்தி சிறிது பயமூட்டியது. ஒரு மணி நேரப்பயணம் என்றாலும் , நடுவில் சார்புருக்கன் எனும் ஜெர்மானிய நகரில் இறங்கி ஆட்களை ஏற்றிக்கொண்டு ( டவுன் பஸ் போல) மீண்டும் பறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;லக்ஸம்பர்க் நாட்டின் தலைநகர் பெயரும் லக்ஸம்பர்க் தான். லக்ஸம்பர்க் நகர் என்று இதனை அழைக்கிறார்கள். பேசும் மொழி லக்ஸம்பர்கிஷ் என்றாலும் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகள் பரவலாகப் பேசப்படுகின்றன. நகரின் மொத்த மக்கள் தொகை எண்பதாயிரம். சுமார் இருநூறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனக்கள் இயங்குகின்றன. சிறிதும் பெரிதுமாய் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு வங்கி கண்ணில் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நகரின் மையத்திலிருந்து நடக்க ஆரம்பித்தால் ஒரு சராசரி ஐரோப்பிய நகரின் காட்சிகள் அனைத்தும் இங்கும் வழி நெடுகத் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/luxem31_r.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வித்தியாசமான சிலைகள் , மியூஸியங்கள் ,தேவாலயங்கள் , அரண்மனைகள், அரண்மனைக்கு வெளியே காவல் செய்யும் சீருடைக் காவலாளிகள் , காவலாளிகள் வேலை முடிந்து அடுத்த காவலாளி பொறுப்பேற்கும் போது செய்யும் அணிவகுப்பு என வழக்கமான காட்சிகள். இளவேனிற்காலம் அப்போதுதான் தொடங்கிய ஏப்ரல் மாதம். அன்றைக்குச் சற்றே குளிராக இருந்தது. அந்தக் குளிரில் விறைப்பாய் நாளெல்லாம் நிற்கும் காவலாளியைக் காண சற்றே பாவமாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நகரின் தென்பகுதியிலுள்ள பள்ளத்தாக்கு மிகவும் சுவாரஸ்யமானது. இயற்கையாகவே அமைந்த இப்பள்ளத்தாக்கினைச் சுற்றியும், அதன் உள்ளும் பண்டைய காலத்து மன்னர்கள் நிறைய கோட்டைகள் , மறைவிடங்கள் மற்றூம் தேவாலயங்களை அமைத்தனர். கி பி 963 -ல் கவுன்ட் ஸீக்பீல்ட் எனும் மன்னர் இந்தப் பள்ளத்தாக்கினைச் சுற்றிலும் கற்சுவர்களைக் கட்ட ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/vallei.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதிரிகள் தாக்குகையில் பதுங்கிக் கொண்டு மறைவிடங்கள் மூலம் திரும்பித்தாக்கும் வண்ணம் கோட்டைகள் கட்ட ஆரம்பித்தனர். இருப்பினும் பின் வந்த நான்கு நூற்றாண்டுகளுக்கு லக்ஸம்பர்க் அந்நியர் வசம் இருந்தது. அவர்களும் இந்தப் பள்ளத்தாக்கினுள் பல கோட்டைகள் கட்டினர். நீறூற்றுக்கள், பசும் புல் வெளிகள் ,மரங்கள் , உறுதியான கற்சுவர்கள் , சலசலத்து ஓடும் சிறு ஓடை என்று இன்றும் பழமை மாறாமல் இருக்கிறது. வடக்கு ஜிப்ரால்டர் என்றே இந்த நகருக்குப் பெயர் வந்தது இந்த நில அமைப்பினால் என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/Luxemburg_city_Place_de_la_Constitution2.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கால்கள் வலிக்கும் வரை( வலித்த பின்னும்) இந்தப் பள்ளத்தாக்கின் மேலும் கீழும் ,கோட்டைச் சுவர்களிலும் சரிந்த பாதைகளிலும் நடந்தோம். இதன் குறுக்காகக் கட்டப்பட்டுள்ள பாலங்கள் பல. இவற்றுள் வயடுக்ட் (Viaduct) எனும் பாலம் பழமையானது.இருபத்தி நான்கு வளைவுகள் (Arches) கொண்டது. பாலத்தின் மேலிருந்து பார்க்கும் போது கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிவது இப்பள்ளத்தாக்கின் அழகுதான்.போன்ட் அடோல்ப் (Pont Adolf) எனும் மற்றொரு பெரிய பாலமும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/pic301.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் இருபத்தி மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள மறைவிடம் இப்பள்ளாத்தாக்கில் கட்டப்பட்டதாம். போக் காஸிமேட் (Bock Casemates) எனப்பெயர் பெறும் இந்த குகைப் பகுதி பற்றி அடுத்த பதிவில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-109580104328645530?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/109580104328645530/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=109580104328645530' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109580104328645530'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109580104328645530'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/09/1.html' title='லக்ஸம்பர்க் - 1'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-109441761830064912</id><published>2004-09-15T00:04:00.001+02:00</published><updated>2009-03-05T16:13:49.826+01:00</updated><title type='text'>பெர்லின் சுவர் -4</title><content type='html'>செக் பாயிண்ட் சார்லி அருங்காட்சியகம். உள்ளே நுழைந்தவுடன் வண்ண வண்ண பாஸ்போர்ட்கள் வரவேற்றன. இவையனைத்தும் போலி பாஸ்போர்ட்டுகளாம். கிழக்கு ஜெர்மனியிலிருந்து தப்பித்து மேற்கு ஜெர்மனி வருவதற்கு போலியாகப் பல பாஸ்போர்ட்டுகள் தயாரித்து காவலாளிகளை ஏமாற்றினராம் . அவர்கள் பயன்படுத்திய பாஸ்போர்ட்டுக்கள் அனைத்தையும் சேகரித்து வைத்துள்ளனர். அருங்காட்சியகம் முழுவதும் பெரிய பெரிய கருப்பு வெள்ளைப்புகைப்படங்களும் அவற்றுக்கருகே அப்புகைப்படங்கள் பற்றிய குறிப்புக்களும் நிறைந்துகிடக்கின்றன. ஜெர்மன், ஆங்கிலம், ரஷ்ய மற்றும் பிரஞ்சு மொழிகளில் குறிப்புக்கள் எழுதப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு ஆண்கள் உதட்டு முத்தமிடுவது போல் இருந்த ஒரு புகைப்படம் என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது. அங்கிருந்த குறிப்பைப்படித்த பிறகே அவ்விருவரும் முன்னாள் சோவியத் குடியரசில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராயிருந்த லியோனிட் ப்ரெஸ்னெவ் மற்றும் கிழக்கு ஜெர்மனியின் கம்யூனிஸ்ட் தலைவர் எரிக் ஹோனெகெர் என்று புரிந்து கொண்டேன். இருவரும் சந்தித்தபோது சகோதரத்துவ முத்தமிட்டு தங்கள் பாசத்தை வெளிப்படுத்திய காட்சியே அது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பழைய கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இஸெட்டா (Isetta) என்னும் சிறியரகக் கார் அது. அந்த வண்டியின் பெட்ரோல் நிரப்பும் டேன்க்-கை ஒருவர் ஒளிந்துகொள்ளும் வகையில் மாற்றி அமைத்தார் அந்தக் காரின் சொந்தக்காரரான ப்ரீஸ்டோபர் என்பவர். இதை மாற்றி அமைக்க இரண்டு மாத காலமானது. தபால் எடுத்துச் செல்லும் வேலை செய்துகொண்டிருந்த இவர் இக்காரில் ஒன்பது பேரை கிழக்கு ஜெர்மனியிலிருந்து மீட்டு மேற்கே அழைத்து வந்தார். பத்தாவது முறை மாட்டிக்கொண்டாராம். 1964 ஆம் வருடத்து மாடலான இந்தக்கார் இன்னும் பார்வைக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;லாரிகளை வேகமாக ஓட்டி வந்து சுவர்களை இடிக்கும் முயற்சியும் பலமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முயற்சிகளைத் தடுக்கும் வண்ணம் சுவரின் அருகே அகழிகள் தோண்டப்பட்டு வேலி அமைத்து காவல் பலப்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;துணிகள் தைக்கும் தையல்காரர் ஒருவர் தினமும் மேற்கு ஜெர்மனியிலிருந்து கிழக்கே செல்வது வழக்கம். தையல் எந்திரத்தை ஒரு பெரிய மர டப்பாவினுள் எடுத்துச் செல்வாராம். கிழக்கு பெர்லினைச் சேர்ந்த ஒரு பெண் தப்பிக்க உதவும்படி கேட்டுக்கொள்ளவே அந்த மர டப்பாவினுள் தையல் எந்திரத்துக்குப்பதில் அப்பெண்ணை அடைத்து தனது சைக்கிளில் ஏறி ஓட்டிக்கொண்டே எல்லை கடந்தாராம். தினசரி அவர் செல்கையில் சோதனை செய்யும் காவலர்கள் சில நாட்களில் சோதிக்காமலே விட்டுவிடுவது வழக்கம். அன்றும் அதிர்ஷ்டம் அவருக்குக் கை கொடுத்தது. அப்பெண்ணும் தப்பித்தாள். சில நாட்கள் கழித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனராம்&lt;br /&gt;&lt;br /&gt;சுவரின் கீழ்வழியாக சுரங்கம் தோண்டித் தப்பித்த கதைகளும் உண்டு. கிழக்கு பெர்லினில் இருந்த சில மாணவர்கள் ஒரு வீட்டின் குளியலறையிலிருந்து சுரங்கம் தோண்ட ஆரம்பித்தனர். நூற்றி நாற்பத்தைந்து மீட்டர் நீளமான இச்சுரங்கம் மேற்கு பெர்லினில் ஒரு பேக்கரியில் முடிவடைந்தது. இச்சுரங்கம் வழியாக ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் தப்பித்தனர். ஆனால் இச்சுரங்கம் சில நாட்களிலேயே கிழக்கு பெர்லின் காவலாளிகளால் கண்டு பிடிக்கப்பட்டு மூடப்பட்டது. இதே போல் கிழக்கு பெர்லினில் மற்றொரு சுரங்கமும் தோண்டப்பட்டதாம். கல்லறையினருகே தொடங்கிய இச்சுரங்கத்தைப்பயன்படுத்தியும் பலர் தப்பித்தனர்.&lt;br /&gt;பெரிய ராட்சத பலூன்களில் காற்று நிரப்பி அதில் மிதந்தபடி வனவீதியின் வழியே தப்பிய ஒரு சம்பவமும் உண்டு. மற்றுமொருவர் ஒரு சிறிய க்ளைடர் விமானத்தை உருவாக்கி அதில் பறந்து தப்பினாராம். ரஷ்ய நாட்டு ராணுவ வீரர்கள் போல் சீருடை அணிந்த சிலர் எல்லை கடந்து செல்கையில், அவர்கள் உண்மையிலேயே ரஷ்ய வீரர்கள் என எண்ணிய கிழக்கு பெர்லின் காவலாளிகள் விரைப்பான சல்யூட் அடித்தனரம். மரியாதையை ஏற்றுக்கொண்டே அவர்கள் மேற்கு பெர்லினில் தஞ்சமானார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவரை ஒட்டியிருந்த வீடுகளும் தப்பிக்க உதவியிருக்கின்றன. மேற்குப்பகுதியிலிருந்த ஒரு பலமாடிக்கட்டடத்தின் ஜன்னலில் கட்டப்பட்ட கயிறு ஒன்றைப்பிடித்து கிழக்குப்பகுதியிலிருந்து சுவர் ஏறித் தப்பித்த நிகழ்வுகளும் உண்டு.&lt;br /&gt;சுமார் ஐயாயிரம் பேருக்கு மேல் தப்பித்த நிகழ்ச்சிகள் வரலாறு ஆகியுள்ளது. இது தவிர கிழக்கு ஜெர்மனி ராணுவத்தைச் சேர்ந்த எழுநூற்றுக்கும் மேற்பட்டவர்களும் தப்பித்து மேற்கு பெர்லினில் அடைக்கலமாயினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெர்லின் சுவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை விளக்கும் பல ஒளி-ஒலிக் காட்சிகள் சிறு சிறு அறைகளில் காட்டப்படுகின்றது. அஹிம்சை வழிப்போராட்டம்- காந்தி முதல் வலசா ( போலந்து நாட்டு அமைதிப்புரட்சியாளர்) வரை என்ற ஒரு விவரணப்படமும் அவ்வப்போது ஏற்பாடு செய்யப்பட்டுக் காட்டப்படுகிறது. பெர்லின் சுவர் பற்றிய நினைவுப் பொருட்கள் வாங்கும் சிறு கடையில் உடைந்த சுவரின் துண்டுகள் தற்போது விலைக்குக்கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏராளமான நினைவுகளைச் சுமந்து கொண்டு மியூசியம் விட்டு வெளியேறினோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-109441761830064912?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/109441761830064912/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=109441761830064912' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109441761830064912'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109441761830064912'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/09/4.html' title='பெர்லின் சுவர் -4'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-109407554955779067</id><published>2004-09-03T13:13:00.001+02:00</published><updated>2009-03-05T16:12:50.579+01:00</updated><title type='text'>பெர்லின் சுவர் -3</title><content type='html'>&lt;a href="http://picasaweb.google.com/lh/photo/f76FJ8TZ1Z-nH6ct7XTiqA?authkey=Gv1sRgCM3v_4qxyoCllQE&amp;amp;feat=embedwebsite"&gt;&lt;img src="http://lh5.ggpht.com/_R8qmlcOFr1c/Sa_mFZ48-KI/AAAAAAAACIE/QNnslq6ci-A/s800/BerlinWall.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெய்டர்கிர்ஹ்னெர் ஸ்ட்ராசே (Niederkirchner Strasse) என்னும் தெருவில் பெர்லின் சுவரின் மிச்சங்கள் இருக்கும் விவரத்தை பெர்லின் சுற்றுலாத்தகவல் மையத்தில் கேட்டறிந்து அவ்விடத்திற்குப் புறப்பட்டோம். பெர்லின் சுவர் முற்றிலுமாக நகர மக்களின் பார்வையிலிருந்து மறைந்து விட்டாலும் ஒரு சில இடங்களில் இன்னும் நினைவுச் சின்னமாகப் பாதுகாப்பதை பாராட்டியே ஆகவேண்டும். நான் மேலே குறிப்பிட்ட தெருவை ( எங்கே, அந்தப் பெயரை இன்னும் ஒருமுறை உச்சரியுங்கள் பார்ப்போம் ) அடைந்து சுவரைத் தேடி நடந்தோம். சுவரைக் காணவில்லை. தவறுதலாய் வேறு இடத்திற்கு வந்து விட்டோமா என்று ஐயுற்று, தெருப்பெயரைச் சரிபார்த்ததால், அந்தத் தெரு தான். அவ்வழி சென்ற ஒருவரைப் பார்த்து சுவர் எங்கே என்று விசாரித்தால் சற்றுத் தள்ளியிருந்த ஒரு குட்டிச் சுவரைக் காண்பித்தார். அருகில் சென்றபிறகுதான் அது குட்டிச் சுவரல்ல, வரலாற்றுச் சிறப்புமிக்க பெர்லின் சுவர் என்று தெரிந்தது. சுமார் இருநூறு மீட்டர் நீளம் மட்டும் தற்போது எஞ்சியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது மேலாளராக மியூனிக்-கில் பணிபுரிந்தவர் எரிக் எனும் அமெரிக்கர். அவரது மனைவி ஜெர்மானியர். இருவரையும் நாங்கள் பெர்லினில் சந்தித்தோம்( தற்போது அங்குதான் பணிபுரிகிறார்). பெர்லின் சுவர் கண்டு வந்ததைப் பற்றி அவரிடம் சொன்னபோது 1989 -ல் சுவர் இடிப்பதற்கு சில நாட்கள் முன் அவர்கள் இருவரும் பெர்லின் சுவரைக் காண வந்ததை நினைவு கூர்ந்தார். ஏராளமான காவலாளிகள் இருபுறமும் வரிசை கோர்த்திருக்க, பெர்லின் சுவர் நகரை இரண்டாகப் பிரித்திருந்த காட்சிகள் இன்னும் நினைவில் ஓடுவதாய்க் குறிப்பிட்டார்கள். அவர்கள் வந்து சென்ற சில நாட்களில் சுவர் தரைமட்டமாகியதில் மகிழ்ச்சியடைந்ததாய்க் கூறினார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய மேற்குப்பகுதியிலிருந்து தற்போது சுவரைப் பார்த்தால் அதன் முக்கியத்துவம் ஒன்றும் புலப்படவில்லை. மிகவும் சாதாரணமான சற்றுப் பாழடைந்த சுவர் என்று மட்டுமே எண்ணம் வரும். ஆனால் கிழக்குப் பகுதியிலிருந்து பார்க்கையில் மற்றுமொரு நினைவிடமும் சுவரை ஒட்டிக் காணப்பட்டது. பயங்கரவாதப் புவியமைவு (Topography of Terror) எனப்பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் கண்காட்சியின் நோக்கம் ஹிட்லர் காலத்து தீவிரவாதத்தை இன்றைய தலைமுறைக்கு உணர்த்தி இத்தகு போக்கை விட்டு அமைதிக்கும் சமாதானத்திற்கும் செல்லும் பாதையினைக் காட்டுவதற்குத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://picasaweb.google.com/lh/photo/mNQQa6frWHhk4T3cxw2ORA?authkey=Gv1sRgCM3v_4qxyoCllQE&amp;amp;feat=embedwebsite"&gt;&lt;img src="http://lh6.ggpht.com/_R8qmlcOFr1c/Sa_rNNNeGCI/AAAAAAAACJc/exI4da4bHkg/s800/topo.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1935-க்குப்பின் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் புகைப்படங்களாக இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. அப்பாவி மக்களை ஹிட்லரின் படையினர் ஈவிரக்கமின்றிச் சுடும் காட்சிகள் மனதை உலுக்கும். ஹிட்லரின் முதன்மைக் காவல் அதிகாரி ஹிம்லெரின் அலுவலகம் மற்றும் ஹிட்லரின் சோஷலிச அரசின் முக்கிய அலுவலகங்கள் இந்த இடத்தில் அமைந்திருந்ததாம்.அரசியல் எதிரிகளையும் யூதர்களையும் கொன்றுகுவிக்க திட்டங்கள் தீட்டப்பட்டதும் இங்குதான். இக்கட்டடங்கள் அனைத்தும் இரண்டாம் உலகப்போருக்குப்பின் மண்ணோடு மண்ணாயின. 1970-க்குப்பின் மறைந்த இச்சின்னங்களைப்பற்றிய விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு மக்களறியும் வண்ணம் அருங்காட்சியகங்களாகவும் , கண்காட்சிப் புகைப்படக் கூடமாகவும் மாற்றப்பட்டன. இந்நிகழ்வுகளைப்பற்றிய ஆய்வுகள் இன்றும் தொடர்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர கிழக்குப்பக்க ஓவியக்காட்சி (East Side Gallery ) ஒன்றும் உண்டு. கிழக்கு பெர்லினின் பகுதியிலிருந்த சுமார் 1.3 கிலோமீட்டர் நீளச் சுவரில் உலகின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த ஓவியர்களால் சுவர்ச் சித்திரங்கள் தீட்டப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://picasaweb.google.com/lh/photo/l8dRBL-RjckdQ_pFI9lp6g?authkey=Gv1sRgCM3v_4qxyoCllQE&amp;amp;feat=embedwebsite"&gt;&lt;img src="http://lh5.ggpht.com/_R8qmlcOFr1c/Sa_qKRrUNDI/AAAAAAAACJM/0xaYp02ZOv8/s800/esg-410.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வன்முறையையும் அடக்குமுறையையும் எதிர்த்துக்குரல் கொடுத்து அன்புக்கும் அமைதிக்கும் ஆதரவாக மௌனமொழி பேசுகின்றன இவ்வோவியங்கள். 1990-ல் தீட்டப்பட்ட இவை மீண்டும் பத்தாண்டுக்குப்பின் புதுப்பிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;செக் பாயிண்ட் சார்லி - கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனிக்குள் நுழைய அனுமதி பெறும் இடம். இங்கு சுவர் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. சுவர் கட்டப்பட்ட பின்னும் அங்கிருந்து தப்பித்தவர்களைப்பற்றிய பல குறிப்புகளும் தப்ப உதவிய பொருட்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. சுமார் ஐயாயிரம் பேர் கிழக்கு ஜெர்மனி காவலாளிகளின் கண்களில் மண்தூவித் தப்பித்தனர். தப்பிய கதைகளையும் தப்புவதற்குதவிய பொருட்களையும் சேகரித்து அருங்காட்சியகமாக வைக்கும் வேலைகள் 1960-களின் இறுதியிலேயே ஆரம்பித்துவிட்டனவாம். அடுத்தபதிவில் அக்கதைகள்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-109407554955779067?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/109407554955779067/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=109407554955779067' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109407554955779067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109407554955779067'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/09/3.html' title='பெர்லின் சுவர் -3'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh5.ggpht.com/_R8qmlcOFr1c/Sa_mFZ48-KI/AAAAAAAACIE/QNnslq6ci-A/s72-c/BerlinWall.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-109351738088200122</id><published>2004-08-28T01:08:00.001+02:00</published><updated>2009-03-05T16:06:20.183+01:00</updated><title type='text'>பெர்லின் சுவர் -2</title><content type='html'>இரண்டு பகுதிகளும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த இன்னலுற்றனர். உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்க இயலாது அவதியுற்றனர். பலர் கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனிக்குத் தப்பிச் செல்ல முயன்றனர். தப்பிச் செல்ல இயலா வண்ணம் காவல் பலமாயிருந்தது. இருப்பினும் இம்முயற்சியில் பலர் வெற்றி பெற்றனர். இவ்வாறு தப்ப முயற்சிப்பவர்களை எச்சரித்துத் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்றே காவல் துறைக்கு ஆணையிடப்பட்டிருந்ததாம் . ஆயினும் இறுதி நடவடிக்கையாக , தப்ப முயற்சிப்பவர்கள் எச்சரிக்கையை மீறினால் சுடலாம் என்று எல்லைப்படைக்கு அறிவுறுத்தப் பட்டிருந்தது. எச்சரிக்கையை மீறி எல்லை கடப்பவர்களை திரும்பச் சொல்லி வானை நோக்கி ஒருமுறை சுடுவார்களாம். அதனையும் மீறிச் சென்ற நூற்றுக் கணக்கான மக்கள் சுடப்பட்டு இறந்தனர். எவ்வளவு பேர் இறந்தனர் என்ற உண்மையான விவரம் அரசால் மறைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;படம்: ப்ரான்டன்பர்க் நுழைவாயிலும் அதைச் சுற்றியிருந்த பெர்லின் சுவரும் (1969-ல்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://picasaweb.google.com/lh/photo/9ytQy_HzUqc38oWjXDcVOA?authkey=Gv1sRgCM3v_4qxyoCllQE&amp;amp;feat=embedwebsite"&gt;&lt;img src="http://lh5.ggpht.com/_R8qmlcOFr1c/Sa_mFlGf5_I/AAAAAAAACIM/fi-cP6OlVpw/s800/bg1969.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுவர் கட்டிய முதலாம் ஆண்டு நிறைவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளர்ச்சி நடைபெற்றது. பின்னர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டில் கிழக்கு ஜெர்மனிக்கு மேற்கு ஜெர்மனியிலிருந்து மக்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சட்டங்கள் சற்றே தளர்த்தப்பட்டு உறவினர் திருமணம், பிறப்பு, இறப்பு போன்ற நிகழ்வுகளின் போது அனுமதி தரப்பட்டது. 1968 ஆம் ஆண்டு முதல், மேற்கு ஜெர்மனியிலிருந்து கிழக்கே வருபவர்கள் பாஸ்போர்ட் மற்றும் விஸா இருந்தால் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.&lt;br /&gt;பெர்லினின் மேற்குப்பகுதியிலிருந்து கிழக்கே நுழைய நுழைவுச் சாவடிகள் உண்டு. அமெரிக்கக் கட்டுப்பாட்டுப்பகுதிலிருந்து கிழக்கு பெர்லின் நுழைய அமைந்த ஒரு சாவடி ப்ரைடுரிஹ்ஸ்ட்ராசே (Friedrichstrasse) எனும் இடத்தில் அமைந்திருந்தது. செக்பாயிண்ட் சார்லி (Check point Charlie) எனப்பெயரிடப்பட்ட இச்சாவடியில் இருந்து கிழக்கு பெர்லின் நுழைவதற்கு ஏராளமானோர் தினந்தோறும் வரிசையில் நிற்பது பல வருடங்களுக்கு வழக்கமாயிருந்தது. "அமெரிக்கக் கட்டுப்பாட்டுப்பகுதியிலிருந்து நீங்கள் வெளியேறுகிறீர்கள்" என அறிவுறுத்தும் பலகை (ஆங்கில, ஜெர்மன்,ரஷ்ய மற்றும் பிரெஞ்சு மொழிகளில்) அங்கு வைக்கப்பட்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://picasaweb.google.com/lh/photo/i70vgMJglSXFqCp_l73XnA?authkey=Gv1sRgCM3v_4qxyoCllQE&amp;amp;feat=embedwebsite"&gt;&lt;img src="http://lh4.ggpht.com/_R8qmlcOFr1c/Sa_qKJTwi9I/AAAAAAAACI0/VoX9i7pVr6k/s800/check-point.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செக்பாயிண்ட் சார்லி தற்போது சுவர் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பெர்லின் சுவரின் பல்வேறு நிகழ்வுகளை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறது. அது குறித்து பின்னர் காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இருபது ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்த போராட்டம் நாளாக நாளாக வலுத்ததேயன்றி குறையவில்லை. . கிழக்கு ஜெர்மனியிலும் கம்யூனிஸ அரசாங்கத்திற்குப் பல்வேறு நெருக்கடிகளும் குழப்பங்களும் ஏற்பட்டன. 1987-ல் அமெரிக்க ஜனாதிபதியாயிருந்த ரொல்னால்ட் ரீகன் ஜெர்மனிக்கு விஜயம் செய்தார். பெர்லின் நகரின் புகழ் பெற்ற பிரான்டன்பர்க் வாயில் முன் நிகழ்த்திய உரையில் சுவரைத் தரைமட்டமாக்குங்கள் என்று ரஷ்ய அதிபர் கார்பஷேவிடம் கேட்டுக்கொண்டார்.&lt;br /&gt;ரஷ்ய அதிபரும் தனது திட்டமான பெர்ஸ்த்ரோய்கா - வை (Perestroika)அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின்படி சோவியத் யூனியனின் பிடியில் இருந்த பல நாடுகளுக்கு அரசியல், பொருளாதார மற்றும் சமூக வாழ்வில் மாற்றம் ஏற்படும்படி சுதந்திர உரிமை வழங்கப்படும் என்று அறிவித்தார்.எண்பதுகளின் இறுதியில் ஐரோப்பாவில் கம்யூனிஸ ஆதிக்கம் வீழ்வுற்று ஜனநாயகப்பாதையில் சில நாடுகள் அடியெடுத்தன. கிழக்கு ஜெர்மனியிலும் போராட்டங்கள் தொடர்ந்தன. 1989-ல் ஹங்கேரி தனது எல்லைகளை கிழக்கு ஜெர்மனியிலிருந்து வரும் அகதிகளுக்குத் திறந்துவிட்டு அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. இறுதியாக வேறு வழியின்றி 1989 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பதாம் நாள் , கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனி செல்ல இனி எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை என்று அரசு அறிவித்தது. மறுநாள் முதல் சுவரின் கதவுகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் மக்களுக்கு அதுவரை காத்திருக்கப் பொறுமை இல்லை. அன்றிரவே ஆயிரக்கணக்கான மக்கள் சுவரின் இருமருங்கும் கூடினர். கிழக்கு ஜெர்மன் காவலாளிகளுக்கு வாசலைத் திறந்து விடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. சந்தோஷ ஆர்ப்பரிப்பில் மக்கள் மேலும் திரண்டனர். சுவர்கள் மீது ஏறினர். சுவரை உடைத்தனர். சுவர் இருந்த சுவடு சில நாட்களில் மறைந்தது. இரு நாடுகளும் இணைந்தன. உலகம் வாழ்த்தியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-109351738088200122?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/109351738088200122/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=109351738088200122' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109351738088200122'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109351738088200122'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/08/2_28.html' title='பெர்லின் சுவர் -2'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh5.ggpht.com/_R8qmlcOFr1c/Sa_mFlGf5_I/AAAAAAAACIM/fi-cP6OlVpw/s72-c/bg1969.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-109310731918685109</id><published>2004-08-22T18:41:00.002+02:00</published><updated>2009-03-05T16:01:21.868+01:00</updated><title type='text'>பெர்லின் சுவர் -1</title><content type='html'>நான் பத்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது (1989) பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. செய்தித்தாள்களில் வண்ண வண்ணப் படங்கள் வெளிவந்தன. சுவரின் அருகே நிற்கும் காவலாளி ஒருவருக்கு பெண் ஒருவர் பூச்செண்டு கொடுப்பது போல் ஒரு படமும் சுவரின் மீது ஏறி சிலர் இடித்துக் கொண்டிருந்த ஒரு படமும் இன்னமும் என் நினைவில் நிற்கிறது.அப்போதைக்கு இரண்டு ஜெர்மனிகளும் இணைகின்றன;இரு நாடுகளையும் பிரித்து வைத்த சுவர் உடைக்கப்பட்டது என்ற அளவிலேயே என் புரிந்துகொள்ளுதல் இருந்தது.&lt;br /&gt;பெர்லின் சுவர் இருந்த இடங்களை நாமும் பார்த்துவிடுவோம் என்று கனவில் கூட நான் எண்ணியதில்லை. சென்ற ஆண்டின் இறுதியில் ஜெர்மனி வாசம் முடிந்து ஸ்வீடனுக்கு குடியேற ( குடியேற்ற உரிமை பெற) பெர்லினில் இருந்த ஸ்வீடன் தூதரகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்த வேலை முடிந்ததும் மூன்று நாட்கள் பெர்லினையும் சுற்றிவரத்( நானும் எனது மனைவியும்) தீர்மானித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெர்லின் சுவர் இருந்த சுவடு தெரியாமல் முற்றிலும் மறைந்து விட்டாலும் சுவரின் மிச்சங்கள் இன்றும் ஓரிரு இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காகவும் நினைவுச் சின்னமாகவும் பாதுகாக்கப் பட்டுள்ளன. இது பற்றிய ஒரு மியூசியமும் உண்டு.&lt;br /&gt;இவற்றையெல்லாம் காணும் முன் வரலாற்றைச் சற்றே புரட்டிப்பார்த்துவிட்டு வரலாம், வாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் அழிவுக்குப்பின் ஜெர்மனியில் புதிய மாறுதல்கள் ஏற்பட்டன. கிழக்கு ஜெர்மனி , மேற்கு ஜெர்மனி என்று இரு புதிய நாடுகள் உதயமாயின. அன்றிலிருந்து பெர்லின் நகரம் பிரச்சனைக்குரிய பகுதியானது. அன்றைய பெர்லின் நகரம் நான்கு பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டு அதன் நிர்வாகம் நேச நாடுகளான அமெரிக்கா, பிரிட்டிஷ், ப்ரான்ஸ் மற்றும் ரஷ்யாவிடம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ரஷ்யா வசம் இருந்த கிழக்கு பெர்லின் கிழக்கு ஜெர்மனியின் தலைநகராகவும் ஆனது. ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்ததால் இங்கு கம்யூனிஸம்தான். முதலில் இரு நாடுகளுக்குமிடையே எல்லை கடந்து செல்வது பிரச்சினையாக இல்லை. நாளடைவில் "மேற்கு பெர்லினில் இருக்கும் நேச நாடுகள் விலகிக் கொண்டு மேற்கு பெர்லினை சுதந்திரப்பகுதியாக்க வேண்டும்" என்ற கிழக்கு ஜெர்மனியின் வாதம் கேட்க ஆரம்பித்தது. அமெரிக்க , பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் அரசுகள் இதற்கு உடன்படவில்லை. மேற்கு பெர்லினின் சுதந்திரத்தைத் தாங்கள் பாதுகாத்துக் கொள்ள தொடர்ந்து இருப்பதாகக் கூறிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படம்: பெர்லின் நகர் - 1961 ஆம் வருடத்தில், நான்கு கட்டுப்பாட்டுப்பகுதிகளுடன். மஞ்சள் வண்ணப் பட்டை - பெர்லின் சுவர் கட்டப்பட்ட பகுதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://picasaweb.google.com/lh/photo/UABeaQ_Cpy77fIwmvwhwfQ?authkey=Gv1sRgCM3v_4qxyoCllQE&amp;amp;feat=embedwebsite"&gt;&lt;img src="http://lh4.ggpht.com/_R8qmlcOFr1c/Sa_mGI8AKXI/AAAAAAAACIU/IKFh2FDpoZA/s800/carte03gb.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் வெறுப்பைடந்த கிழக்கு ஜெர்மனி அரசு , மேற்கு ஜெர்மனியிலிருந்து எல்லை கடந்து வருவதற்குப் பல கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தது.இரு பகுதிகளையும் இணைக்கும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அப்போதைய ரஷ்ய அதிபராயிருந்த க்ருஷேவ் , மேற்கு பெர்லினில் இருந்து நேச நாட்டுப்படைகள் , ஒரு குறித்த நாளுக்குள் வெளியேற வேண்டும் என்று கெடு விதித்தார். இதற்கு நேச நாடுகள் மறுத்துவிட்ட நிலையில் இரு பகுதிகளுக்குள்ள ராஜ்ஜிய உறவு மேலும் சீர்கெட்டது. அமெரிக்க அதிபர் கென்னடிக்கும் க்ருஷேவிற்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் பயனின்றிப்போய் விட்டன.&lt;br /&gt;கிழக்கு ஜெர்மனி அரசு அதன் பின்னர் எல்லை கடந்து செல்வதற்கு தடை விதித்தது. தடை விதிக்கப்பட்ட அத்தினத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கிழக்கு ஜெர்மனியிலிருந்து வெளியேறி மேற்கு ஜெர்மனியில் அடைக்கலமாயினராம். இதைத் தடுக்க இரு நாடுகளையும் பிரிக்கும் சுவர் ஒன்றைக் கட்ட எண்ணிய கம்யூனிஸ அரசு திட்டமிட்டது . 1961-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் நாள், இரவு இரண்டு மணிக்கு காவல்படை இரு பகுதிகளையும் பிரிக்கும் இடத்தில் அணிவகுத்தது. வேலிகள் இடப்பட்டன. இரு பகுதிகளுக்கும் பேருந்துப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அன்று காலையில் இதைக்கண்ட கிழக்கு பெர்லின் மக்கள் ஆத்திரமடைந்தனர். அரசை எதிர்த்துப் பல கிளர்ச்சிகள் நடைபெற்றன. காவலர்கள் அறியா வண்ணம் மேற்கு பெர்லினுக்குப் பலர் தப்பித்துச் சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலிக்கு அருகே அதனைத் தொடர்ந்து அகழிகள் தோண்டப்பட்டன. சுவர் நெடுநெடுவெனக் கட்டப்பட்டு வளர்ந்தது. எல்லை நெடுகிலும் கண்காணிப்புக்கோட்டைகள் கட்டப்பட்டன.அரசிடமிருந்து அனுமதி ( விசா) பெறாமல் எல்லை கடப்பது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://picasaweb.google.com/lh/photo/QA-B7zoDNzuuem4dXB_7fg?authkey=Gv1sRgCM3v_4qxyoCllQE&amp;amp;feat=embedwebsite"&gt;&lt;img src="http://lh5.ggpht.com/_R8qmlcOFr1c/Sa_mEp2j9aI/AAAAAAAACH0/LY3kZG4JzrI/s800/b_mur14.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் நூற்றி ஐம்பத்தைந்து கிலோமீட்டர்கள் நீளமுள்ளது இச்சுவர். சுவரின் தடிமன் முப்பது சென்டிமீட்டர். பதிமூன்றே நாட்களில் இப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கிழக்கு பெர்லின் மேற்குப் பகுதியிலிருந்து முற்றிலுமாய்த் துண்டிக்கப்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-109310731918685109?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/109310731918685109/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=109310731918685109' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109310731918685109'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109310731918685109'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/08/1_22.html' title='பெர்லின் சுவர் -1'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh4.ggpht.com/_R8qmlcOFr1c/Sa_mGI8AKXI/AAAAAAAACIU/IKFh2FDpoZA/s72-c/carte03gb.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-109269015547538236</id><published>2004-08-18T23:02:00.000+02:00</published><updated>2004-08-18T00:29:18.430+02:00</updated><title type='text'>வாஸா - 3</title><content type='html'>&lt;img src="http://www.imagewaiter.com/images/1/blFmJk1092780595.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாஸா அருங்காட்சியகத்தில் நுழைந்ததும் மெல்லிய வெளிச்சம் நம்மைச் சூழ்ந்துகொள்கிறது. மெல்லிய வெளிச்சத்தைத் தொடர்ந்து செல்ல, பிரம்மாண்டமான கப்பல் எதிர்ப்பட்டது. கப்பலின் முகப்புப் பகுதியை அண்ணாந்து பார்த்ததில் கழுத்து வலித்தது. கப்பலின் அடித்தளத்திலிருந்து மேல்தளம் வரை , கப்பலின் ஒவ்வொரு பகுதியாய்ச் சென்று பார்ப்பதற்கு ஏழு தளங்கள். கப்பலின் முன்பகுதியில் மூக்கு போல் நீட்டிக்கொண்டிருந்த அலகு (Beak) அதில் ரோம் மன்னன் நீரோவின் உருவம் பொறித்த சிலை. தண்ணீரில் மூழ்கி இற்றுப் போயிருந்த அச்சிலையை மீண்டும் புதுப்பித்திருந்தார்கள். மன்னர் குஸ்தவ் இள வயதில் முடி சூட்டிக்கொள்வது போல் ஒரு சிலை. மரத்தில் இழைத்துச் செய்யப்பட்டிருந்த அனைத்து சிலைகளும் அதிசயமாய் இருந்தன. கப்பலின் மேலிரு தளங்களில் அமைக்கப்பட்டிருந்த பீரங்கி மேடைகளும் சுற்றிலும் அமைக்கப்பட்ட அறுபத்தி நான்கு துளைகளும் இருந்தன. கப்பல் மூழ்குவதற்கு இந்த ஈரடுக்கு பீரங்கித் துளைகளும் ஒரு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.imagewaiter.com/images/1/dtFyLz1092780753.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மியூசியத்தின் உள்ளே ஒரு திரையரங்கு. மணிக்கொருதரம் காட்டப்படும் குறும்படத்தில் வாஸாவை மீட்கப்பட்ட காட்சி முதல் அதைச் செப்பனிட்டு எவ்வாறு தற்போதுள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டது என விரியும் காட்சி வரை விளக்கமாய்க் காணலாம். படம் ஸ்வீடிஷ் மொழியில் தான் , நல்லவேளையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு திரைமேல் சிவப்பு எழுத்துக்களில் ஓடுகிறது. மூழ்கிய கப்பலை மீட்டெடுக்கும் காட்சிகளும் , கப்பல் மூழ்கிய இடத்தைச் சுற்றிலும் இறைந்து கிடந்த மரப் பலகைகளும் ஆணிகளும் பிற பொருட்களும் மீட்கப்பட்டு , எவ்வாறு அதே ஆணிகளைக் கொண்டு அப்பலகைகள் மீண்டும் பொருத்தப்பட்டன என்பதௌ விளக்கும் காட்சிகளும், கப்பல் மீண்டவுடன் அதனுள் குவிந்து கிடந்த சகதியை வெளியேற்றி , கப்பல் சுத்தப்படுத்தப்பட்டு , வேதிப்பொருட்கள் கொண்டு கப்பல் புதுப்பிக்கப்பட்ட காட்சிகளும் சுவையாய் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நிஜக் கப்பலின் அருகே அதன் மாதிரி வடிவமொன்று சிறியதாய் வைக்கப்பட்டிருந்தது. கடலினடியில் தேடிக்கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு வகையான பொருட்களும் பார்வைக்குக்கிடைத்தன. கப்பலில் சென்ற போர் வீரர்கள் பயன்படுத்திய தோலாலான உடைகள் மற்றும் காலணிகள் , பீரங்கிகள் உபயோகப்படுத்திய பாத்திரங்கள் , போர்க்கருவிகள் என எண்ணிலடங்கா.&lt;br /&gt;&lt;br /&gt;"கப்பல் ஏன் மூழ்கியது?" என்ற கேள்விக்கு மியூசியத்தின் ஒரு சிறிய அறையில் விடை கிடைக்கிறது. அசையாப் படங்களை (Slide Show) ஒரு திரையில் காண்பித்து , அப்படத்திற்கேற்ப பின்னணியில் விளக்க உரை , நல்ல வேளையாக ஆங்கிலத்திலும் வழங்கப்படுகிறது. அறையிலுள்ள ஒலிபெருக்கிகள் டிஜிடல் டால்பி முறையில் அமைக்கப்பட்டிருந்தன. கப்பல் மூழ்கியபோது ஏற்பட்ட விளைவினை நம் கண்முன் நிறுத்த , கப்பல் மூழ்குவது போன்ற ஒரு ஓவியமும் அதன் பின்னணியில் கப்பல் மூழ்கும்போது எழும் ஓசையை விட அதிக அதிர்வை ஏற்படுத்தும் இசையையும் தந்து பிரமிப்பு ஏற்படுத்தினார்கள். கப்பல் மூழ்கியபோது மன்னர் போலந்து நாட்டில் இருந்ததால் மந்திரி ஒருவர் தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டு இதற்கான காரணம் ஆராயப்பட்டதாம். இயற்கையின் விளையாட்டு என ஒரு சிலர் எண்ணினர். எவரோ செய்த சதி என்று சிலர் சந்தேகித்தனர். கப்பலிலிருந்து தப்பித்தவர்கள், கப்பல் கட்டிய தொழிலாளர்கள் , கப்பலைக் கட்டிய ஹென்ரிக் ஹைபர்ட்ஸன் என அனைவரும் விசாரிக்கப்பட்டனர். முடிவில் யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. யாரும் தண்டிக்கப்படவுமில்லை. பின் ஏன் கப்பல் மூழ்கியது? மன்னரின் விருப்பப்படி ஈரடுக்குப் பீரங்கித்துளைகள் கப்பலில் அமைக்கப்பட்டதால், அத்துளைகள் கப்பலின் கீழ்தளத்தில் சமநிலைப்படுத்தும் கற்கள் (Ballasts) நிரப்பும் இடத்தைப் பெரிதும் பாதித்தது. எனவே போதிய கற்கள் எடுத்துச் செல்லாமல் குறைவான கற்களே நிரப்பப் பட்டன. காற்று பலமாக வீசியதால் கப்பல் தனது எடையச் சமன் செய்து கொள்ள முடியாது கவிழ்ந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கப்பலின் அடிப்பகுதி முதல் மேல்பகுதி வரை ஒவ்வொரு தளமாய்ப் பார்த்து வியந்தோம். ஒவ்வொரு தளத்திலும் இது தவிர வேறு எதாவது காட்சியோ , குறிப்புகளோ அல்லது மீட்டெடுக்கபட்ட பொருட்களோ வைக்கப்பட்டு மேலும் சுவை சேர்த்தன. மூழ்கிய கப்பலை மேலே உயர்த்த கப்பலினடியில் துளைகள் இட்டு, வளையும் கம்பிகள் செலுத்தித் தூக்கியதைக் கண்முன் நிறுத்தும் ஒரு மாதிரியும் (Model) ஒரு தளத்தில் இருந்தது. கப்பலின் மீது செதுக்கிய சில சிலைகளையும் தனியாக ஒரு தளத்தில் காண முடிந்தது. சிற்பங்கள் அனைத்தும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.imagewaiter.com/images/1/GpGnmh1092781126.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மியூசியம் விட்டு வெளிவந்த பின்னும் வாஸாவின் பிரம்மாண்டம் கண்களுக்குள் புகுந்து தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இன்றும் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-109269015547538236?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/109269015547538236/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=109269015547538236' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109269015547538236'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109269015547538236'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/08/3.html' title='வாஸா - 3'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-109225868197709210</id><published>2004-08-11T22:59:00.000+02:00</published><updated>2004-08-12T00:33:33.240+02:00</updated><title type='text'>வாஸா - 2</title><content type='html'>வாஸா மூழ்கியபின் அதனைத் தேடி மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்ட அனைவரின் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவுற்றன. அவ்வளவு எடையுள்ள கப்பலை மீட்பது சவாலான காரியந்தான். வாஸா மூழ்கி சுமார் முன்னூற்று முப்பது ஆண்டுகளுக்குப்பின் இம்முயற்சி செயல் வடிவம் பெற்றது. ஆன்டர்ஸ் ப்ரென்ஸீன் (Anders Frenzen) என்பவர் கடல் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தவராவார். வாஸா இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தபின் அதை எவ்வாறு மீட்பது என்பது குறித்து, நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய வகையில் திட்டமிட்டார். கடலுள் ஆய்வு செய்யும் இருவர் துணையுடன் வாஸா மூழ்கியிருக்கும் நிலை பற்றி ஆய்வு செய்தார். நல்ல வேளையாக வாஸா தலைகீழாய்க் கவிழாமல் நேராகவே அமர்ந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே கப்பலை அப்படியே தூக்குவது என முடிவானது. தூக்குவது என்ன பத்து கிலோவா? டன் கணக்கில் எடை. கப்பலைத் தூக்குகையில் முன்னூறு வருடங்களாய் கடல்நீரில் ஊறிய மரங்கள் உடையவும் வாய்ப்பிருந்தது. சற்றுக் கடினமான செயல்தான். செலவு அதிகம் வைக்கும் திட்டம் இது. அனைத்துச் செலவுகளையும் ஸ்வீடனின் கடற்படையும் ஒரு தனியார் நிறுவனமும் ஏற்றுக்கொண்டன. முதலில் கப்பல் அமர்ந்திருந்த கடல்தரையில் (கடல் மட்டத்திலிருந்து முப்பது மீட்டர் ஆழம்) ஆறு சிறிய சுரங்கங்கள் தோண்டப்பட்டன. அதாவது , தடிமனான வளையும் இரும்பு கம்பிகளை ஒருபுறம் செலுத்தி மறுபுறம் எடுத்து அப்படியே மேலே உயர்த்தும் திட்டத்துடன் இந்தத் துளைகள் இடப்பட்டன. தடிமனான இரும்புக்கம்பிகளை துளைகளில் செலுத்தி இயந்திரங்களின் உதவியுடன் சிறிது சிறிதாக கப்பல் மேலே உயர்த்தப்பட்டது. இந்தப்பணிகளெல்லாம் சுமார் ஐந்து வருடங்கள்( 1956 முதல் 1961 வரை) தொடர்ந்தன.&lt;br /&gt;ஏப்ரல் 24, 1961. மூழ்கிய கப்பல் மீண்டும் மூச்சு வாங்க வெளியுலகம் வரும் நாள். இச்செய்தி உலகெங்கும் பரவிவிட செய்தியாளர்களும் பார்வையாளர்களும் ஸ்டாக்ஹோமை முற்றுகை இட ஆரம்பித்தனர். நாடெங்கும் இதே பேச்சு. ஸ்வீடனின் தொலைக்காட்சியும் இந்நிகழ்ச்சியை நேரடியாய் ஒளிபரப்பு செய்தது. சரியாய் காலை ஒன்பது மணிக்கு வாஸாவின் மேல்தளம் கண்ணுக்குப் புலப்பட ஆரவாரக்கூச்சல்களில் கடலே அதிர்ந்ததாம்.&lt;br /&gt;&lt;br /&gt;படம்: 1961-ல் கப்பல் மீட்கப்பட்டு தற்காலிகமாய் நிறுத்தப்பட்டிருந்தபோது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.imagewaiter.com/images/1/NC3aut1092262516.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் கப்பல் மூழ்கிய இடத்தைச்சுற்றிலும் சிதறிக்கிடந்த மரப்பலகைகள், ஆணிகள், இறந்தவர்களின் எலும்புகள் , சிதறிய ஆயுதங்கள் , உடைந்த சிற்பங்கள் முதலியன தேடி எடுக்கப்பட்டன.&lt;br /&gt;கப்பலை மீட்டெடுத்த பின் அதைச் செப்பனிடும் வேலை ஆரம்பமானது. அவ்வேலை, கப்பலைத்தூக்கி எடுக்கும் வேலையை விடச் சிரமமானதாகவும் அதிக நேரம் எடுப்பதாகவும் இருந்தது. இவ்வளவு ஆண்டுகள் கடல் நீரைக் குடித்த மரப்பலகைகள் , பல ஆண்டுகள் கெட்டுப்போகாதவாறு பதப்படுத்தும் வேலை தொடர்ந்து நடைபெற்றது. மரங்கள் கெடாதவாறு பாதுகாக்கும் பாலிஎதிலின் கிளைகால் எனும் வேதிப்பொருள் கப்பல் முழுதும் தடவப்பட்டது. மரங்கள் இற்றுப்போகா வண்ணம் இருக்க போரிக் அமிலம் கலந்த கலவையும் பூசப்பட்டதாம். உடைந்த சிற்பங்கள் மீண்டும் செப்பனிடப்பட்டு கப்பலில் பொருத்தப்பட்டன. தளர்ந்த ஆணிகள் முடுக்கப்பட்டன.செப்பனிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற தற்காலிகமாய் ஒரு இடத்தில் பார்வைக்கென வைக்கப்பட்டது. இப்பணிகள் எல்லாம் நிறைவடைந்தபோது 1990 ஆம் ஆண்டு பிறந்திருந்தது. பின்னர் ஸ்டாக்ஹோமின் யூர்காடன் (Djurgarten) எனும் தீவில் நிரந்தரமாய்க் குடியேறியது வாஸா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடத்தின் ஈஸ்டர் விடுமுறை நாட்களில் ஸ்டாக்ஹோம் பயணித்தபோது வாஸா மியூசியத்தைப் பார்வையிடச் (நானும் எனது மனைவியும்) சென்றோம். ஸ்டாக்ஹோம் சென்றுவரத் திட்டமிட்டால், பயணத்தின் முதல் அதிகாரம் வாஸா கப்பல் தான்.&lt;br /&gt;மியூசியத்தில் கண்டவை பற்றி அடுத்த பதிவில்..&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-109225868197709210?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/109225868197709210/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=109225868197709210' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109225868197709210'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109225868197709210'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/08/2.html' title='வாஸா - 2'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-109165654095266116</id><published>2004-08-06T23:50:00.000+02:00</published><updated>2006-05-06T07:10:20.736+02:00</updated><title type='text'>வாஸா - 1</title><content type='html'>வாஸா - முதல் பயணத்திலேயே மூழ்கிப்போன கப்பல். முன்னூறு வருடம் மூச்சடக்கிய பின் முழுதாய் மீட்கப்பட்ட கப்பல். ஸ்வீடனின் தலைநகரமான ஸ்டாக்ஹோமின் கடலோரக் குடிலில் கம்பீரமாய்க் குடியிருக்கும் கப்பல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.imagewaiter.com/images/1/vhcPsT1091744717.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கப்பல் பிறந்த கதை, கடலில் மூழ்கிய கதை, மீட்கப்பட்ட கதை , தற்போதைய மியூசிய வாழ்க்கைக் கதை - எல்லாக் கதைகளையும் விரிவாய்க் கூறுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தோன்றிய கதை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கி பி 1624. ஸ்வீடனின் மன்னராக ஆட்சி செய்து கொண்டிருந்தவர் குஸ்தவ் II அடோல்ப் (Gustav II Adolf) என்பவர். தனது பதினேழு வயதிலேயே மன்னரானவராம். பின்லாந்தும் ஸ்வீடனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. மன்னர், நாடு என்றாலே போர்கள் தானே வரலாறு? குஸ்தவ் II-ம் அதற்கு விதிவிலக்கல்ல. அண்டை நாடான டென்மார்க், ரஷ்யா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுடன் போர்களில் ஈடுபட்டார். இத்தனைக்கும் போலந்து நாட்டை ஆட்சி செய்தவர் இவரது உறவினரே. இருந்தாலும் மண்ணாசை யாரை விட்டது? அடிக்கடி போர்கள் புரிந்ததனால் படைகளும் கப்பல்களும் சேதமாயின. இருந்த கப்பல்களும் பழையதாய் இருந்தன. எனவே புதிதாகக் கப்பல் செய்ய மன்னர் உத்தரவிட்டார். ஹென்ரிக் ஹைபர்ட்ஸன் (Henrik Hybertsson) எனும் டச்சுக்காரர் கப்பல் கட்டுவதில் புகழ்பெற்றவராம். இரண்டு பெரிய கப்பல்கள் மற்றும் ஏராளமான சிறிய ரகக் கப்பல் கட்டும்படி தளபதியிடமிருந்து உத்தரவு வரவும் கப்பல்கள் கட்டும் பணியினைத் தொடங்கினார். இரவும் பகலும் வேலைகள் தொடர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கப்பலகள் செய்வதற்கு ஸ்வீடனின் காடுகளிலிருந்து சுமார் ஆயிரம் ஓக் மரங்கள் வெட்டப்பட்டன. ஓக் மரங்கள் சற்று எடை அதிகமானவை, உறுதியானவை. இரண்டு பெரிய கப்பல்களுள் ஒன்றினுக்கு வாஸா என்றும் மற்றொன்றிற்கு மூன்று கிரீடங்கள் (Tre Kronar) என்றும் பெயர் சூட்டப்பட்டது. வாஸா என்பது மன்னரின் பரம்பரையைக் குறிப்பது ( Vasa Dynasty).&lt;br /&gt;சுமார் நான்கு வருடங்களில் கப்பல்கள் கட்டி முடிக்கப்பட்டன. வாஸா, ஸ்டாக்ஹோம் நகரக் கடற்கரையில் கம்பீரமாய் நின்றது. மரக்கப்பலில் வண்ணம் பூசப்பட்டது. கப்பலின் முகப்பில் மர வேலைப்பாடுகளாலான சிற்பங்கள் செதுக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.imagewaiter.com/images/1/TvpmWt1091744784.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு நான்கடுக்குக் கப்பல். கப்பலின் எடை ஆயிரத்து இருநூறு டன்கள், கப்பல் கடலின் காற்றில் கவிழ்ந்துவிடாமல் பாதுகாக்க (கப்பலைச் சமநிலைப்படுத்தும் எடைக் கற்கள் - Ballast) நூற்று இருபது டன் கற்கள். கப்பலின் இரு தளங்களில் ஆயுதங்களும் பிற போர்க்கருவிகளும் ஏற்றப்பட்டன. எழுபது மீட்டர் நீளமும் , கப்பலின் தடித்த நடுப்பகுதி பதினோறு மீட்டர் அகலமும் உடையது. நான்கு அடுக்குகளில் கீழ்தட்டில் உணவுப்பொருட்கள் அடுக்கப்பட்டன. இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கை சுற்றி சிறியரக பீரங்கிகளைத் தாங்கும் மேடைகள் அமைக்கப்பட்டன. போர்வீரர்கள் படுத்து உறங்கவும் ஓய்வெடுக்கவும் இந்த இரு தளங்களையும் பயன்படுத்திக் கொண்டனராம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கப்பலைச் சுற்றிலும் மர வேலைப்பாடுகளைக் கொண்ட சிற்பங்கள் அமைக்கப்பட்டன. இவற்றின் எண்ணிக்கை ஐநூறு இருக்குமாம். இப்படியாய் நான்கு ஆண்டுகளில் முழுமை பெற்ற இக்கப்பலை நீரில் மிதக்கவிட்டனர். அந்த நேரத்தில் மன்னர் போலந்து நாட்டின்மீது போர் புரியச் சென்றிருந்தார். அவருக்கு போரில் உதவி செய்ய ஆயுதங்களும் வீரர்களும் தேவைப் பட்டனர். வாஸா தயாராகி விட்டதா என்று கேட்டு விரைவாகக் கட்டி முடிக்கவும் ஆணையிட்டார். கப்பல் கட்டி முடித்து வெள்ளோட்டம் பார்க்கும் முன்னர் கப்பலை அனுப்ப மன்னர் மீண்டும் அவசரப் படுத்தினார்.&lt;br /&gt;1628-ஆம் வருடம் ஆகஸ்ட் மாத மதிய நேரம் ஒன்றில் வாஸா கடற்பயணம் மேற்கொள்ளத் தயாரானது. இருநூரு படை வீரர்களையும் ஏராளமான ஆயுதங்களையும் ஏற்றிக் கொண்டு குண்டுகள் முழங்க தனது முதற்பயணத்தைத் தொடங்கியது. பயணம் மேற்கொண்ட சில நிமிடங்களில் பலத்த காற்று வீச ஆரம்பிக்க , காற்றில் நிலை கொள்ளாது தள்ளாடி கடலில் கவிழ ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.imagewaiter.com/images/1/Ig9a1H1091744867.jpg" /&gt;&lt;br /&gt;கப்பலில் இருந்தவர்களுள் பலர் நீந்தித் தப்பித்தனர். சுமார் ஐம்பது பேர் மூழ்கி மாண்டனர். முழுவதுமாய் மூழ்கி சுமார் முப்பது மீட்டர் ஆழத்தில் புதைந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-109165654095266116?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/109165654095266116/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=109165654095266116' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109165654095266116'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109165654095266116'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/08/1.html' title='வாஸா - 1'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-109105013448378337</id><published>2004-07-30T23:26:00.000+02:00</published><updated>2004-07-30T01:37:53.120+02:00</updated><title type='text'>சால்ஸ்பர்க் - 3</title><content type='html'>&lt;img src="http://www.imagewaiter.com/images/1/5h88eD1091143127.jpg" /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஹெல்ப்ருன் மாளிகை(Helbrunn palace) சால்ஸ்பர்க்கின் மத்தியப் பகுதியிலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கிறது. இதுவும் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு சொகுசு மாளிகை. அப்போதைய ஆர்ச் பிஷப் ,மார்குஸ் சிடிகுஸ்(Markus Sittikus) தனது கோடைக்காலத்தை உல்லாசமாகக் கழிக்க நகரை விட்டுத்தள்ளி இயற்கையோடு ஒன்றியிருந்த இந்த இடத்தைத் தேர்வு செய்தார். தனது நண்பர் ஸான்டினோ ஸொலாரி (Santino Solari)எனும் கட்டடக் கலை நிபுணரை&amp;nbsp;&amp;nbsp; இத்தாலிய முறைப்படி கட்டச் சொன்னார். சுமார் நான்கு வருடங்களில் இந்த அரண்மனை கட்டப்பட்டது. அரண்மனையைச் சுற்றி பசும்புல்வெளிகளும் ஓங்கியுயர்ந்த மரங்களும் மலைகளும் விலங்கினங்களும் சலசலத்து ஓடும் குற்றாறுகளும் ஓடைகளும் அம்மாளிகைக்கு எழில் சேர்த்தன. &lt;br /&gt;&lt;br /&gt;மாளிகைக்குள் நுழைந்துவிட்டால் நாம் அந்த நூற்றாண்டுக்குச் சென்றுவிட்ட உணர்வு. முன்பு பயன்படுத்திய பொருட்களனைத்தும் நம் பார்வைக்குக் கிடைக்கின்றன.&amp;nbsp; உணவறையில் அமைக்கப்பட்டிருந்த நாற்காலிகள் தோலுறை அணிந்தவை. மரவேலைப்பாடுகள் அமைந்த உணவு மேசைகள் , கட்டில்கள், பெரிய சிவிகை போன்று அமைந்த வெப்பமூட்டப்பட்ட அறைகள், மன்னர் தனது அமைச்சர்களோடு கலந்துரையாட அமைக்கப்பட்ட இரகசிய அறைகள், மன்னர் நடனம் இரசிக்கும் அறைகள் என விரிந்தது.&amp;nbsp;எண்கோண (Octogon) வடிவில் இருந்த இசை கேட்கும் அறை - கேட்பொலி விளைவுடன்(Acoustical effects)&amp;nbsp;கூடியது . போர்வாட்கள், போர் உடைகள் கவசங்கள் முதலியவைகளும் இருந்தன. அரண்மனை முழுதும் இருந்த&amp;nbsp; ஓவியங்களும் சிலைகளும் நேர்த்தியாய் வடிவமைக்கபட்டவை. பறவைகளின் ஓவியங்கள் , விலங்குகளின் சிலைகள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. குறிப்பாக, ஒருகொம்புக் குதிரை (Unicorn) யின் சிலை அழகாயிருந்தது. எட்டுக் கால்கள் கொண்ட குதிரையின் ஓவியம் ஒன்றின் கற்பனையும் நன்றாயிருந்தது &lt;br /&gt;&lt;br /&gt;அரண்மனையின் மாடியின் ஒரு அறையிலிருந்து எதிரே பார்த்தால் மலைத்தொடர் விரிகிறது. மலையினடியில் சிறிய ஒரு வீடு தனியாக , அழகாக, சிறியதாகத் தெரிகிறது. அரண்மனையின் பின்புறம் இருப்பவை பெரிய தோட்டம்&amp;nbsp; மற்றும் நீரூற்றுத் தோட்டம். உலகப் புகழ் பெற்றவை&amp;nbsp; இங்குள்ள தந்திர நீரூற்றுக்கள் . &lt;br /&gt;&lt;br /&gt;சிறு சிறு குழுக்களாக தண்ணீர்ப் பூங்காவினுள் அழைத்துச் சென்றனர். முதலில் எதிர்ப்பட்டது கல்லினால் செய்யப்பட்ட நீளமான மேசையும் , அதைச் சுற்றி இடப்பட்டிருந்த கல் இருக்கைகளும். அனைவரும் அருகே இருந்த கற்படிகளில் வரிசையாய் அமர்ந்தோம். வழிகாட்டி எங்கள் குழுவில் இருந்த ஒரு சிலரை&amp;nbsp; அந்தக் கல் இருக்கைகளில் அமரும்படி கூறினார். அந்த இடத்தின் முக்கியத்துவத்தைக் கூற ஆரம்பித்தார். மன்னர் தனது நண்பர்கள் மற்றும் விருந்தினர்களுடன் அமர்ந்து மதுவருந்திக்கொண்டே பேசுவதற்கு அமைக்கப்பட்டவை இந்த இருக்கைகளும் மேசையும். கோடைக்காலத்தில் மன்னர் தன் நண்பர்களை அழைத்து விருந்து கொடுப்பது வழக்கம் என்று கூறிக்கொண்டே வழிகாட்டி தன் சகாவிற்கு சமிக்ஞை செய்தார். அவர் மறைவிடத்திலிருந்த ஒரு விசையை அழுத்த, மேசையைச் சுற்றிலும்&amp;nbsp; தரையில் மறைவாயிருந்த (கண்களுக்கு எளிதில் புலப்படாத) சிறு குழாய்களில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதை எதிர்பாராத பயணிகள் திகைத்துப் பின் தண்ணீரில் நனைந்தவாறே&amp;nbsp; மகிழ்ந்தனர். இதுபோல் தான் சுமார் நானூறு ஆண்டுகட்கு முன் மன்னரும் தன் நண்பர்களுக்கு திடீர் தண்ணீர் விருந்து அளிப்பாராம் ( தண்ணி அடிச்சுக்கிட்டே தண்ணீர்&amp;nbsp; அடிக்கிறது இதுதானோ?)&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.imagewaiter.com/images/1/ZNBcRY1091143193.jpg" /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து இதுபோல் தண்ணீர் அதிர்ச்சிகள் இருக்கும் என்று எச்சரிக்கை செய்த வழிகாட்டி கவனமாய்த் தொடரும்படி விளையாட்டாய்க் கூறி முன்னேறிச் சென்றார். நாங்களும் பின் தொடர்ந்தோம். இரு புறமும் அடர்த்தியாய் வளர்ந்த செடிகளைக் கடந்து செல்கையில் செடி மறைவில் இருந்த நுண்குழாய்களில்&amp;nbsp; திடீரென்று நீர் பீறிட்டு எங்களை நனைத்தது. அழகிய சிலைகள் , சிலைகள் அருகே தடாகங்கள் மலர்த்தோட்டங்கள் , புல்வெளிகள் எனத் தொடர்ந்தது. சுவரில் மாட்டி வைக்கப்பட்டிருந்த மானின் தலை வடிவச் சிலையிலிருந்தும் நீர் சடாரெனப் பீறிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.imagewaiter.com/images/1/UbEBr81091143278.jpg" /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிறிய குகை போன்ற அமைப்பு. வெவ்வேறு சிலைகள்&amp;nbsp; இருந்தன. தரையிலிருந்து எழும் நீர் ஊற்று ஒன்று இருந்தது. மேலெழும்பும் நீரின் விசை , அதன் மேல் இருந்த பந்தினைத் தாங்கிப் பிடித்து ( பந்து கீழே விழாவண்ணம் ) பந்தினைச் சுழற்றியது. அங்கிருந்த மற்ற சிலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே குகைச் சுவரின் நுண்ணிய துளைகளிலிருந்து நீர் சிதற, மீண்டும் நனைந்தோம். தொடர்ந்த பாதையில் , நீரின் விசையால் உருளும் சிறு சிறு பொம்மைகள், சுழலும் சிறு சக்கரங்கள் , தறிகள் எனப் பல சுவாரஸ்யமான உருவங்கள். சுவர்களில் ஓவியங்களும் சிலைகளும் மிக நேர்த்தியாய் அமைக்கப் பட்டிருந்தன.&amp;nbsp; ஒரு சிறிய அரங்கு ( கல்லினாலானது) போன்ற அமைப்பு, அதனுள் ஏராளமான பொம்மைகள் , அனைத்தும் நீரின் விசையால் இயங்குபவை. இதைத் தொடர்ந்த தோட்டத்தில் வண்ண மலர்களும் புல்தரையும்&amp;nbsp; கண்ணுக்குக் குளிர்ச்சியளித்தன. தோட்டத்திற்கு வரவேற்பு கூறும் வண்ணம் இரண்டு ஒற்றைக்கொம்புக் குதிரைகளின் சிலைகள் முன்கால்கள் தூக்கி நின்று கொண்டிருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.imagewaiter.com/images/1/b9mzeK1091143336.jpg" /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வனவிலங்ககம் ஒன்றும் அருகே உள்ளது.அத்தனை இயற்கையையும் கண்டு மனமகிழ்ந்து , நனைந்த உடைகள் உலர்ந்து நாங்கள் திரும்பினோம். &lt;br /&gt;&lt;br /&gt;Sound of Music&amp;nbsp; எனும் திரைப்படம் பற்றி அறிந்திருப்பீர்கள். இது சால்ஸ்பர்க்கின் பல இடங்களிலும், மாளிகைகளிலும் படமாக்கப்பட்டது. இது படமாக்கப்பட்ட இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டும் உலா (The Sound of Music Tour) ஒன்றும் இங்கு உண்டு. இது தவிர&amp;nbsp; சால்ஸ்பர்க்கின் அருகே உப்புச் சுரங்கங்களும் உண்டு . (&amp;nbsp;Salz என்றால் உப்பு என்று&amp;nbsp; பொருள்) . நேரமின்மையால் இங்கு செல்ல இயலவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பியச் சுற்றுலா மேற்கொள்பவர்கள் சால்ஸ்பர்க் வந்து செல்லாவிடில் அப்பயணம் ஒரு நிறைவான பயணமாகாது என்பது என் கருத்து. அப்படித்தானே?&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-109105013448378337?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/109105013448378337/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=109105013448378337' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109105013448378337'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109105013448378337'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/07/3.html' title='சால்ஸ்பர்க் - 3'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-109070106741703752</id><published>2004-07-24T22:29:00.000+02:00</published><updated>2004-07-25T00:38:09.880+02:00</updated><title type='text'>சால்ஸ்பர்க் - 2</title><content type='html'>&lt;img src="http://www.imagewaiter.com/images/1/aR8OIg1090707963.jpg" /&gt; &lt;br /&gt;நான்&amp;nbsp; சால்ஸ்பர்க் வந்த நேரத்தில் ( செப்டம்பர், 2000) ராமராஜனோ , லல்லுவோ இங்கு வந்திருந்தால் மிகுந்த சந்தோசம் அடைந்திருப்பர். நகரம் முழுதும் வண்ண வண்ணப் பசு மாடுகள் நின்றுகொண்டும் அமர்ந்து கொண்டும் இருந்தன, உயிருள்ள பசுக்கள் அல்ல, அனைத்தும் சிலைகள். சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து நூற்றைம்பது பசுச் சிலைகளை உருவாக்கினர். நகரின் பல்வேறு இடங்களில் இப்பசுச் சிலைகள் சுமார் மூன்று மாதங்களுக்கு வைக்கப்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்தன. இந்த நிகழ்ச்சியின் பின்னணி சுவையானது.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;பதினைந்தாம் நூற்றாண்டில் நடைபெற்ற விவசாயிகளின் போர் (Peasant's war) ஜெர்மனியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பரவியது. சால்ஸ்பர்க்கில் விவசாயிகள் ஆர்ச்பிஷப்-பின் வசிப்பிடமான கோட்டையை (ஹோஹன்சால்ஸ்பர்க் கோட்டை) முற்றுகையிட்டனர். மரக்குண்டுகளால் (அந்தக் காலத்தில் பீரங்கி ஏது?) கோட்டையின் சுவர்களைத் தாக்க ஆரம்பித்தனர். முற்றுகை பல நாட்களுக்கு நீடித்தது. கோட்டைக்குள் இருந்த உணவுப் பொருட்களின் கையிருப்பு குறைந்துபோக ஆரம்பித்தது. இதைக்கண்ட ஆர்ச்பிஷப் கவலை கொண்டார். இந்த விசயம் வெளியே முற்றுகையிட்டிருக்கும் விவசாயிகளுக்குத் தெரிந்தால் அவர்கள் தங்கள் முற்றுகையை நீடிப்பர்; உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்து போனபின் வேறுவழியின்றி கோட்டையை விட்டுத் தர வேண்டியிருக்கும் என்று ஆர்ச் பிஷப் அச்சம் கொண்டார். கோட்டையில் இருந்த மாடுகள் அனைத்தும் தீர்ந்து போய் விட எஞ்சியிருந்தது ஒரே ஒரு பசு மட்டும் தான்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.imagewaiter.com/images/1/2ORVum1090708036.jpg" /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது எந்த புத்திசாலிக்கு இந்த ஐடியா உருவாயிற்றோ தெரியவில்லை. எஞ்சியிருந்த மாட்டின் மீது வண்ணம் பூசி கோட்டையின் சுவர்கள் மீது விவசாயிகள் பார்க்கும் வண்ணம் நடக்கவிட்டனர். அடுத்த நாள் அந்தப் பசுவின் மீது வேறு நிற வண்ணம் பூசி கோட்டையின் மீது நடக்கவிட்டனர். இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணம் பூசி,&amp;nbsp; பசு கோட்டைச் சுவர்கள் மீது நடைபோட்டதாம். இதைக் கண்ட விவசாயிகளும் கோட்டைக்குள் நிறைய மாடுகள் (உணவு)இருப்பதாய் நம்பி ( அவ்வளவு முட்டாள்களா என்ன? ) வெறுத்துப் போய் தமது முற்றுகையைக் கைவிட்டனராம். இந்த நிகழ்ச்சியை நினைவுறுத்தும் வகையிலேயே இந்தப் பசு விழா ( Kuh und Kunst) நடைபெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;நகரின் மத்தியப் பகுதியின் ஒரு நீண்ட குறுகலான தெருவில் அமைந்திருப்பது மொஸார்ட்டின் பிறப்பிடம்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.imagewaiter.com/images/1/E7oRr71090708136.jpg" /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;1756, ஜனவரி 27 ஆம் தேதி இங்குதான் உல்ப்காங் அமேடஸ் மொஸார்ட் ( Woffgang Amadeus Mozart) பிறந்தார். மொஸார்ட்டின் தந்தை லியோபோல்ட் மொஸார்ட் ஒரு சிறந்த இசை ஆசிரியர். எனவே மிக இள வயதிலேயே மொஸார்ட்டுக்கு&amp;nbsp; இசையில் ஈடுபாடு வந்ததில் ஆச்சரியமொன்றும் இல்லை. சிறுவயது முதலே மன்னனின் சபைகளில் இசை நிகழ்ச்சிகள் செய்ய&amp;nbsp; அழைப்புகளும் இசைப்பதவிகளும் அவரைத் தேடி வந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.imagewaiter.com/images/1/2AvQOe1090708201.jpg" /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்திரியா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகள் பலவும் சென்று தனது இசையினால் பெரும்புகழ் அடைந்தார். சால்ஸ்பர்க்கில் அவர் பிறந்த இடம் தற்போது ஒரு அருங்காட்சியகமாக மாற்றப் பட்டுள்ளது. அங்கே அவர் உபயோகித்த இசைக் கருவிகள்(பியானோ , வயலின்) , நாற்காலிகள் , மேசைகள் மற்றும் இசைக்குறிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவரது பெற்றோர், சகோதரி , மனைவி மற்றும் பலரது ஓவியங்களும் இருந்தன. இரண்டாவது உலகப் போரின் போது இந்த நினைவிடம் சேதப்பட்டாலும், அதன் பின்னர் புதுப்பிக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;சால்ஸ்பர்க்கின் மிக அழகிய மிரபெல் தோட்டம் (Mirabel Garden) பதினாறாம் நூற்றாண்டில் அமைக்கப் பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.imagewaiter.com/images/1/4c63Rz1090708288.jpg" /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அப்போதைய ஆர்ச் பிஷப் தனது&amp;nbsp; மனைவிக்காக அரண்மனையை ஒட்டிய வெளியில் மிகப்பெரிய இந்தத் தோட்டத்தை அமைத்தார். மன்னர் தனது ஓய்வு நேரத்தில் இத்தோட்டத்தில் கழி(ளி)த்தாராம். பசும்புல்வெளிகளும், வண்ண வண்ண மலர்களும் விதவிதமான நீரூற்றுக்களும் காண்போர் மனதையெல்லாம் கொள்ளை கொள்ளும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-109070106741703752?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/109070106741703752/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=109070106741703752' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109070106741703752'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109070106741703752'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/07/2.html' title='சால்ஸ்பர்க் - 2'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-109044933071189595</id><published>2004-07-22T00:34:00.000+02:00</published><updated>2004-07-23T09:20:30.370+02:00</updated><title type='text'>சால்ஸ்பர்க் - 1</title><content type='html'>&amp;nbsp;&lt;img src="http://www.imagewaiter.com/images/1/zRGXr31090566582.jpg" /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;சால்ஸ்பர்க் (Salzburg) - ஜெர்மனியின் தென் எல்லைக்கு வெகு அருகில் அமைந்த ஆஸ்திரிய நகர். மியூனிக் மாநகரிலிருந்து இரண்டு மணிநேர இரயில் பயணத்தில் சால்ஸ்பர்க்கை அடையலாம். ஜெர்மனி வந்த சில வாரங்களில் நானும் எனது சகாக்களும் முதன்முதலில் இந்நகருக்குத்தான் பயணம் செய்தோம். ஆல்ப்ஸ் மலையின் அடிவாரத்தில் குடிசை போட்டு அமர்ந்திருக்கும்&amp;nbsp; நாடுகளில் ஆஸ்திரியாவும் ஒன்று. குளிர்காலங்களில் உடம்பெல்லாம் வெள்ளைப்பனி ஆடை உடுத்திக் கொண்டும் , வேனிற்காலங்களில் பச்சையாடை அணிந்துகொண்டும் காண்பதற்கு இனிமையான பல இடங்களைக் கொண்டது ஆஸ்திரியா. &lt;br /&gt;ஒரு செப்டெம்பர் மாத வேனிற்காலத்தில் சால்ஸ்பர்க் பயணம் செய்தோம். மியூனிக் நகரிலிருந்து சால்ஸ்பர்க் செல்லும் வழி நெடுகிலும் பசுமை , நீரோடைகள் , மலைச்சரிவுகள் என இயற்கை விரித்த அதிசயங்கள் தொடர்ந்தன. எழில் கொஞ்சும் சால்ஸ்பர்க்கில் தனிச் சிறப்புக்கள் பல இருந்தாலும் முக்கியமான ஒன்று- இசை மேதை மொஸார்ட் பிறந்த ஊர் இதுதான். எனவே நகரின் எந்த மூலைக்குச் சென்றாலும் எதாவது ஒரு குழு அல்லது ஒருவர் இசை வாசித்துக்கொண்டிருந்தார்கள். மொஸார்ட் பிறந்த வீடும் தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.imagewaiter.com/images/1/3C2rBU1090566738.jpg" /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நகரை இருபகுதிகளாக வகிடெடுப்பது சல்ஸாஹ் (Salzach) எனும் நதி. மிகப்பெரிய நதியல்ல. நதியின் இப்புறத்திலிருந்து அப்புறம் செல்ல, நதியின் குறுக்கே அமைந்த பாலங்கள் பல உண்டு. நதியோரத்தில் நடந்து சென்றால் சலசலத்து ஓடும் நீரின் ஓட்டத்தில் மனமும் ஓடும். நதியிலிருந்து பார்த்தால் எதிரே ஓர் பழைய கோட்டை தெரிந்தது. பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஹோஹென்சால்ஸ்பர்க் எனும் மலைக்கோட்டையே அது.&amp;nbsp; பாலம் ஒன்றைக் கடந்து அக்கரை அடைந்து கோட்டை செல்லும் வீதியில் நடந்தோம். சர்ச் ஒன்றும் இவ்வழியில் உள்ளது. செல்லும் வழியெல்லாம் மக்கள் வெள்ளம். அகலமான வீதிகளில் இசை நிரைந்து வழிந்தது.&amp;nbsp; வித்தியாசமான சதுரங்க அட்டையில் இருவர் செஸ் விளையாடிக்கொண்டிருந்தனர். நாம் சாதாரணமாக இரு விரல்களால் நகர்த்தும் காய்களை இரு கைகொண்டு தூக்கி நகர்த்தினர்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.imagewaiter.com/images/1/UaSFib1090537187.jpg" /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பட்டார் மொஸார்ட். அவரது சிலைதான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.imagewaiter.com/images/1/8HUKw11090537302.jpg" /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 400 அடி உயரமான கோட்டையை அடைய கம்பி மூலம் இயங்கும்(funicular) இரயில் உண்டு. சற்றே சரிந்த பாதை. நிமிட நேரத்தில் உச்சியை அடையும் வேகம். உச்சியை அடைந்ததும் நகரின் மொத்த உருவமும் கண் எதிரில். பறவையின்&amp;nbsp; பார்வை (Bird's View) நகர் மட்டுமல்ல . தொலைவில் தெரிந்த பனியொழுகும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களும் தான்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.imagewaiter.com/images/1/6WeeSQ1090566918.jpg" /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பதினோராம் நூற்றாண்டில் இந்நகரை ஆண்ட ஆர்ச்பிஷப் ( மன்னர்) கட்டிய இக்கோட்டை மத்திய ஐரோப்பாவின் பெரிய மலைக்கோட்டையாகும். &amp;nbsp;பின்னர் பதினைந்தாம் நூற்றாண்டில் மேலும் விரிவு செய்யப்பட்டது. கோட்டைச்சுவர்கள் மிகவும் தடிமனாக , எந்தவொரு தாக்குதலையும் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தன. போர்க்காலங்களில் மக்கள் பாதுகாப்பாக மறைந்து கொள்ளவும் இக்கோட்டை பயன்பட்டது. சில வேலைகளில் இக்கோட்டையின் பெரிய அறைகள் சிறைக்கூடங்களாகவும் மாறின.&amp;nbsp; எல்லா மலைக்கோட்டைகளிலும் இருப்பது போல் இங்கும் ஒரு மியூசியம். பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள், உடைகள், மன்னர்களது அறைகள், கட்டில்கள், நாற்காலிகள்&amp;nbsp; என விரிந்தது.&amp;nbsp; குற்றவாளிகளைப் பிடித்து அடைத்து வைத்து அவர்களைச் சித்திரவதை செய்யும் அறைகளும் (Torture rooms) இருந்தன. அவற்றிற்கருகில் இருந்த சில சிறிய அறைகளில் காவலாளிகள் தங்கும் அறைகளுமுண்டு. ஒரு சிறிய திரையரங்கும் பொம்மலாட்டம் நடைபெற்ற ஒரு அறையும் இருந்தன.&amp;nbsp; கோட்டையின் திறந்த வெளிகளில் தற்போது சிறியரக உணவகங்கள் அமைக்கப்பட்டு அதை ஒட்டிய அரங்குகளில் சிம்பனி இசை நிகழ்ச்சிகளும் நடந்த வண்ணம் இருந்தன. ஒரு சிலர் ஆஸ்திரியாவின் பழைய பாரம்பரிய உடையணிந்து நடந்துகொண்டிருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-109044933071189595?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/109044933071189595/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=109044933071189595' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109044933071189595'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/109044933071189595'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/07/1.html' title='சால்ஸ்பர்க் - 1'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-108975324726856680</id><published>2004-07-16T23:11:00.000+02:00</published><updated>2005-02-06T16:04:38.706+01:00</updated><title type='text'>ஸீபிட் 2004 - 3</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/advdsebit.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நோக்கியாவின் புதுரக செல்பேசிகள் அவ்வளவாய்க் கவரவில்லை. நோக்கியாவின் முதல் 3G பேசி (&lt;a href="http://www.nokia.com/nokia/0,,43867,00.html"&gt;நோக்கியா 7600&lt;/a&gt;) ஒரு டப்பா போல் இருந்தது. மற்ற அனைத்து செல்பேசி தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சிகரமான பேசிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நோக்கியாவின் போக்கு அதிர்ச்சியளித்தது. நம் வீட்டிலுள்ள தொலைபேசியின் ரிஸீவர் போல் இருந்த மற்றொரு பேசி (&lt;a href="http://www.nokia.com/nokia/0,6771,47550,00.html"&gt;நோக்கியா 7700&lt;/a&gt;)யும் பேசுவதற்கும் மற்ற பயன்பாடுகளுக்கும் வசதியாய் இல்லை. பேசியின் மூலம் எடுத்த படத்தை BLuetooth மூலம் இணைக்கப்பட்டிருந்த பிரிண்டரில் உடனடியாய் ஒரு பிரதி எடுத்துக் கொடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நோக்கியாவின் இந்தப்போக்கு அதன் விற்பனையைச் சிறிது பாதித்துள்ளது. சென்ற காலாண்டில் அதன் லாபம் சற்றுக் குறைந்துள்ளது. உலகின் பேசிச்சந்தையின் முப்பது சதவீதத்தை தன்னிடம் கொண்டிருந்த நோக்கியா ( இன்னும் முதலிடத்தில் இருந்தாலும்) சற்றே பின் வாங்கியுள்ளது. ஸாம்சங்கும் ஸோனிஎரிக்ஸனும் வேகமாய் முன்னேறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம் நாட்டிலிருந்து முப்பதிற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டதாக செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது . ஆனால் நாங்கள் பார்த்தவரை எந்தவொரு இந்தியக்கம்பெனியும் கண்ணில் படவில்லை. மென்பொருள் சேவையை (Software Service) மட்டும் நம்பி இன்னும் எவ்வளவு வருடங்களுக்கு நாம் தாக்குப்பிடிக்கப் போகிறோமோ தெரியவில்லை. ஏராளமான சீன , தைவான், ஜப்பானிய உற்பத்தி நிறுவனங்களைக் காண முடிந்தது.இதுவரை நான் கேள்விப்பட்டிராத கம்பெனிப் பெயர்கள் , சிறு சிறு எலெக்ட்ரானிக் பொருட்கள், உதிரி பாகங்கள் , அடாப்டர்கள் , உப பொருட்கள் (Accesorries) என எண்ணிலடங்கா . மின்னியல் மற்றும் மின்னணுவியல் உற்பத்தித் துறையில் அவை மற்ற ஐரோப்பிய நாடுகளையும் முந்திக்கொண்டு முன்னே செல்கின்றன என்று பார்க்கும் போது ஆச்சரியமாகவும், அதே நேரத்தில் நமது நிலையை எண்ணி வருத்தமாகவும் இருந்தது. தரமானதாகவும் விலை மலிவாகவும் அமைந்த ஆறாயிரம் கன்ஸ்யூமர் தயாரிப்புக்கள் (கணினித்துறையிலும் எலெக்ட்ரானிக் பிரிவிலும்) எனக் கூறி ஒரு சீன நிறுவனம் விளம்பரப்படுத்திக் கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/lg.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொப்பை வளர்த்த பிக்சர் ட்யூப் திரை போய் தட்டை வயிறு LCD திரைகள் வந்தபின் துல்லிய படமும் வண்ணக் கலவையும் கண்ணை அள்ளும். எல் ஜி மற்றும் ஸாம்சங் நிறுவனங்களின் LCD திரைகள் கண்ணைக் கவர்ந்தன. 170 டிகிரிக் கோணம் வரை பார்க்கும் வசதி(tilting), உயரத்தை அதிகரிக்கவோ  குறைக்கவோ செய்ய வசதி உண்டு. இன்னும் பல சிறப்பம்சங்களுடன் கூடிய கணினித்திரைகளும் தொலைக்காட்சியின் அகலத்திரைகளும் (Wide Screen)வரிசையாய் அணிவகுத்தன. ஸாம்சங் நிறுவனத்தின் டிஜிட்டல் ஒலிப்பிரிவில் புதிய ரக வாக்மென்களும், MP3 ப்ளேயர்களும் , நாப்ஸ்டர் ப்ளேயரும் , ஸிடி மேன்களும் பாடல் கேட்கத் தூண்டின. ஒன்று மட்டும் எனக்குப் புரியவில்லை. இப்படி எல்லா நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு MP3 ப்ளேயர்களையும் , நாப்ஸ்டர் ப்ளேயர்களையும் சந்தையில் கடைவிரித்து விற்றுக் கொண்டிருக்கின்றன. எனக்குத்தெரிந்து காப்பி உரிமையுடன் (copy Right) MP3 பாடல்களை இதுவரை யாரும் காசு கொடுத்துக் கேட்பதில்லை. இணையம் வழி இலவசமாய் உருவியே அனைவரும் தத்தமது நினைவுக் குச்சியில் (Memory stick) சேமித்து கேட்டுக் கொள்கிறார்கள். எனவே இத்தகு டிஜிடல் ஒலிக் கருவிகளின் பயன்பாடு ஒலித்திருட்டை (Audio piracy) ஊக்குவிக்கிறதேயன்றி ஒரு ஆரோக்கியமான சந்தையை உருவாக்குவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சில துளிகள் ....&lt;br /&gt;&lt;br /&gt;1. HP நிறுவனத்தின் அடுத்த தலைமுறை மாத்திரைக் கணினி &lt;a href="http://h18000.www1.hp.com/products/tabletpc/"&gt;TC 1100 &lt;/a&gt;(Tablet PC) : குறைந்த வோல்டேஜ் , மொபில் ஸெலெரான் ப்ராசசர் , நீடித்த பாட்டரி , மற்றும் கம்பியில்லா லான் (Wireless LAN) .கைக்கடக்கமான குட்டிக் கணினி ,மாத்திரையாகவும் நோட்டுக் கணினியாகவும் இரு செயல்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;2.கண்காட்சியில் பலவிதமான குட்டி நினைவுக் குச்சிகள் &amp; அட்டைகள் (memory sticks ans cards) பார்த்தேன். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப் போல் உருவம் சிறிது ஆனால் நினைவாற்றல் பெரிது.&lt;br /&gt;&lt;br /&gt;3. மென்பொருள் சந்தையின் தற்போதைய தேவை "பாதுகாப்பான பரிவர்த்தனை மற்றும் பயன்பாடு" . தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை விட வேகமாய் வளரும் இந்த வைரஸ் பிரச்சினைகள் தான் . எனவே மென்பொருள் பாதுகாப்பு (Software Security) குறித்த தனியான குடில் ஒன்று என்ற பெயரில் இயங்கியது. தினமும் ஒரு தலைப்பில் விரிவுரைகளும் நடத்தப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;4. வேலை வாய்ப்புப் பிரிவும் இங்கு உண்டு. பெரிய நிறுவனங்கள் தங்கட்குத் தேவையான ஆட்களை இங்கே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வகையில் அமைந்த இக்குடிலில் இம்முறை அவ்வளவாய் வாய்ப்புகள் இல்லை. ஐரோப்பாவில் நிலவி வரும் மந்த நிலையால் கடந்த வருடம் முதலே இங்கு வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.  நம்மூர் மாணவர்கள் (ஜெர்மனியில் பட்ட மேற்படிப்பு )பலரையும் கண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;5.பல்வேறு வசதிகளுடன் ( நிறைய மெமரி , அதிக வேகம் , Bluetooth, வயர்லெஸ் LAN , DVD Read Write, ) கூடிய மடிக்கணினி , வீட்டுத் திரையரங்குகள்(Home theaters) , அனைத்துப் பட வகைகளையும் காண ( mp3 , JPEG, DVD, XVCD, MPEG-4,VCD ) உதவும் DVD ப்ளேயர்கள் ,  செயல் திறன் கூடிய கலர் பிரிண்டர்கள் , உள்ளங்கை கணினி என நவீனத் தொழில் நுட்பத்தின் தயாரிப்புகள் அணிவகுத்தன&lt;br /&gt;&lt;br /&gt;6.இந்த வருடம் கலந்துகொண்ட நிறுவனங்களுள் 46 சதவீதம் வெளிநாட்டு நிறுவங்கள் (ஜெர்மனி சாராதவை)&lt;br /&gt;&lt;br /&gt;7.ஏழு நாட்கள் நடந்த இக்கண்காட்சியில் கலந்து கொண்டவர்கள்  ஐந்து இலட்சத்திற்கும் அதிகம். இதில் 25 சதவீதம் பேர் வெளி நாட்டினர்&lt;br /&gt;&lt;br /&gt;ஸீபிட் பற்றிய மேலும் பல  செய்திகளை அறிந்து கொள்ள  : &lt;a href="http://www.cebit.de/homepage_e?x=1"&gt;http://www.cebit.de/homepage_e?x=1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-108975324726856680?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/108975324726856680/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=108975324726856680' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108975324726856680'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108975324726856680'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/07/2004-3.html' title='ஸீபிட் 2004 - 3'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-108941036257936913</id><published>2004-07-09T23:58:00.000+02:00</published><updated>2005-02-06T16:02:08.563+01:00</updated><title type='text'>ஸீபிட் 2004 - 2</title><content type='html'>மரத்தினால் சட்டம் போடப்பட்ட LCD கணினித் திரையைப் பார்த்திருக்கிறீர்களா? மரத்தினால் ஆன கணினி விசைப்பலகை பார்த்ததுண்டா? படத்தில் நீங்கள் காண்பது ஸ்வீடெக்ஸ் எனும் நிறுவனம் அளிக்கும் தயாரிப்புகளே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/wood-monitor.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/XK1_BE1_USB_keyboard_beech_wood_topview.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இம்மாதிரியான மர வேலைப்பாட்டுக் கணினித்திரை, சொடுக்கிகள் மற்றும் விசைப்பலகைகளைக்காண &lt;a href="http://www.swedx.com"&gt;இங்கு&lt;/a&gt; செல்லுங்கள். இந்த வடிவங்கள் அனைத்தும் ஸீபிட்டில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் முப்பது மெகா சைஸ் காட்சிக்கூடங்கள். மொத்த மைதானத்தையும் சுற்றிப் பார்க்க இரண்டு நாட்கள் தேவைப்படும். ஒவ்வொரு கூடமும் தனித்தனி பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மென்பொருள் மற்றும் மென்பொருள் சேவைக்கென மூன்று பெரிய கூடங்கள், தகவல் தொழில் நுட்பம் தொடர்பான சாதனங்கள் பற்றிய கண்காட்சிக்கென பத்துக் கூடங்கள், தொலைத்தொடர்பு மற்றும் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளுக்கு பதினைந்து கூடங்கள் (வேலை வாய்ப்புப் பிரிவும் இதில் அடங்கும்) வங்கி மற்றும் வணிகத்துறைக்கென ஒரு கூடம் மற்றும் ஆராய்ச்சிப் பரிசோதனைகள் , புதுத் தொழில் நுட்பங்கள் , வணிகச் சந்திப்புகளுக்குக்கென ஒரு கூடம். மைதானத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல சிறியரகப் பேருந்துகளும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் என் மனைவியும் செல்பேசித் தயாரிப்பில் பணியாற்றுவதால் அது தொடர்பான கூடத்திற்கு முதலில் சென்றோம்.செல்பேசித் தயாரிப்பின் நவீன வகைத் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் பரப்பி வைத்திருந்தனர். பேசிச்சந்தையின் தற்போதைய சூடான தயாரிப்பு - மெகா பிக்ஸெல் கேமராவைக் கொண்ட செல்பேசிகள். ஸாம்சங் மற்றும் ஸோனி எரிக்ஸனின் மாதிரி வடிவங்கள் இருந்தன. ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியே பெரிய பெரிய விளம்பரங்கள் , வண்ண வண்ணக் கையேடுகள் , தத்தமது தயாரிப்புகளைப் பார்வையாளருக்கு விளக்கிக்கூற விளக்குனர்கள் என கண்காட்சியைக் களைகொட்ட வைத்துக் கொண்டிருந்தன. நோக்கியா , எல்ஜி , மோட்டரோலா , ஸீமன்ஸ் , ஸோனி எரிக்ஸன், ஸாம்சங்,பானஸோனிக் , என் இ சி (NEC) என செல்பேசி தயாரிப்பில் கொடி கட்டிப்பறக்கும் பெரிய நிறுவனங்களின் மாதிரிகள் எல்லாவற்றையும் பார்வையிட்டோம். செயல்முறை விளக்கங்களும் (டெமோ) கண்டோம். 3G வகைச் செல்பேசிகள் ( பேச்சுடன் பேசுபவரைப் பார்க்கவும் உதவும் Videophone) சிலவற்றையும் கண்டோம்.செல்பேசிக் கேமராவினால் எடுக்கப்பட்ட படங்களை உடனுக்குடன் அச்சிடவும் ( பிரின்டரும் செல்பேசியும் Bluetooth மூலம் தொடர்பு கொள்ளும்) எடுத்த படங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பவும் தற்போது சாத்தியமாகிறது. செல்பேசியுடன் இணைக்கப் பட்டிருக்கும் Bluetooth என்ற குறுகியதூர தொடர்பு வசதியால் ரிமோட் கன்ட்ரோல் கார்களை இயக்கி விளையாடவும் முடியும்.&lt;br /&gt;பேசுவதற்கு மட்டுமே செல்பேசி என்ற நிலை போய் எல்லாச் செயல்களுக்கும் ( அலாரம், கேமரா , குறிப்பேடு, மின்னஞ்சல், இணையம் , BLuetooth , Infra red,FM ரேடியோ , கால்குலேட்டர், விடியோகேம்ஸ்) பேசியே துணை என்றாகிவிட்டது. நோக்கியாவும் மோட்டரோலாவும் , தங்களது செல்பேசி கொண்டு வீடியோ கேம்ஸ் போல் மொபைல் கேம்ஸ் விளையாடத் தனித்தனி கூடாரங்கள் அமைத்து பார்வையாளர்களைக் கவர்ந்து கொண்டிருந்தன. அந்தக் கூட்டத்தில் மோட்டரோலாவின் செல்பேசி ஒன்றை யாரோ சுட்டுக்கொண்டு போய் விட போலீஸ் வந்து விசாரித்துக்கொண்டிருந்தார்கள். பார்வையாளர்களைக் கவர பானஸோனிக் நிறுவனத்தினர் ஆடல் காட்சியொன்றும் அளித்து உற்சாகப்படுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/sonyericsson.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம்: ஸோனிஎரிக்ஸனின் (Z1010) 3G செல்பேசி&lt;br /&gt;&lt;br /&gt;செல்பேசித் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமல்ல, நெட்வொர்க் சேவை அளிக்கும் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களின் புதிய சேவைகளை அறிமுகப் படுத்திக்கொண்டிருந்தன. சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் நான் ஜெர்மனி வாசம் முடித்து ஸ்வீடன் வரும்போது 3G என்கின்ற அகலப்பட்டை செல்பேசி சேவை (3G ,Wideband CDMA ) எந்த ஒரு சேவையாளரும் தரவில்லை. ஆனால் தற்போது மூன்று நிறுவனங்கள் ( T- மொபைல் , வோடபோன் மற்றும் இ-ப்ளஸ்) தர ஆயத்தமாயிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/vodafone.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வோடபோன் (Vodafone) நிறுவனம் தனியாக ஒரு வித்தியாசமான குடிலை அமைத்து (படத்தில் காண்க) தனது சேவைகளைப் பட்டியலிட்டுக் கொண்டிருந்தது. செல்பேசியின் சிம் (SIM)கார்டை மடிக் கணினியில் செலுத்தி அகலப்பட்டை (Broadband Internet) இணைய இணைப்புப் பெறும் வசதி அளிப்பதாய்க் கூறி அதற்கு செயல்முறை விளக்கமும் அளித்தனர்.இணைய வேகம் 300 கிலோபைட்டுகள் வரை. அடிக்கடி மடிக்கணினியுடன் பயணம் மேற்கொள்ளுபவர்களுக்கு மிக நல்ல பயன்பாடாகும் இது. ஏறத்தாழ ஐரோப்பாவின் எல்லாநாடுகளிலும் தனது சேவையை விரிவு செய்து நெட்வொர்க் சேவையாளர்களிடையே தனிப்பெரும் சக்தியாக வோடபோன் திகழ்கிறதென்றே சொல்லலாம். இதைக் கண்டு சற்று மலைத்த மற்ற சேவையாளர்கள் ( ஜெர்மனி - T மொபைல் , இத்தாலி - TIM , ஸ்பெயின் - டெலிபோனிகா , ப்ரான்ஸ் - ஆரஞ்ச்) வோடபோனின் ஆதிக்கத்தைக் குறைக்க &lt;a href="http://www.freemovealliance.com"&gt;Freemove alliance&lt;/a&gt; என்ற கூட்டுத்திட்டத்தை வகுத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸீபிட் உலா அடுத்த பதிவிலும்.....&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-108941036257936913?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/108941036257936913/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=108941036257936913' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108941036257936913'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108941036257936913'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/07/2004-2.html' title='ஸீபிட் 2004 - 2'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-108880990155451857</id><published>2004-07-03T01:11:00.000+02:00</published><updated>2005-02-06T15:58:54.890+01:00</updated><title type='text'>ஸீபிட் 2004  - 1</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/hannover.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் ஆறாயிரம் கடைவிரிப்பாளர்கள் , மூன்று லட்சம் சதுரமீட்டர் பரப்பளவு கண்காட்சி மைதானம் , புத்தம்புதுக் கண்டுபிடிப்பு வடிவங்களின் அணிவகுப்பு மற்றும் இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் . இவையனைத்தும் எங்கே என்று கேட்கிறீர்களா? ஜெர்மனியின் ஹானோவர்(Hannover) நகரில் வருடாவருடம் நடக்கும் ஸீபிட்(CeBIT) கண்காட்சியில் தான். உலகின் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புக் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு வார காலத்திற்கு இங்கு நடைபெறுகிறது.உலகெங்குமுள்ள ஆயிரக்கணக்கான தயாரிப்பு நிறுவனங்கள் , சேவை நிறுவனங்கள், வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்பாளர்கள் , மின்னனுவியல் சாதனங்கள் தயாரிப்பாளர்கள் , செல்பேசி நிறுவனங்கள், செல்பேசி சேவை அளிக்கும் நிறுவனத்தினர் என அனைவரும் ஒரு குடையின் கீழ் கூடும் இடம் மார்ச் மாதத்து ஹானோவர்தான். ஒவ்வொரு நிறுவனமும் தான் புதிதாய்த் தயாரித்த மின்னனுவியல் பொருட்கள் , வன்பொருள், மென்பொருள் மற்றும் செல்பேசி போன்றவற்றைச் சந்தையில் வெளியுடும் முன் ஸீபிட்- டில் காட்சியாய் வைத்து விளம்பரம் தேடுகின்றன. தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களும் தாம் அளிக்கும் உயர்வகை நுட்பங்களையும் பட்டியலிட்டு அச்சேவை சார்ந்த பிற நிறுவனங்களுக்கு வலை விரிக்கின்றன. தொழில் நிறுவனங்களிடையே வணிக ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கும் மற்ற போட்டியளர்களின் தயாரிப்புகளை அறிந்துகொண்டு தற்போதைய சந்தையின் போக்கினைப் (Trend) புரிந்து அதற்கேற்ப தொழில் நுணுக்கங்களை வகுப்பதற்கும் இந்த ஹானோவர் சந்திப்பு பெரிதும் உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸீபிட் தோன்றிய கதை மிகப் பெரியது, சுருக்கமாகவே சொல்கிறேன்: ஒவ்வொரு வருடமும் ஹானோவர் சந்தை (Hannover Fair) சுமார் ஐம்பது வருடங்களாக நடந்துவருகிறது. குறைக்கடத்திகளின் (Semi conductors) கண்டுபிடிப்புகளுக்குப்பின் மின்னணுவியல் துறையில் ஏற்பட்ட புரட்சி , மின்னணு இயந்திரங்களுக்கும் இந்தச் சந்தையில் ஒரு இடம் பிடித்துக் கொடுத்தது. கணினியின் வரவு மற்றும் தொலைத் தொடர்பியலின் அசுர வளர்ச்சியின் காரணமாக தகவல் தொழில் நுட்பச் சந்தை இக்காட்சியில் முக்கியப் பங்கு வகிக்க ஆரம்பித்தது. 1980-களின் ஆரம்பத்தில் "மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பச் "சந்தையினைத் தனியான ஒரு கண்காட்சியாக நடத்தும் திட்டம் வலுப்பெற்று அதற்கு செயல் வடிவமும் கொடுக்கப்பட்டது. ஜெர்மனியின் பெரிய நகரங்களிலெல்லாம் இம்மாதிரியான சந்தைகள், விழாக்கள் நடைபெறுவதற்கென்றே காட்சி மைதானங்கள்( ஜெர்மன் மொழியில் இதை Messe என்பார்கள்) அமைக்கப்ப்பட்டிருக்கும். அத்தகு மைதானத்தில் 1987 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஸீபிட் கண்காட்சி தனியான ஒரு பெருங்காட்சியாக மலர்ந்தது. சரி , ஸீபிட் என்றால் என்ன? மத்திய தகவல் தொழில்நுட்ப அலுவலகம் (Center for office and Information technology) என்பதன் சுருக்கமே ஸீபிட் . 87-ல் அனைவரும் கண்காட்சியை ஆவலுடன் எதிபார்த்துக் கொண்டிருக்க எதிபாராமல் வீசிய பனிப்புயலினால் சுமார் ஒரு மீட்டர் உயரத்திற்கு பனி வளர்ந்துவிட்டதாம். பனியகற்றும் வேலையைப் பலமணி நேரம் செய்து காட்சி தடையின்றி நடைபெற்றது. இதனால் அந்த வருடத்து ஸீபிட் வேடிக்கையாக Snowபிட் என்றழைக்கப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/cebit_87.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹானோவரில் இக்கண்காட்சியின் மாபெரும் வெற்றி , உலகின் மற்ற பகுதிகளிலும் ஸீபிட் விழா தற்போது நடத்த வழி வகுத்தது. அமெரிக்கா, ஆசியா , ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களிலும் திட்டமிடப்பட்டு கண்காட்சிகள் நடைபெறுகின்றன. சீனாவின் ஷங்கை நகரில் ஸீபிட்-ஆசியா ஏப்ரல் மாதத்திலும் , ஸீபிட்-அமெரிக்கா, நியூ யார்க் நகரில் ஆண்டு தோறும் மே மாதத்திலும், ஸீபிட் ஆஸ்திரேலியா சிட்னியில் அதே மே மாதத்திலும் நடைபெறுகின்றன. துருக்கியின் தலைநகரம் இஸ்தான்புல்-லில் இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ஸீபிட்- ஈரோ ஆசியா காட்சி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடம் நடைபெற்ற கண்காட்சிக்கு நானும் எனது மனைவியும் சென்றிருந்தோம். மூன்று வருடங்கள் ஜெர்மனியில் வசித்தபோது நான் செல்லவில்லை ( எனது மனைவி வருடம் தவறாமல் கலந்து கொள்பவர்) . தற்போது ஸ்வீடனிலிருந்து ஹானோவர் செல்லத் தீர்மானித்தோம். ஸ்வீடனின் தென்கோடியில் எங்கள் வசிப்பிடம் இருந்ததால் ஜெர்மனி சற்றுப் பக்கம்தான். டென்மார்க் வழியாக ஜெர்மனியின் பல நகரங்களுக்கும் பேருந்து வசதி உண்டு. சற்று முன்கூட்டியே முன்பதிவு செய்யாததால் விமானத்தில் பயணம் செய்ய முடியவில்லை. சரி, ஆறு அல்லது ஏழு மணி நேரப் பஸ் பயணம் தானே என்று எண்ணி பேருந்தில் ஏறி அமர்ந்தால், பயணம் நம் ஊர் பஸ் பயணம் போன்றே இருந்தது. மீண்டும் திரும்பி வரும் போது வசதியாக இரயிலில் வந்து விட்டோம். டென்மார்க்கையும் ஜெர்மனியையும் கடல் பிரிக்கிறது . கடல் வழியைக் கடந்து செல்ல பெரிய ரகக் கப்பல். பேருந்தையே கப்பலுக்குள் செலுத்திவிட்டனர். இது கூட ஆச்சரியமல்ல. திரும்பி வரும்போது இரயிலில் வந்தோம் என்று சொன்னேனல்லவா? கடல் பிரிக்கும் இடத்திற்கு வந்தவுடன், இரயிலும் கப்பலுக்குள் புகுந்து கொண்டது. கடலைக் கடந்தவுடன் கப்பலுக்கு நன்றி கூறி , இரயில் தனது பயணத்தைத் தொடர்கிறது.&lt;br /&gt;ஜெர்மனியின் மற்றொரு பெரிய நகரான ஹாம்பர்க் கடந்து ஹானோவர் வந்தடைந்தோம்.87 ஆம் ஆண்டில் பனிப்பொழிவு இருந்ததைப்போல இந்த வருடம் இல்லை, என்றாலும் நாங்கள் சென்ற நாளில் சூறைக்காற்று சுழற்றி அடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடக் கண்காட்சியின் சிறப்பம்சங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-108880990155451857?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/108880990155451857/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=108880990155451857' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108880990155451857'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108880990155451857'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/07/2004-1.html' title='ஸீபிட் 2004  - 1'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-108846196233644377</id><published>2004-06-29T01:32:00.000+02:00</published><updated>2005-02-06T15:48:58.486+01:00</updated><title type='text'>ஹன்ஸ் குகைகள் - 2</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/rock4.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுண்ணாம்புப் பாறைக்குகைகளின் அமைப்பும் வளர்ச்சியும் அங்குள்ள நீரின் ஓட்டம் மற்றும் கசிவினைப் பொருத்தது. குகையின் கூரையில் கசியும் நீர் இறுகி தொங்கு பாறைகள் வளருகின்றன. தொங்கு பாறைகள் சிந்தும் நீர் தரையில் பட்டு இறுகி தரையிலிருந்து கொம்புபாறைகள் வளர்கின்றன. பாறைகளின் நிறம் அதில் படும் நீரின் மாசு அளவைப் பொருத்து அமையும். எண்ணற்ற இப்பாறைகள் அனைத்தையும் தொடர்ந்து பார்வையிட்டுக்கொண்டே அங்கிருந்த மரப்படிகளில் மேலேயேறியும் கீழிறங்கியும் வளைந்து நெளிந்த பாதையில் நடந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/rock3.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓரிடத்தில் வழக்கத்திற்கு மாறாய்ச் சற்று விசாலமானதாகவும் உயரமாகவும் இருந்தது. அங்கே அமர்வதற்கு பல மர இருக்கைகள் இடப்பட்டிருந்தன. வெகுநேரம் நடந்தவர்கள் சற்று இளைப்பாற அமைக்கப் பட்டவை என எண்ணினேன், ஆனால் வழிகாட்டி எங்கள் அனைவரையும் அழைத்து அவ்விருக்கைகளில் அமரச் சொன்னார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.மங்கலாய் எரிந்து கொண்டிருந்த அனைத்து விளக்குகளும் திடீரென்று இருட்டாயின. சற்று நேரத்தில் குகைக்குள் மெல்லிய சிம்பொனி இசை பரவியது. இசையின் ஒலி பெரிதாகிக் கொண்டே வர, எங்கிருந்தோ வந்த ஒரு லேசர் ஒளிக்கற்றை குகையின் கூரையின் மீதமர்ந்த ஒரு வித்தியாசமான தொங்கு பாறையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அடுத்து வந்த மற்றொரு ஒளிக்கற்றை குகையின் பக்கவாட்டுச் சுவரில் படிந்திருந்த இன்னொரு பாறையைத் தாக்கியது. இப்படியாய் இசையும் ஒளியும் இணைந்து அங்கிருந்த விதவிதமான பாறைகளைக் கண்களுக்கு விருந்தாக்கின. வெவ்வேறு வண்ணங்களில் சிந்திய ஒளியும் , ஏறி இறங்கிய இசையின் ஒலியும் ஒன்றோடொன்று இயைந்து ஒரு ஒளி ஒலிக்காட்சியைக் கண்ட உணர்வினை உண்டாக்கின.சுமார் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குத் தொடர்ந்தது இந்நிகழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரங்கத்தைக் கடந்து சென்றவுடன் ஒரு பெரிய நீரோடை . இது ஒரு குற்றாறு . இதன் பெயர் லெஸ்ஸி. குகையடி வழியாக எவ்வாறு இதன் பயணம் நிகழ்கிறது என எண்ணும்போது வியப்பாயிருந்தது. ஹன்ஸ் பகுதியைச் சுற்றியுள்ள மலையின் ஓரிடத்தில் யார் கண்ணிற்கும் படாமல் மறைந்து கொள்ளும் லெஸ்ஸி, இந்த இடத்தில் தான் மறுபடியும் முகம் காட்டுகிறது. இதன் பாதையைத் தேடி மலைக்குகைக்குள் புகுந்தவர்கள் சிலர் அதன் பிறகு வெளிவரவே இல்லையாம்.நதிநீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. நான்கு பாகை செல்சியஸ் குளிர்நிலை. நிலமட்டத்திலிருந்து 60 மீட்டர் ஆழத்தில் ஓடும் ஆறு இது. சிறிய படகுகள் மிதந்துகொண்டிருந்தன. அனைவரும் அதில் ஏறி அமர்ந்தோம். பார்ப்பதற்குச் சிறிய படகு போல் தெரிந்தாலும், நிறைய இருக்கைகள் (நீட்டி மடக்கும் மரப்பலகைகள்) இருந்தன.படகு புறப்பட்டது. சிறிது நேரத்தில் லேசான வெளிச்சம் கண்ணுக்குத் தெரிய , வெளியுலகு புலப்பட்டது. அந்நேரத்தில் "படார்" என ஒரு வெடியொலி. திடுக்கிட்டுத் திரும்பினால் " குகை சென்று மீண்டதை" உணர்த்தும் வகையில் வெடிக்கப்படும் வெடி என்றனர். நீள நீளமான குகைப்பாறைகள் இன்னமும் கண்முன் விரிந்துகொண்டிருக்க எங்களது பயணம் நிறைவுற்றது. இம்மலைக்குகைகள் பற்றிய காட்சியகம் ஒன்றும் இங்கே உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/outofcave.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மலைக்குகையைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் வனவிலங்குகள் சரணாலயம் உண்டு. கூண்டுகளுக்குள் அடைத்து வைத்த விலங்குகள் இல்லை அவை. சுதந்திரமாய் வனப் பகுதியில் சுற்றித்திரியும் விலங்குகள்.பெரிய வேன் ஒன்றில் பார்வையாளர்களை அடைத்துக் கொண்டு அவ்வனப் பகுதியைச் சுற்றிக் காட்டுகிறார்கள். சரி, இதையும் பார்த்துவிடலாம் என்று எண்ணி சவாரி மேற்கொண்டோம். முதலில் நாங்கள் சந்தித்த அதிசய விலங்கு எது தெரியுமா? பன்றிகள். . அடுத்து வந்தவை ஆடுகள். பின்னர் மாடுகள், காட்டு நாய்கள் , மான்கள் , குதிரைகள் என வரிசையாய்ப் பல அரிய விலங்கினங்களைக் கண்டு களித்தோம். உடன் வந்தவர்கள் மிகவும் குதூகலித்துக் கொண்டு "வாவ்" என வாய் பிளந்தனர். நானும் என் நண்பனும் "ஆவ்" என்று கொட்டாவி விட்டோம்.இதையெல்லாம் விட பெரிய அதிசயம் , அந்த வனவிலங்ககம் பற்றி எங்களுக்குத் தரப்பட்டிருந்த கையேட்டில் " வன விலங்கில் புது வரவு , அழகான அரிய வகைக் கழுதைகள்" என்று குறிப்பிட்டிருந்ததுதான். தொடர்ந்த பயணத்தில் நாங்கள் இரசித்தது பசுந்தோல் போர்த்திய வனப்பகுதி ,குறுகலாய் வளைந்த பாதைகள் மற்றும் உயர்ந்தோங்கிய மரங்கள் மட்டும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சென்றிருந்த அவ்வேளை "நாட்டுப்புற வாரம் " கொண்டாடப்பட்ட நேரம். பசுப்பையன் (Cow boy) போல் உடையணிந்த பலரும் குதிரைகளில் ஏறி உலா வந்துகொண்டிருந்தார்கள். மாடு மேய்ப்பவர்கள் பயன்படுத்தும் தோலாடைகள், இடைவார்கள் (belt) , தொப்பிகள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகளும் அங்கிருந்தன. உள்ளூர் குழுவினர் நாட்டுப் பாடல்களைப் பாடினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பகல் முழுதும் சுற்றித்திரிந்து களைத்து நாங்கள் இனிய நினைவுகளுடன் திரும்பினோம்&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-108846196233644377?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/108846196233644377/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=108846196233644377' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108846196233644377'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108846196233644377'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/06/2_29.html' title='ஹன்ஸ் குகைகள் - 2'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-108802692752263816</id><published>2004-06-23T23:41:00.000+02:00</published><updated>2005-02-06T15:45:36.553+01:00</updated><title type='text'>ஹன்ஸ் குகைகள் - 1</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/belgium.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெல்ஜியம், லக்ஸம்பெர்க் மற்றும் நெதெர்லாந்து (ஹாலந்து) ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டிருக்கும் சிறிய நாடுகள் . மூன்று நாடுகளையும் இணைத்து பீனலக்ஸ் (Benelux) என்று சொல்லுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பதிவில் நாம் காணப்போவது பெல்ஜியத்தின் தென் பகுதியிலமைந்த ஹன்ஸ் குகைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெல்ஜியத்தின் தலைநகரம் ( ஐரோப்பாவின் தலைநகரமும் கூட) ப்ரஸல்ஸ் (Brussles) நகரிலிருந்து லக்ஸம்பர்க் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது இக்குகை. மேலே தெரியும் வரைபடத்தில் குறிப்பிடும் அளவுக்கு பெரிய ஊர் இல்லை. குகைக்கு அருகே அமைந்த பெரிய நகரம் நாமுர் (Namur). நாமூரைக் கடந்து சிறிது நேரத்தில் இரயில் யெமிலி (Jemille) என்ற சிற்றூரில் நிற்கும்போது இறங்கிக் கொள்ள வேண்டும். யெமிலியிலிருந்து பேருந்துப் பயணம். சுமார் பத்து கிலோமீட்டர் கடந்தால் உங்களை வரவேற்கிறது ஹன்ஸ் சுர் லெஸ்ஸி (Hans-Sur-Lesse) . சற்று வித்தியாசமான பெயர்தான். நான் அங்கே சென்ற நேரம் நல்ல கோடைகாலம், என்றாலும் வழக்கத்திற்கு மாறான குளிரும் மழையும் அன்று பயணத்திற்கு இடையூறாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குகைச் சுற்றுலா செல்ல அனுமதிச்சீட்டு வாங்கி, தயாராக நின்றிருந்த சிறிய செந்நிற ட்ராம் வண்டியில் அமர்ந்தோம். சில்லென்ற குளிர்காற்று முகம் வருட, வண்டி புறப்பட்டது. சரிவான பாதை. குகையின் வாசலை அடைய பத்து நிமிடப் பயணம் . செல்லும் வழியில் பச்சைப் பசேலென்ற புல்வெளியும் , புல் மேய்ந்துகொண்டிருந்த மான்கூட்டங்களும் , வழியெங்கும் அணிவகுத்த உயரமான மரங்களும் மனதை மயக்கின. கீழேயுள்ள படத்தில் காண்பது நாங்கள் பயணம் செய்த ட்ராம் வண்டி. குகை வாசலில் நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/tram.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் இறங்கியவுடன் வழிகாட்டிகள் வரவேற்கிறார்கள். ஜெர்மன், ஆங்கிலம், டச்சு, பிரெஞ்சு என மொழிக்கு ஒரு வழிகாட்டி. சில சமயத்தில் இரு மொழிகட்கு ஒரு வழிகாட்டியும் அமைவதுண்டு. பயணிகளை மொழிவாரியாகப் பிரித்து சிறுசிறு குழுக்களாய் குகைக்குள் அனுப்புகிறார்கள். எங்களுக்கமைந்த வழிகாட்டி ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் குறிப்புகள் அளித்தார். குகைக்குள்ளே குளிர் அதிகம் இருக்கும் என்றார். சற்றே இருட்டாயிருந்த குகைக்குள் ஒவ்வொருவராய் நுழைந்தோம். வெளிச்சம் குறைந்த பல மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன, சிறு சிறு படிகள் அமைக்கப்பட்டிருக்க கீழே இறங்கினோம். இந்தக் குகை செயற்கையாய்ச் செய்த குகை அல்ல. இயற்கையே அமைத்த குகை. உள்ளே நிறையப் பாறைகள். கற்பாறைகள் அல்ல , அனைத்தும் சுண்ணாம்புப் பாறைகள். வெளிச்ச நிறத்தில் பளிங்கு போல் பளபளத்தன. இவையனைத்தும் மனிதன் போல் வளரும் பாறைகள். குகைக்குள் ஈரக்கசிவு இருப்பதால் பாறைகள் மீது ஈரம் சேர்ந்து பல நூறாண்டுகளாய் வளர்ந்து ஆச்சரியம் கொடுத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/stalagmites.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குகையின் தரையிலிருந்து மேல்நோக்கி வளர்வன ( stalagmites) , குகையின் கூரையிலிருந்து கீழ்நோக்கி வளர்ந்து தொங்குவன(stalactites) , திரைச்சீலை (curtain) போல அடுக்கடுக்காய், வளைவு வளைவாய் அமைவன , கண்ணாடிபோல் பளபளக்கும் படிவுப்பாறைகள் , ஈரக்கசிவினால் மினுமினுத்து பாறையின் நுனியில் ஈரம் உறைந்த ( பாதி நீர்த்துளியாகவும் பாதி பாறையாகவும் ) பாறைகள், கத்திபோல் வளர்பவை, செய்து வைத்த சிலைபோல் உருவங்கொண்ட பாறைகள் , யானைத்தந்தம் போல அமைந்தவை என எண்ணிலடங்காப் பாறைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/rock.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குகையின் மொத்த நீளம் பதினோரு கிலோமீட்டர்கள் . ஆனால் பாதுகாப்புக்காரணம் கருதி , சுமார் நான்கு கிலோமீட்டர் நீளக்குகைதான் பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.குகை முழுவதும் சுற்றுவதற்கு மரத்திலமைக்கப்பட்ட சிறு சிறு படிகள் , சில இடங்களில் ஏறுவதற்கும் சில இடங்களில் இறங்குவதற்கும் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் 400 படிகள் உண்டு. சில இடங்களில் குறுக்கிடும் சிறு நீரோடைகளைக் கடப்பதற்கு குறுகிய மரப்பாலங்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பல தகவல்களுடன் அடுத்த பதிவிலும் குகை பற்றி எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-108802692752263816?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/108802692752263816/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=108802692752263816' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108802692752263816'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108802692752263816'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/06/1_23.html' title='ஹன்ஸ் குகைகள் - 1'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-108768436504968563</id><published>2004-06-20T01:32:00.000+02:00</published><updated>2005-02-06T14:33:12.553+01:00</updated><title type='text'>டக்கவ் மரண முகாம் - 2</title><content type='html'>டக்கவ் முகாமைக் காண நாங்கள் வழிகாட்டியின் துணையுடன் கூடிய (Guided Trip) உலாவினைத் தேர்ந்தெடுத்திருந்தோம். வழிகாட்டியும் இடங்களைப் பற்றி நன்றாகக் குறிப்புகள் கொடுத்ததுடன் அது தொடர்பான மற்ற தகவல்களையும் கூறிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிட்லரைக் கொலை செய்வதற்கு பதினேழு முயற்சிகள் அவரது ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப் பட்டனவாம், அவற்றைத் தவிர , ஹிட்லர் தப்பித்த மற்றொரு சுவையான சம்பவமும் உண்டு. தனியொருவனாய்த் திட்டமிட்டு ( The Lone Assasin) வெடிவைத்துக் கொல்ல சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் எல்ஸர் என்பவரின் முயற்சியே அது. மியூனிக் நகரினில் உரை நிகழ்த்த ஒவ்வொரு வருடமும் ஹிட்லர் வருவது வழக்கம். அந்த நிகழ்ச்சியினைத் தன் திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டார் எல்ஸர். ஹிட்லர் உரை நிகழ்த்தவிருந்த மண்டபத்தினைச் செப்பனிட உதவும் தச்சு வேலை செய்பவராகச் சேர்ந்தார். பிறர் அறியாவண்ணம், மேடையின் அருகிலிருந்த தூணிற்குள் நேரவெடி (டைம் பாம்) ஒன்றினை மறைத்துவைத்தார். இந்த வெடியை உருவாக்க சுமார் ஒரு வருடகாலம் முயற்சி செய்ய வேண்டியிருந்ததாம். சம்பவ தினத்தன்று , ஹிட்லரும் வந்தார். மண்டபத்தில் உரையாற்றவும் ஆரம்பித்தார். நம்மூர் அரசியல்வாதிகளைப் போலவே ஹிட்லரும் மணிக்கணக்காய்ப் பேசுவதில் ஆர்வம் கொண்டிருந்தவர். எனவே அவர் வெகுநேரம் பேசுவார் என்று கருதி, எல்ஸர் அவர் பேச ஆரம்பித்து ஒரு மணி பத்து நிமிடங்கழித்து வெடிகுண்டு வெடிக்க கடிகாரத்தில் நேரம் அமைத்திருந்தார். ஆனால் நிகழ்ந்தது வேறு. அன்றைய வானிலை சரியில்லாததால்,பெர்லினுக்கு விமானத்தில் செல்வதற்குப் பதிலாய் இரயிலில் செல்ல ஹிட்லரின் பயணத் திட்டம் மாற்றியமைக்கப் பட்டிருந்தது. எனவே அவர் ஒரு மணி நேரத்திற்குள் தனது உரையை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். ஹிட்லர் புறப்பட்ட பன்னிரெண்டு நிமிடங்களில் குண்டு வெடித்துச் சில உயிர்களைப் பலி கொண்டது. எல்ஸரும், சுவிட்சர்லாந்து நுழைய பயணம் செய்யும்போது ஜெர்மனியின் எல்லையில் கைது செய்யப் பட்டு ஒரு மரண முகாமில் அடைக்கப் பட்டார். சில ஆண்டுகள் கழித்துக் கொல்லப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டக்கவ் முகாமில் அடுத்ததாக நாங்கள் கண்டது கொல்லப் பட்டவர்களை எரிக்கும் எரியறைகள். உடல் வலு குறைந்து இறந்தவர்கள், சித்திரவதையினால் இறந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டவர்கள் எனப் பலவகைப் பட்டவர்களையும் எரிக்க இவை பயன்படுத்தப் பட்டன. தினசரி ஏராளமானவர்களை எரிக்க வேண்டியதிருந்ததால் இந்த அறைகள் இராப்பகலாய் புகைந்தவண்ணமிருந்தன. பின் வந்த நாட்களில் சாவு எண்ணிக்கை அதிகரித்தது . மேலும் எரிபொருள் ( நிலக்கரி) கையிருப்பும் குறையவே இறந்தவர்களை பிணவறையில் மலை போல் குவிக்க ஆரம்பித்தனராம் காவலர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/dachau-krematorium-2.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறைகளுக்கு அருகில் விஷவாயு அறையும் உண்டு. கைதிகளை மொத்தமாக இந்த அறைக்குள் அடைத்துவைத்து விஷ வாயுக்களை அறைக்குள் புகுத்திக் கொல்ல இவை அமைக்கப்பட்டன. ஆனால் டக்கவ்-விலிருந்த இந்த விஷவாயு அறை பயன்படுத்தப் படவில்லையாம்.விஷவாயு அறைகளுக்கு அருகில் தூக்கு மேடைகள் அமைக்கப் பட்ட இடங்களும் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடங்களைத் தவிர புகைப்படங்களின் தொகுப்பு அடங்கிய ஒரு காட்சியகமும் உண்டு. 1900 க்குப்பின் ஜெர்மனியில் நிகழ்ந்த நிகழ்வுகளின் பதிவு அது. ஹிட்லரின் கட்சி வளர்ந்த விதம், ஹிட்லரின் வெற்றி, அவரது பதவி ஏற்பு என அனைத்து நிகழ்வுகளையும் கண்முன் நிறுத்தும் புகைப்படங்களை இங்கு காணலாம். இந்த முகாமின் நிகழ்வுகள் பற்றியும் விரிவான புகைப்படங்களின் தொகுப்பும் உண்டு. கண்ட சில புகைப்படங்களில் மனம் பதைத்தது. ஹிட்லர் காலத்து மருத்துவர்கள் தங்களது சோதனைகளுக்கு இம்முகாமிலிருந்த கைதிகளைப் பயன்படுத்திக் கொண்டனராம். மனித உடல் தாங்கும் குறைந்தபட்ச வெப்பநிலை எவ்வளவு என்ற சோதனையா? ஒரு கைதியைப் பிடித்து சோதனை அறையில் அடைத்து விடுவார்கள். சோதனை அறையின் வெப்பநிலையைக் குறைத்துக் கொண்டே வந்து இறுதியில் உள்ளே அடைக்கப்பட்டிருக்கும் கைதி இறக்கும் வரை சோதனை தொடரும். கைதியின் எதிர்வினைகளை ஒவ்வொரு நிலையிலும் படம் பிடித்து கடைசியில் சோதனை முடிவுகளை ஹிட்லரின் காவல்தலைவர் ஹிம்லருக்கு அனுப்புவார்களாம். மனித உடல் தாங்கும் குறைந்த அழுத்தம் எவ்வளவு என்று பரிசோதனை செய்யவும் கைதிகள் பயன்படுத்தப்பட்டனர். பல்வேறு நிலைகளில் மருத்துவர்கள் பதிவு செய்த புகைப்படங்கள் இங்கே காண்பதற்கு மனதை உலுக்கும். கைதிகளைக் காவலர்கள் இரக்கமின்றித் தண்டிக்கும் படங்கள் , இறந்தவர்களை மலை போலக் குவித்திருக்கும் புகைப்படங்கள் , இறுதியில் நேச நாட்டுப் படைகள் வந்து கைதிகளை விடுவித்தவுடன் ஏற்பட்ட சந்தோஷங்களை வெளிப்படுத்தும் படங்கள் என நிறைய புகைப்படங்கள் இங்கே காணக் கிடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாக் குகைகளின் முடிவிலும் வெளிச்சம் தோன்றுவதைப் போல் டக்கவ் முகாமில் உயிரோடிருந்த மற்றும் சித்திரவதைகளிருந்து உயிர் பிழைத்த கைதிகளுக்கும் ஒருநாள் விடுதலை வந்தது. இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் வெற்றி பெற்று ஜெர்மனிக்குள் முன்னேறினர். ஒவ்வொரு முகாமல் அடைக்கப் பட்டிருந்தவர்களையும் அவர்கள் விடுவித்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்தனர். டக்கவ் முகாமிற்கு வந்த நேச நாட்டுப் படையினரின் முதல் வேலை அவர்களுக்கு வயிறார உணவு தயாரித்து அளிப்பதாயிருந்தது. மகிழ்ச்சி மிகுதியில் பல ஆண்டுகளுக்குப் பின் வயிறார உணவு உண்ட பல கைதிகள் , அவ்வுணவு வயிற்றுக்கு ஒவ்வாமல் மரணித்த சம்பவங்களும் நிகழ்ந்தனவாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/slaves.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்படங்கள் அடங்கிய காட்சியகத்திற்கு அருகில் ஒரு சிறிய திரையரங்கும் உண்டு. முப்பது நிமிடக் குறும்படம் இங்கு திரையிடப் படுகிறது. ஹிட்லர் பதவி ஏற்கும் காட்சியுடன் தொடங்கும் இக் குறும்படம் அதற்குப் பின் நிகழ்ந்த கொடுமைகளை நம் கண்முன் நிறுத்துகிறது. இறுதியில் இம்முகாமில் அடைபட்டிருந்தவர்கள் விடுதலையாவதுடன் நிறைவடைகிறது இப்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;மியூனிக் நகர் வரும் அனைவரும் இந்த முகாமிற்கு வந்து வரலாற்றின் பக்கங்களைச் சற்றுப் புரட்டிப் பார்த்துவிட்டுச் செல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-108768436504968563?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/108768436504968563/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=108768436504968563' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108768436504968563'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108768436504968563'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/06/2_20.html' title='டக்கவ் மரண முகாம் - 2'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-108728731391375917</id><published>2004-06-15T10:14:00.000+02:00</published><updated>2005-02-06T14:27:20.160+01:00</updated><title type='text'>டக்கவ்  மரண முகாம் - 1</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/germany.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்மனியின் மியூனிக் நகரிலிருந்து இருபது நிமிட இரயில் பயணம் செய்தால் டக்கவ் (Dachau) எனும் சிறிய புறநகர்ப்பகுதியை அடையலாம். மிக அமைதியான அந்த இடத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சின்னம் இரத்தத்தை உறைய வைக்கும் செய்திகள் நிறைந்தது. ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தரவுச்செறிவு முகாம்கள் நிறுவப்பட்ட இடங்களுள்(Concentration Camps) டக்கவ்- வும் ஒன்று. நாம் சற்றுப் பின்னோக்கிப் பயணித்து ஹிட்லரின் காலத்திற்குச் செல்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;1933-ல் ஜெர்மனியின் அதிபராக முடிசூட்டிக்கொண்டவுடன் தனது அரசியல் எதிரிகளையும், தன்னை எதிர்ப்பவர்களையும் ஒடுக்க நினைத்து , ஹிட்லர் ஆரம்பித்த சிறைகள்தாம் இந்தச் செறிவு ( அல்லது கட்டுப்பாடு) முகாம்கள். ஹிட்லரின் முதன்மைக் காவல்துறை அதிகாரியான் ஹிம்லர் இந்த முகாம்கள் அமைவதில் பெரும்பங்கு வகித்தவர். ஜெர்மனியின் பல இடங்களில் முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டு , ஜெர்மனியின் சிறப்புக் காவல்படையான Schutzstaffel (SS- State within State) இம்முகாம்களில் சிறைவைக்கப் பட்ட கைதிகளைக் கண்காணித்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சுமார் ஐயாயிரம் கைதிகள் மட்டும் அடைக்கப் பட்டனர் . பின்னர் பல நாடுகளைச் சேர்ந்த யூதர்கள், போர்க்கைதிகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போனது. டக்கவில் உள்ளது சற்றுப் பெரிய முகாம்தான். இந்த முகாமைச் சுற்றிலும் பெரிய கோட்டைச் சுவர்,யாரும் தப்பிச் சென்றுவிடாதபடி அதை ஒட்டிய அகழி , மேலும் மின்சார வேலியும் உண்டு. யாரும் தப்ப முயன்றால் மின்சாரம் தாக்கி மரணம்தான். சித்திரவதை தாங்க முடியாத கைதிகள் பலர் தாமே ஓடிவந்து மின்சார வேலியில் விழுந்து உயிர் துறப்பது அன்றாட நிகழ்வுகளில் ஒன்று. ஏழு உயரமான கண்காணிப்புக் கோட்டைகள். அதனுள் அமர்ந்து கொண்டு காவலர்கள் இரவும் பகலும் கைதிகளின் நடவடிக்கைகளைக் கவனித்து வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/ditch.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முகாமின் நுழைவாயில் ஒரு பெரிய இரும்புக் கதவு.அதில் " Arbeit Macht Frei" என்ற ஜெர்மன் வாசகம். அதன் பொருள் " வேலை செய்வதே சுதந்திரம்".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/Gate.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெரிய திறந்தவெளி மைதானம்.கைதிகள் தினமும் அந்த வெட்டவெளியில் நிறுத்தப்பட்டு வருகைப்பதிவு போல இருப்புப் பதிவு நடத்தப்படும். தினமும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடுங்குளிரைப் பொறுத்துக் கொண்டு கைதிகள் நிற்க வேண்டும். பலர் சோர்வடைந்து விழுவதுண்டு. சிலர் இறந்து போவதுமுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/roll-call.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கைதிகள் அனைவரும் ஓயாது உழைக்க வேண்டும். ஹிட்லரின் படைகளுக்குத் தேவையான ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஆயுதத் தயாரிப்பில் கடினமான வேலைகள் கொடுக்கப் பட்டன. சாலைகள் அமைப்பது போன்ற வேலைகளும் உண்டு. எவ்வளவு வேலை செய்தாலும், கைதிகளுக்கு குறைந்த உணவே அளிக்கப்பட்டது. அதாவது, " எதிரிகளைச் சிறைப்படுத்து; அவர்களுக்குக் குறைந்த உணவளி ; அவர்கள் உடலில் மிஞ்சியிருக்கும் ஒரு சொட்டு சக்தி தீரும் வரை வேலை கொடு ; அவர்களின் உடல்வலு தீர்ந்து உபயோகமில்லாமல் போனால் கொன்று விடு" என்பதே ஹிட்லரின் காவலாளிகளுக்கு இடப்பட்டிருந்த எழுதப்படாத விதி.&lt;br /&gt;&lt;br /&gt;மைதானத்தை ஒட்டி நீளமாய்ப் பல அறைகள்-கைதிகள் இரவில் தங்குவதற்கு. குளிர்காலங்களில் அறையைக் கதகதப்பாக்கும் வெப்பமூட்டுவான்கள் (Heaters) இல்லை. குளிரில் நடுங்கியபடிதான் கைதிகள் தூங்கவேண்டும். படுப்பதற்கு மரத்தில் அமைக்கப் பட்ட மரப் படுக்கைகள்.ஒன்றின் மேல் ஒன்றாக மூன்றடுக்குக் கட்டில்கள்( நம்மூர் ரயில்களில் உள்ளது போன்று). ஒரு கட்டிலில் மூன்று பேர் படுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு பேர் படுத்தாலே சிரமமாயிருக்கும் அக்கட்டிலில் மூன்று பேர் படுத்தால் எப்படி இருக்கும்? பின் வந்த நாட்களில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க நெரிசலும் அதிகமானது. இரவு வேளைகளில் கைதி அறைகளில் சத்தமோ சச்சரவோ ஏற்பட்டால் அவ்வளவுதான். சம்மந்தப்பட்ட அனைவரும் இரவு வேளையை அறைக்கு வெளியே குளிரில் நடுங்கிக் கொண்டே கழிக்கவேண்டியிருக்கும் அல்லது காவலாளியின் முள்தடிக்கு (இரும்பால் ஆனது) முதுகு காட்ட வேண்டியிருக்கும். படுக்கையறைகளை ஒட்டி குளியலறை மற்றும் கழிப்பறை. அவர்கள் பயன்படுத்திய குளியல் தொட்டிகள் சிதைந்த நிலையில் இன்னும் இருக்கிறது. சில வேளைகளில் கைதிகளாய் அடைபட்டிருந்தவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளவும் அத்தொட்டிகள் பயன்படுத்தப் பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v230/emayil/prison-bed.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறைகளுக்குச் சற்றுத் தொலைவில் பதுங்கு அறைகள் (Bunker Rooms) நிறைய இருந்தன. இந்த அறைகள் வி.ஐ.பி கைதிகளுக்கு. பாதிரியார்கள் , எதிக்கட்சித் தலைவர்கள் போன்றோருக்கான சிறை இது. நமது ஊர்ப் பேருந்து நிலையங்களிலோ இரயில் நிலையங்களிலோ நாம் காணும் கழிவறைகளை விடச் சற்றுப் பெரியவை. இவ்வறைகளுக்கு சன்னல் கிடையாது . நாள் முழுக்க இருட்டுதான். இந்தவகைச் சிறையில் அடைக்கப் பட்டவர்கள் வேலை செய்ய வேண்டுமென்ற கட்டாயமில்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறை வழங்கப் படும் சிறு உணவை உண்டுவிட்டு இருட்டறைகளிலேயே அடைந்துகிடக்க வேண்டும். இவர்களின் உறவினர்கள் வந்து பார்த்துவிட்டுச் செல்ல எப்போதாவது அனுமதிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-108728731391375917?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/108728731391375917/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=108728731391375917' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108728731391375917'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108728731391375917'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/06/1_15.html' title='டக்கவ்  மரண முகாம் - 1'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-108699531648648933</id><published>2004-06-12T01:08:00.000+02:00</published><updated>2004-06-13T17:16:36.546+02:00</updated><title type='text'>சில குறிப்புகள்</title><content type='html'>1.பீஹாரிலிருந்து திரும்பி வந்து சென்னையில் இரண்டு மாதங்கள் R&amp;D  செய்துகொண்டிருந்தேன். மறுபடியும் பீஹார் செல்ல மேலதிகாரி உத்தரவிட்டபோது செல்ல விருப்பமில்லை என்றேன். போய்த்தான் ஆகவேண்டும் என்றார். வேறு வழியில்லாமல் நான் கம்பெனியை விட்டு போக வேண்டிய வழிகளில் இறங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2.உடன் பயின்ற கல்லூரித் தோழி அவள் வேலை செய்யும் நிறுவனத்தில் என்னைப் ப்ற்றிய விபரங்களைத் தரவும், நான் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப் பட்டேன்.இரண்டு நேர்காணல்கள் முடிந்து இறுதியாய் அந்நிறுவனத்தின் R&amp;D பிரிவு ( அங்கேயும் R&amp;D) பொது மேலாளரிடம் மற்றுமொரு நேர்காணல்.தேர்ந்தெடுக்கப்பட்டால் நிறைய பயணம் செய்ய வேண்டுமென்றார். நான் எனது பிஹார் பயணம் பற்றிக் கூறினேன்.அவர் சிரித்துக் கொண்டே, "பிஹாருக்கெல்லாம் அனுப்பமாட்டோம், டெல்லிக்குப் போகவேண்டியிருக்கலாம்" என்றார்.ஜெர்மனிக்குப் போகவேண்டும்  என்று சொன்னால் நான் பயந்துவிடுவேன் என்று அவர் எண்ணியிருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;3.நேர்காணல் முடிவை உடனே சொல்ல வெண்டும் இல்லையெனில் நான் பிஹார் சென்றுவிடுவேன் என்று சொன்னேன்(மிரட்டினேன்). உடனே சொன்னார்கள் . அடுத்த பத்து நாட்களில் அந்த நிறுவனத்தில் சேர்ந்தேன் ( இன்னமும் அங்கு தான் பணி புரிகிறேன்).&lt;br /&gt;&lt;br /&gt;4.சேர்ந்த சில நாட்களிலேயே உடல் நிலை மறுபடியும் குன்றியது. குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு என்றார்கள். இரண்டு மாதங்கள் அலுவலத்திலேயே ஓய்வு தந்தார்கள் (cool-off period). அதாவது அலுவலகம் வந்து செல்ல வேண்டும். அதுதான் வேலை&lt;br /&gt;&lt;br /&gt;5.உடல் நிலை தேறியதும், அடுத்த மாதமே பயணம் மேற்கொண்டேன் . ஜெர்மனியின் மியூனிக் நகர் என்னை வரவேற்றது.மூன்று மாதங்களுக்கு ஜெர்மனி.முதல் வெளிநாட்டுப் பயண ஆச்சரியங்கள் முடிவதற்குள் திரும்பினேன். &lt;br /&gt;&lt;br /&gt;6. அடுத்த மூன்று மாதங்களில் இரண்டாவது பயணம். இம்முறை ஓராண்டுக்கும் மேல்.சில நாடுகளைச் சுற்றும் வாய்ப்பு. மீண்டும் இந்தியா திரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;7. ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் மறுபடியும் ஜெர்மனி . அங்கு பணி முடிவடைந்ததும் தற்போது ஸ்வீடன். &lt;br /&gt;&lt;br /&gt;8. சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் , நெதர்லாண்ட்ஸ்( ஹாலந்து) , ஆஸ்திரியா, ப்ரான்ஸ், லக்ஸம்பர்க், நார்வே , டென்மார்க் போன்ற நாடுகளில் இதுவரை உலாவியிருக்கிறேன். பின்லாந்து மற்றும் போர்ச்சுகல்  பயணம் வெகு விரைவில். &lt;br /&gt;&lt;br /&gt;9.வலைப்பூ -வில் இரண்டு வாரங்களாக இப்பதிவினைப் பற்றி(ஊக்குவிக்கும் நோக்கில்) நல்ல கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டிருந்தன. அடுத்த பதிவிலிருந்து  ஐரோப்பிய பயணக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்து விடுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-108699531648648933?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/108699531648648933/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=108699531648648933' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108699531648648933'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108699531648648933'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/06/blog-post_12.html' title='&lt;strong&gt;சில குறிப்புகள்&lt;/strong&gt;'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-108681881992582937</id><published>2004-06-10T00:06:00.000+02:00</published><updated>2004-06-12T00:01:22.650+02:00</updated><title type='text'>லல்லுவின் ராஜ்ஜியத்தில் ஒரு மாதம் - 3</title><content type='html'>&lt;strong&gt;பா&lt;/strong&gt;ட்னாவின் வடகரையில் ஆர்ப்பரித்துக் கொண்டு ஓடுகிறது கங்கை நதி. பீஹாரை இருபுறமாகப் பிரித்து வைப்பதும் கங்கையே. நதியைக் கடந்து வடப்புறம் சென்றால் ஹாஜிபூர். நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆற்றுப் பாலம் உலகிலேயே நீளமான ஆற்றுப் பாலங்களில் ஒன்று.மஹாத்மா காந்தி சேடு(Setu) எனப்பெயர் சூட்டப்பட்ட பாலமிது.  சுமார் ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பாலத்தை தினசரி காலையிலும் மாலையிலும் கடந்து செல்வதே சுகானுபவந்தான். குறிப்பாக காலை வேளைகளில் செல்லும்போது ஆறு முழுவதும் பனிப்புகை போர்த்திக்கொண்டு இளஞ்சூரிய வெயிலில் குளிர்காய்வது இனிய காட்சி. இந்தப்பகுதியில்  நதியின் குறுக்கே இன்னும் இரயில் பாலம் எதுவும் கட்டப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நான் அங்கு தங்கியிருந்த நேரம் தேர்தல் திருவிழா நடைபெற்ற நேரம். தேர்தல் நடக்கும் தேதிகளில் கலவரங்கள் நிகழ வாய்ப்பிருப்பதால் விடுதியை விட்டு வெளியேற வேண்டாமென்று எங்களுக்கு அறிவுறுத்தப் பட்டிருந்தது.தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இரண்டு நாட்கள் அறைக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தோம்.ஒவ்வொரு சேனலாக மேய்ந்ததில் தட்டுப்பட்டது "ஹே ராம்". படம் வெளிவந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள்தானிருக்கும். அதற்குள்ளாக கேபிளில் திருட்டுத்தனமாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். நம்ம ஊர் போல்தான் இங்கும் என நினைத்துக் கொண்டேன்.தேர்தலின்போது நிறைய வன்முறைகள்தான். முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலவரத்தில் இறந்ததாகச் செய்தி அறிந்தோம். வழக்கம் போல் லல்லுதான் வென்றார். எவ்வளவு ஊழல் செய்தாலும் எத்தனை பேர் குறை சொன்னாலும் தானே  ராஜா என நிரூபித்தார். கடைக்குப் போய்த்திரும்பிய சகா லல்லுவைத் தெருவில் பார்த்ததாகக் கூறினான். வெற்றிக் களிப்பில் எல்லோருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தாராம்.அச்சமயம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட கல்லூரிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தனர். காரணம் என்னவென்றால்,மருத்துவம் படிக்கும் லல்லுவின் புதல்வி பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவியாய் ரேங்க் எடுத்ததாக அறிவித்ததுதான்.லல்லு இந்தப் போராட்டத்திற்கும் அசரவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அலுவல் நாட்களில் மதிய உணவிற்குப்பின் ஹாஜிபூரின் வீதிகளில் ஒரு சிறிய நடை மேற்கொள்வோம் . மிகவும் அழுக்கான வீதிகள், ஈ மொய்க்கும் பண்டங்கள், புழுதிபறக்கும் சாலைகள் என ஏமாற்றம் அளித்தன. தெரியாத்தனமாய் ஒருநாள் டீக்கடையொன்றில் தேநீர் பருக அமர்ந்தோம். அங்கே கொடுக்கப்பட்ட தேநீர் ஒன்றில் கோழி இறகு ஒன்று மிதந்துகொன்டிருந்தது. சில நாட்களுக்கு தேநீர் பருகுவதை மறப்பதென்று முடிவு செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்னாவிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் புத்தகயா இருந்தது. நாலந்தாவும் அருகில்தான். இவற்றையெல்லாம் பார்த்துவிடலாம் என்ற என் எண்ணத்தில் மண் விழுவதுபோல் உடல்நிலை சற்று மோசமாக ஆரம்பித்தது. முதலில் சிறிது காய்ச்சல் இருந்தது . நான் தங்கியிருந்த விடுதி வரவேற்பாளரிடம் கேட்டு அருகிலிருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றேன். பெரிய கூட்டம். என்னைப் பார்த்ததும் ஒருவர் ஏதோ கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மருத்துவரைப் பார்க்கவேண்டுமென்று ஆங்கிலத்தில் கூறினேன். நூறு ரூபாய் என்றார். எடுத்துக் கொடுத்த அடுத்த நிமிடம் நான் மருத்துவரைப் பார்க்க அனுமதிக்கப்ப்பட்டேன்.மருத்துவர் என்னை மதறாஸியா என்று கேட்ட வண்ணம் , வலிக்க வலிக்க இரண்டு ஊசிகள் போட்டார். ஏகப் பட்ட மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார். மீண்டும் மறுநாள் வரச் சொன்னார். பின்வந்த நாட்களில் உடல்நிலை இன்னும் மோசமானது. பயந்துபோன எனது மேலதிகாரி சென்னைக்குத் திரும்பிவிடச் சொன்னார்.உடல்நிலை உடனே கொஞ்சம் சீரானது. இதற்குள்  எனது மூத்த சகா திரு. இரத்தினம் பிகார் வந்து சேர்ந்தார். அடுத்த வாரம் பயணம் உறுதிசெய்யப் பட மீண்டும் ஒன்றரை நாள் (தனியாகப்) பயணம் செய்து சென்னைப் பட்டணம் திரும்பினேன்.  வேலையும் அரைகுறையாய் முடித்து , ஒழுங்காய் ஊர் சுற்றவும் முடியாமல் எனது பிஹார் பயணம் பயனின்றி முடிவுக்கு வந்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-108681881992582937?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/108681881992582937/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=108681881992582937' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108681881992582937'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108681881992582937'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/06/3.html' title='&lt;strong&gt;லல்லுவின் ராஜ்ஜியத்தில் ஒரு மாதம் - 3&lt;/strong&gt;'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-108664621834672786</id><published>2004-06-08T00:10:00.000+02:00</published><updated>2004-06-09T21:35:41.113+02:00</updated><title type='text'>லல்லுவின் ராஜ்ஜியத்தில் ஒரு மாதம் - 2</title><content type='html'>&lt;strong&gt;பீ&lt;/strong&gt;காரின் தலைநகரம் பாட்னாவை அடைந்தபோது ஒன்றரை நாட்களுக்கு மேலேயே ஆயிருந்தது. எனது சகா பாபு எங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஜன நெரிசலில் நீந்தி இரயில் நிலையம் விட்டு வெளிவந்தோம். நிலையம் மிகவும் அழுக்காய் இருந்தது. "எங்கெங்கு காணிணும் சக்தியடா" என்று பாரதி பாடியது போல் "எங்கெங்கு காணிணும் புகையிலை எச்சிலடா" எனப் பாடத் தோன்றியது. சுவர்களில் , இரு சுவர்கள் சந்திக்கும் மூலையில், படிச்சுவர்களில் என எங்கும்  சிவப்புச்சாறு. "இதெல்லாம் கண்டுக்காத நைனா" என்றான் பாபு.&lt;br /&gt;&lt;br /&gt;இரயில் நிலையத்தின் வெளியே ஆட்டோக்களின் அணிவகுப்பு. நிறைய சைக்கிள் ரிக்க்ஷாக்களும் காணமுடிந்தது.ஒரு ஆட்டோவில் ஏறி எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த விடுதிக்குப் பயணம் ஆரம்பித்தோம். அவ்வளவுதான். என் எலும்புகள் இடம் மாற ஆரம்பித்தன. சென்னையின் ஆட்டோக்களுக்கு ஓரளவு பழகியிருந்தாலும் பாட்னாவின் சாலைகள் படுபள்ளமாயிருந்தன. ஒரு மாநிலத் தலைநகரின் இரயில் நிலையச் சாலை இவ்வளவு மோசமாக நான் பார்த்ததில்லை. கடந்த தேர்தலில் நமது லல்லு என்ன சொல்லியிருந்தார் தெரியுமா? " பீஹார் மாநிலச் சாலைகளை ஒரு நடிகையின் முகம்  பளபளப்பது போல் மிளிரச் செய்வேன்".விடுதி சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம். ஆட்டோவுக்கு எவ்வளவு ஆயிற்று தெரியுமா? தலைக்கு மூன்று ரூபாய் என்று ( நாங்கள் மூன்று பேர்) ஒன்பது ரூபாய். எனக்கு ஆச்சரியமாகத்தானிருந்தது. சென்னையிலிருந்து  யாரும் பாட்னாவிற்கு ஆட்டோ ஓட்டிப் பிழைக்க வரவில்லை என நினைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதி வசதியாகத்தானிருந்தது. அறையிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் அனைத்து வகை சாடிலைட் சேனல்களும் வந்தன. தமிழும் இருந்தது. அகபேசியில்(intercom) சொன்னவுடன் ,விடுதியுடன் இணைக்கப் பட்டிருந்த உணவகத்திலிருந்து உணவும் விரைவாகக் கிடைத்தது. நாங்கள் பணிபுரியச் செல்லவேண்டியிருந்த இடமான ஹாஜிபூரில் உணவகங்கள் சரியில்லை என்பதால் மதிய உணவும் இங்கிருந்தே எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஹிந்தி எனக்குத் தெரியாது. எனவே எல்லா இடங்களிலும் திணறினேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஹாஜிபூர் - பாட்னாவிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஒரு சிறு நகரம். சாலைகள் புதிதாயிருந்தன. பாட்னாவிலிருந்து ஹாஜிபூர் செல்ல சரியான அரசுப் பேருந்துகள் இல்லை. தனியார் பேருந்துகள்தான். பயணச் சீட்டு தரமாட்டார்கள். நடத்துனர் என்று சொல்லக் கூடிய ஒருவர் வந்து பேருந்திலமர்ந்திருக்கும் அனைவரிடமும் பணம் வாங்கிச் செல்வார். பயணச்சீட்டின் விலை சில நாட்களில் வேறுபடும். இருக்கை கிடைக்காமல் நின்றுகொண்டே பயணிப்போர் சில சமயம் நடத்துனரிடம் " உட்கார்ந்து பயணம் செய்தாலும் நின்றுகொண்டே பயணம் செய்தாலும்  ஒரே ரேட்தானா? குறைந்த பணமே தரமுடியும்" என்றுகூறி விவாதத்தில் ஈடுபடுவர். எனக்கு அரைகுறையாய்ப் புரியும். நடத்துனர் இதற்கு ஒத்துக் கொள்ள மறுத்து " இந்த வண்டிக்கு நான் கண்டக்டரா, இல்ல நீயா" என்று எதிர்வாதம் புரிவார். அவ்வப்போது அடிதடியும் உண்டு. ஓட்டுனரும் தன் பங்கிற்கு , பேருந்தைச் சற்று ஓரங்கட்டிவிட்டு அடிதடியில் இறங்கும் வழக்கமும் உண்டு. பேருந்து புறப்படும் நேர அட்டவணையும் கிடையாது. வரிசையாகப் பேருந்துகள் வந்து நிற்கும். முதலில் நிற்கும் வண்டியுள் ஏறிக்கொள்ள வேண்டும். வண்டி நிரம்பியதும் கிளம்பி விடவேண்டும். ஓட்டுனர் சற்றுத் தாமதித்தால் அவ்வளவுதான். அடுத்த வண்டியின் நடத்துனர் வசை பாடிக்கொண்டே முன் நிற்கும் வண்டியைத்தட்டி இசை போடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்தில் செல்லப் போரடித்தால் நாங்கள் ஆட்டோவில் பயணிப்போம். சென்னையில் ஓடும் ஷேர் ஆட்டோக்கள் போல்தான் இருந்தன. ஆனால் மிகவும் குறுகலாக இருந்தன. ஐந்து பேர் மட்டும் செல்லக்கூடிய அந்த வண்டியுள் குறைந்தது எட்டுப்பேரைத் திணித்துக் கொண்டு செல்லுவர். இப்படியெல்லாம் நாங்கள் அவதியுறுவதை அறிந்த எங்கள் மேலதிகாரி ஒரு மகிழ்வுந்தை ( அட, கார் தாங்க!) வாடகைக்கு அமர்த்திக்கொள்ளச் சொல்லிவிட்டார். &lt;br /&gt;ஹாஜிபூரின் மையத்தொலைபேசி இணைப்பகத்தில் தான் எங்களது CDMA நெட்வொர்க் அமைக்கப்பெற்றிருந்தது. இதன் மூலம் ஹாஜிபூரைச் சுற்றிலும் 20 கிலோமீட்டர் வரை செல்பேசிச் சேவை அளிக்கமுடியும். அதன் செயல்பாட்டைச் சோதிக்க , அடர்ந்த காடுகளுக்கு மத்தியலமைந்த கிராமங்களுக்கும் செல்ல வேண்டியிருந்தது. திருடர்பயம் நிறைந்த பகுதி அது. காரில் சென்றால் வழிமறித்து , சட்டை, பேண்ட் உட்பட அனைத்தையும் பறித்துக் கொள்ளும் திருடர்கள் இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-108664621834672786?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/108664621834672786/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=108664621834672786' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108664621834672786'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108664621834672786'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/06/2.html' title='&lt;strong&gt;லல்லுவின் ராஜ்ஜியத்தில் ஒரு மாதம் - 2&lt;/strong&gt;'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-108629698722687581</id><published>2004-06-03T23:07:00.000+02:00</published><updated>2004-06-03T23:12:32.386+02:00</updated><title type='text'>லல்லுவின் ராஜ்ஜியத்தில் ஒரு மாதம் - 1</title><content type='html'>"&lt;strong&gt;எ&lt;/strong&gt;ன்னடா இவன், ஐரோப்பிய நாடுகளைப் பத்தி எழுதப்போறேன்னு சொல்லிட்டு லல்லு தேசம்னு ஆரம்பிச்சுட்டான்"னு பாக்குறீங்களா? புத்தகங்களில் முன்னுரை வருவதுபோல் இதுவும் ஒரு முன்னுரை . சற்றுப்  பெரிய முன்னுரை.  நான் ஐரோப்பா செல்லக் காரணமாயிருந்த நிகழ்வு இது என்று கூடச்சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது நான் பணிபுரியும் நிறுவனத்தில் இணைவதற்கு முன் சென்னையில் இருக்கும் ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் பொறியியல் பயிற்சியாளனாக (Engineer Traninee) அலுவல் செய்து கொண்டிருந்தேன். R &amp; D பிரிவில் வேலை . எனவே தினமும் R&amp;D தான் (Reading and Dreaming) . செல்பேசியின் பயன்பாடு பரவலாகப் பிரபலமாகத் துவங்கிய நேரம். CDMA -WLL (wireless local loop) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தற்போது சென்னையில் Reliance  நிறுவனம் அளிக்கும் சேவை இந்த CDMA வகைதான். GSM போல்  CDMA -யும் ஒரு கம்பியில்லா தொழில் நுட்பமே (wireless technology). ஐரோப்பிய நாடுகளின் கண்டுபிடிப்பு GSM . CDMA  அமெரிக்கர்களின் தொழில் நுட்பம். &lt;br /&gt;GSM சேவைகளுக்கு இந்தியாவில் அனுமதி தந்தபின் CDMA நெட்வொர்க்குகள் பற்றியும் நமது அரசு யோசித்தது. குறிப்பாக கிராமப் புறங்களுக்கு CDMA மிகச் சிறந்த தொலைபேசித் தீர்வாகும். இதைச் சோதனை செய்து பார்க்க எங்கள் நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்தது. நகரம் ஒன்றிலும் கிராமம் ஒன்றிலும் பரிச்சார்த்த அடிப்படையில் இரண்டு நெட்வொர்க்குகள் அமைக்க முடிவானது. சென்னையில் ஒரு சோதனை நெட்வொர்க் அமைத்து ஐந்து மாதங்கள் அதன் செயல்பாடுகள் ஆராயப் பட்டன. அப்போது கிடைத்த அனுபவங்கள் குறித்து ஒரு தொடர்கதையே எழுதலாம். வேறொரு சமயம் அது பற்றி எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் வேலைகள் முடிவடைந்தன. கிராமம்?  &lt;br /&gt;அப்போது தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் ராம் விலாஸ் பாஸ்வான். பீஹாரில் சோதித்துப் பார்க்கச் சொல்லிவிட்டார். எங்களுக்கு வந்தது சோதனை. பாஸ்வானின் தொகுதியான ஹாஜிபூரில் சோதனை நெட்வொர்க் அமைக்க முடிவானது. எனக்குக் கிலி பிடித்தது. லல்லுவின் ராஜ்யத்தில் ஒரேயடியாக ஆறு மாதங்களா? நல்ல வேளையாக , சுழற்சி முறையில் ஒரு மாதம் சென்னையிலும் ஒரு மாதம் பிஹாரிலும் பணிபுரிய எங்கள் மேலதிகாரி திட்டம் வகுத்தார். முதலில் எனது சகாக்கள் இருவர் சென்று வேலைகளை ஆரம்பித்தனர். அடிக்கடி எனக்கு தகவல்கள் அளித்தவண்ணம் இருந்தனர். நான் பயணம் மேற்கொள்ள வேண்டிய தேதி நெருங்கிக் கொண்டிருந்தது. பிஹாரில் மாநிலத் தேர்தல் நேரம் அது. நிறைய வன்முறைச் செய்திகள் பயமுறுத்தின. போதாக்குறைக்கு என் சகா வேறு , "இன்று ஒருவர் எங்களின் தொலைபேசி இணைப்பக அறைக்கு வந்து முதன்மைப் பொறியாளர் எங்கே என்று விசாரித்தார், அவரது உதவியாளர் கையில் துப்பாக்கி வைத்திருந்தார்" என்றெல்லாம் கூறி , என்னை விரைவாக வந்து சேரும்படி அன்பாக அழைப்பு விடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக நான் கிளம்பும் நாளும் வந்தது. நானும் எனது சகா மற்றொருவனும் கிளம்பினோம். சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் , வழியனுப்ப எனது நண்பர்கள் வந்திருந்தனர். அமெரிக்காவில் படிக்கும் நண்பன் நாரி( நாராயணன்), " எப்போதாடா பிஹார் போய்ச் சேர்வாய்?" என்று கேட்டான். குறைந்தது ஒன்றரை நாட்கள் என்றேன். அதற்குள் அவன் அமெரிக்கா போய்ச் சேர்ந்துவிடுவானென்று சொன்னான் ( அவனது பயணம் அன்று மாலையில்). லல்லுவிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு வரும்படி நண்பர்கள் கேட்டுக் கொண்டனர். அனைவரிடமும் விடைபெற்று இரயிலுள் அமர்ந்தேன். பிஹாரை நோக்கி வண்டி கிளம்பியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-108629698722687581?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/108629698722687581/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=108629698722687581' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108629698722687581'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108629698722687581'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/06/1.html' title='&lt;strong&gt;லல்லுவின் ராஜ்ஜியத்தில் ஒரு மாதம் - 1&lt;/strong&gt;'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7180711.post-108612914958450576</id><published>2004-06-02T00:09:00.000+02:00</published><updated>2004-07-30T15:08:01.333+02:00</updated><title type='text'>என்னைப் பற்றி..</title><content type='html'>எனது பெயர் எழில் மயில் வாகனன் ( பயந்து போகாதீங்க) . சுருக்கமாக எழில். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியலில் இளநிலைப் பட்டம். ( அதாங்க, B.E in Electronics and Communications) &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது பணி புரிவது கணினி சார்ந்த நிறுவனம் என்றாலும் செல்பேசி தயாரிப்பில் தான் வேலை (cellphone testing) . தற்காலிக வசிப்பிடம் ஸ்வீடன் . சென்ற வருடம் வரை ஜெர்மனி. அலுவலகம் சென்னையில் தான் உள்ளது . ஆயினும் அயல் நாடுகளிலேயே பணி தொடர்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் நான் சுற்றிய ஐரோப்பிய நாடுகளைப் பற்றி வலைபதிக்க ஆவல். முடிந்த வரை சுவையாக எழுத முயற்சிக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7180711-108612914958450576?l=ezhilulagu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ezhilulagu.blogspot.com/feeds/108612914958450576/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7180711&amp;postID=108612914958450576' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108612914958450576'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7180711/posts/default/108612914958450576'/><link rel='alternate' type='text/html' href='http://ezhilulagu.blogspot.com/2004/06/blog-post.html' title='&lt;strong&gt;என்னைப் பற்றி..&lt;/strong&gt;'/><author><name>எழில்</name><uri>http://www.blogger.com/profile/04643279867920259476</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry></feed>
